Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான
நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.
இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா
யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
நேற்று (21) இரவு 9.45 மணியளவில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்,அங்கிருந்து
தப்பியோடியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு
தப்பி ஓடியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு
மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு
மாகாண சபைகளை இல்லாமற் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அம்முறைமையில், ஏதாவது
பிரச்சினைகள் இருப்பின், அதனை திருத்தி, மாகாண சபை முறைமை, நாட்டுக்குள் பேணப்படவேண்டும் என்றார்.
மாகாண சபை முறைமை நீக்குவதற்கான முயற்சியை, முன்னாள் முதலமைச்சர் என்றவகையில், நானே முதலில் எதிர்ப்பேன் எனத்
தெரிவித்த அவர், மாகாண சபை முறைமை அமுலில் இருக்கவேண்டும் என்றார்.
கொக்கல ஏற்றுமதி வலயத்தில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்டும்
நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையானது இந்தியாவால் பலவந்தமாக
திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
“என்றாலும் நிர்வாக அதிகாரத்தை பிரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்” என்றார்.
“மாகாண சபைகளை “வௌ்ளை யானை” என குற்றம் சுமத்தினாலும் வேலைச் செய்யாதவர்களை முதலமைச்சர்
ஆசனங்களில் அமரவைத்தமையால், வேலைச் செய்யக்கூடிய திறமையானவர்களுக்கும் மாகாண சபைகள் ஊடாக வேலை செய்ய முடியாமல் போனது” என்றார்.
மாகாண சபைகளின் ஊடாக, சம்பளம் வழங்கப்படுகின்றமை கூடுதலான நிதி விரயமாக காட்டப்படுகின்றது. ஆனால், மாகாண
சபைகள் ஒழிக்கப்பட்டாலும் மாகாண சபைகளில் பணிபுரிந்த அந்த அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஊழியர்கள், அரச சேவைக்குள்
உள்வாங்கப்படுவர். அப்போது, அதேயளவான செலவையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் என்றார்.
எனவே, மாகாண சபைகள் என்ற வார்த்தை எவருக்கும் பிடிக்காமல் போகுமாயின், அதனை திருத்துவது பிரச்சினை இல்லையென்றும்
அதனை விடுத்து மாகாண சபைகளை நீக்குவது அதற்கான தீர்வு இல்லையெனத் தெரிவித்த அவர், அது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்
கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா
கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 257 பேர் ஓகஸ்ட் 02ஆம் திகதி கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில்
அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம்
கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது, 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை (19) 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கணவனை உயிரோடு எரித்த பெண் – முல்லைத்தீவில் நடந்த பயங்கரம்
கணவனை உயிரோடு எரித்த பெண் – முல்லைத்தீவில் நடந்த பயங்கரம்
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை
தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று, தனது பிள்ளைகளை பார்க்க வீட்டுக்கு
சென்ற கணவனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்
கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்
கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து விழுந்த 05 மாடி கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத சிசு உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு
குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்தது.
பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினர் பிற்பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டனர்.
இதேவேளை, கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதி
பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு
மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை
பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக
அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.
துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது
துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் வைத்து ஒருவரும்,
உடவலவை பகுதியில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் இன்று (19) அதிகாலை கைதானவர் 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உடவலவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்
கல்பொத்தயாய பகுதியை சேர்ந்த 48 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்ட புத்தளம் பயணம்
ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ நேற்று (19) புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம்
அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில்
மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த
பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து
கொடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன்,
இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும்
அமைத்துக் கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.
அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.
மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை
பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.
இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டன.
சாரதிகளுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் புதிய சட்டம்
இந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கொழும்பின் 4 பிரதான வீதிகளில்
அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்குவிதிகள் நாளையிலிருந்து
கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு நாளை (21) முதல் ஆலோசனை
வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி
பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி
கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி
கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து
வீழந்ததுள்ளதால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை
மாத குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால்,
மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இதன்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் இருவரைக் காணவில்லை
என்றும் இவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?
தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?
இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காதெனவும், அந்த திருத்தத்துக்கு எதிரான சகல
நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இருவதாவது அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க பிரஜையான ஒருவர் அமெரிக்க கொடியின் முன்பாக
சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஒருவர், இலங்கையிலுள்ள
சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட முடியுமெனவும் சாடினார்.
இந்த திருத்தத்துக்கு ஒருபோதும் 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதன தெரிவித்த அவர், அரசாங்கத்துக்குள் உள்ள
குழுவினரே 20 க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி 20
ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் அதற்கு
எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்ததெனவும், இனிவரும் காலங்களில்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் அந்த போராட்டம் தொடருமெனவம் தெரிவித்தார்
போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது
போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விசேட காவல்துறையினர்
நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது
அதிக போதையில் வாகனம் ஓடிய 249 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் 3,106 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,வீதி ஒழுங்கு நடவடிக்கைகளை
கட்டு படுத்தும் நகர்வில் இலங்கை போலீசார் தீவிரமாக செயல் பட்டு
வரும் நிலையில் இவ்விதமான கைதுகள் தொடராக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
அமெரிக்காவில் வீசா முடிவடைந்த பின்னர்
சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் மீள தாய் நாட்டுக்கு நெருப்பை வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு அனுப்ப பட்டவர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக வான் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?
முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?
இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு
பகுதியில் உள்ள இராணுவத்தின் ஐம்பத்தி ஏழாவது படையணியின்
முகாமில் முப்பத்தி ஐந்து வயதுடைய இளம் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளதாக இராணுவம்
தெரிவித்துள்ளது ,
காரணம் கொரனோவால் இறந்தார் என்ற செய்திகள் உள்ளூர பரவி வருகிறது
இவரது மரணம் தொடர்பில் உரிய முறை விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
முக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலை ஆணையாளரை பாதாள குழுவினரின் உதவியுடன் கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற
குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிலைச்சாலையின் சார்ஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன் சிறைச்சாலைக்குள் செய்துள்ள விஷமத்தனமான செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் அவரை வெளிகள
பணிகளில் அமர்த்துவதற்கு சிறைச்சாலை ஆணையாளர் தீர்மானித்திருந்ததாகவும், அதன் காரணமாக ஆணையாளரை
கொலைச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் தெரியவந்துள்ளது.
அதன்படி பாதாள குழு உறுப்பினரும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘ராமநாயக்க சுத்தா’ என்பவரின் உதவியுடனேயே
இந்த கொலை முயற்சியை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளதெனவும், இந்த திட்டத்தை ‘ராமநாயக்க சுத்தா’
என்பவர் தனது அடியாட்கள் இருவரிடத்தில் அழைபேசி மூலம் கூறிய பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயில் எரிந்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்
இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சில்லறை கடை, கோழி கடை தொடர்பாடல் நிலையம் ஆகிய
மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருள்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மண்சரிவு – இடிந்து வீழ்ந்த வீடுகள்
கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளது.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையால் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீடுகள், தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம்
ஏற்படவில்லை. எனினும், இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து
வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச
சபையின் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடும் எச்சரிக்கை
மீனவர்கள் நாளை (19) தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாக தேசிய இடர்காப்பு
முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் தாழமுக்க வலயம் காரணமாக, அதன் மத்திய, வடகிழக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடும
காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனைக்
கருத்திற்கொண்டு, இந்தக் கடற்பரப்புக்களில் தொழிலில் ஈடுபடும் கடற்கலங்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான
இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டின் பிரதான ஆறு பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன்
கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.







