Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்று வினவியபோது அது தொடர்பாக பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு 1 பில்லியன் கடன் வழங்கும் இந்தியா

    இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது.

    இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது.

    இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

    இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான
    பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ள

    Posted in இலங்கை செய்திகள்

    தீயில் எரிந்த பேரூந்து

    தீயில் எரிந்த பேரூந்து

    தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

    நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

    சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in இலங்கை செய்திகள்

    மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

    மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

    ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில்

    நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

    குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம்

    அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.

    மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத


    பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      பசில் மோடி சந்திப்பு

      பசில் மோடி சந்திப்பு

      இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

      இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் பசில் இன்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

        அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

        60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

        இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.

        சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

        கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

        இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியில் பொருளாதரம் பெரும் வீழ்ச்சியடைந்து செல்கிறது ,நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உளளது ,

        தனி சிங்கள மக்கள் பெரும் பான்மை பலத்தை பெற்று அரியணை ஏறிய கோட்டாவுக்கு இப்போது பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

        கோட்டாவே வீட்டுக்கு போ என மக்கள் வீதி இறங்கி கோசங்களை எழுப்பிய வண்ணம் செல்கின்றனர்

        இந்த போராட்டம் கோட்டாவுக்கு கொடுத்துள்ள மிக பெரும் சாட்டை அடியாக பார்க்க படுகிறது


        மகிந்தா ஆட்சி மீளவும் இலங்கையில் அரியணை ஏறிட முடியா நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

        • வன்னி மைந்தன் –
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்

          இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்

          இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்த நிலையில்


          அதன் மொத்த வருமானம் 500 மில்லியனாக அதிகரித்துள்ளது

          இலங்கையின் பொருளாதரம் வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையில் மீளவும் உலலாச

          பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இந்த வருமானம் அதிகரிக்கும் நிலைக்கு செல்வதான தோற்ற பாட்டை இலங்கை ஏற்படுத்துகிறது

          பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்ததன் பின்னர்


          இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

            இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்தும் அதிக விலை அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளது

            இவ்வாறான கால பகுதியில் மக்கள் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர்

            இலங்கையில் போர்க் காலத்தில் கூட இவ்விதம் பொருட்கள் விலை

            அதிகரிக்கபடவில்லை ,இவ்விதம் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை ,மகிந்த குடும்பம் ஆட்சியில்


            அமர்ந்த நாள் முதல் தற்போது இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளமை கவலை தருகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

              ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

              இலங்கை நிதி அமைச்சர் பசில் இந்தியாவுக்கு பறந்துள்ளார் ,


              இலங்கையின் நிகழ் கால நிகழ்வுகள் தொடர்பான நெருக்கடியை தணிப்பதற்கு மேற்படி கடனை பெற்றிட இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்

              சீனாவிடம் கடனை வாங்கி செலுத்திட முடியாத நிலையில் சிக்கிய இலங்கை தரப்பு தற்போது இந்தியாவிடம் சிக்கி தவிக்க போகிறது

              ஆளும் அரசின் மோசடியினால் இந்த நிலவரம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக

              நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

              கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

              இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்

              இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது

              மோடி வருகையை அடுத்து நடத்த படவிருந்த கண்துடைப்பு பேச்சும் திடீரென இரத்து

              புரிய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன்

                (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன் படுத்தும் குடிநீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

                இதில் பறவைகள், விலங்குகள் மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

                இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தரிடமும், தோட்ட முகாமையாளரிடமும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                எனினும், குறித்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் தோட்டத்தில் தொழில் செய்யாத

                படியால், இதை சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான பதிலை தெரிவிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                  கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                  இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் ஆட்சி காலத்தில் நாடு நாசமாக்க பட்டுள்ளது

                  ,இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பபோம் என கூறியவாறு எதிர்க்கட்சியினர் கொழும்பு பகுதியில் பெரும் பேரணி ஒன்றை நடத்துகின்றனர்

                  இலங்கையில் எதிர்க்கட்சி பலம் இழந்துள்ள நிலையிலேயே இவ்விதமான

                  செயல்பாடுகளை ஆளும் அரசு புரிந்து வருகிறது என்ற குற்ற சாட்டு முன்வைக்க

                  பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

                    .

                    இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

                    இலங்கையில் போர்க்களத்தில் சிங்கள அரச படைகளினால் வலிந்து காணாமல்

                    ஆக்கப்பட்ட உறவுகள் படுகொலை செய்ய பட்டன ,இவ்விதம் காணாமல்

                    போனவர்களுக்கு மரண சான்றிதழும் ,ஒரு லட்சம் பணமும் இலங்கை அரசு வழங்குகிறது

                    மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கொலை புரிந்த சிங்கள

                    ஆளும் அரசுக்கு மரண தணடனை வழங்க படவேண்டும் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                      மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                      இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

                      இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது .

                      இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

                      அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க,

                      இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

                      இவர்கள் அண்மையில் கட்டாரின் சர்வதேச தொடர்புகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் அப்துல்

                      அஸிஸ் அன்சாரியை சந்தித்து இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி

                        இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி

                        இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை

                        வெள்ளை வான் ஊடாக செல்வந்தர்கள் கடத்த படலாம் எனவும் அவர்கள் சொத்துக்கள்

                        அரசுடைமையாக்க படலாம் என்ற ஐயம் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது

                        வங்கிகளில் உள்ள பெரும் தொகை பணமும் முடக்கப்படலாம் என்பதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

                        வங்கிகளில் வட்டிக்கு பணம் வைப்பு வைத்துள்ள மக்கள் பணமும் அவசர தேவைக்காக

                        அரசு உடமையாக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது ,எதிர்வரும் நாட்களில் எதுவும் இலங்கையில் நிகழ கூடும் என்பது களநிலவரமாக உள்ளது

                        மேலும் பணத்தை மீள பெறுபவர்கள் தொகையும் கட்டு படுத்தப்படலாம் என உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

                          Posted in இலங்கை செய்திகள்

                          றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

                          றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

                          இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்

                          இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்

                          இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்

                          இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது

                            உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது

                            இலங்கை வென்னப்புவ பகுதியில் உள்ள உணவாக விருந்தகம் ஒன்றில் பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

                            அங்கு முப்பது வயதுக்கு உள்பட்ட வாலிபர்கள் இணைந்து விருந்து ,போதையில் மிதந்துள்ளனர்

                            உள்ளே நுழைந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் போதை பொருள் பாவித்துள்ளதும் ,
                            அதிக போதையில் இருந்துள்ளதும் கண்டறிய பட்ட நிலையில் 39 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு

                              இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு

                              இலக்கையில் மக்கள் அதிகம் பயன் படுத்தும் பேரூந்து கட்டணங்கள் இன்று இரவு முதல் இருபது ரூபாவினால் அதிகரிக்க படுகிறது

                              எரிபொருள் தட்ட பாடு காரணமாக இந்த திடீர் விலை உயர்வு அதிகரிக்க பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

                              நாள்தோறும் ஏற்ற படும் விலைவாசிகளினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,
                              ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் பொங்கி எழும்காலம் தற்போது உருவாகியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                தந்தையை குற்றி கொன்ற மகன்

                                தந்தையை குற்றி கொன்ற மகன்

                                இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு

                                கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்

                                வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்

                                ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்

                                இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

                                ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?