Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்
ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்
ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்.
இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு
பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்
வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் 27 வயதான நபரை பண்டாரவளை பொலிஸாரால் நேற்று கைது செய்யதுள்ளனர்.
குறித்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை (21) மாலை உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெளிநாட்டுப் பெண் புகையிரதத்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்து செல்லும் போது, புகையிரதத்திற்கு வெளியில் நின்ற இளைஞன் தனது செருப்பை அவர் மீது வீசியுள்ளார்.
இதன்போது, செருப்பு குறித்த பெண்ணின் முகத்தில் பட்டமை குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை
உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை
உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசையில் 901ஆவது இடத்தை பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இவ்வாறான தரவரிசையைப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம்
பேராதனை பலக்லைக்கழகம் எனவும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர தின விழா பெருமையுடன் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்ததாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ள செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்வது அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவ நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி
அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்
இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை தெரிவிப்பதாகவும் அந்த படகுகளின் வருகையை கட்டுப்படுத்த அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் வந்த போது கூட நாம் இதனைப்பற்றிப் பேசினோம். அதேபோன்று வெளிவிவகார அமைச்சிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அதிகாரிகளை அழைத்தும் கலந்துரையாடினோம்” என்று குறிப்பிட்டார்.
இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்
வடக்கிலுள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே தமது முதலாவது அக்கறை என்றும் எமது மீன் வளங்களை எதுவித ஆபத்துமில்லாது பாதுகாக்க வேண்டும் மற்றும் ஒரு நீண்டகால தெரிவு ஒன்று வரவேண்டும் என்றும் இவற்றை எப்படி செய்யலாம் என்ற பேச்சுக்களே இடம்பறுவதாக கூறினார்.
அந்தவகையில், தமிழக மீனவர்கள், இலங்கை பரப்புக்கு எவ்வளவு தூரம் வரலாம் என்பது குறித்து அனுமதிப்பத்திரம் வழங்குமாறு தெரிவித்துள்ளதுடன், அனுமதிப்பத்திரத்துக்கு பெறும் பணத்தை எமது மீனவர்களுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“எமது மீனவர்களின் தேவைகளுக்குத்தான் முதலிடம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் இலங்கை இந்தியாவுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியாது. என்ன நடந்தாலும் கூட 2000, 3000 படகுகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்.
இதனை தடுக்க முடியாது என்றே கடற்படையும் கூறுகின்றது. அதனால் இரு நாடுகளுக்கிடையில் நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்று ஒப்பந்தமொன்றுக்கு வரமுடியுமானால் அனுமதிப்பத்திரம்’வழங்க முடியுமென்றால் இந்திய கடற்படை மூலம் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
அதேவேளை, இழுவை மடி வலை மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் கலந்துரையாடல்கள்
இடம்பெறுமானால் நிச்சயம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான உங்களையும் அழைப்போம் என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை.
எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை.
இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு.
அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து|இலங்கை செய்திகள்
பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரவளை எடம்பிட்டிய வீதியின் உடமல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடமல்வத்த பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஒன்றின் பிரேக் செயலிழந்துள்ளது.
பின்னர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, லொறியில் 22 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் காயமடைந்து பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, தலங்கம,
கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்
மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்கள் பாணந்துறை அங்குருவாதோட்ட கெசல்ஹேனாவ பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மகசீன் என்பவற்றை திருடியதாக விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கிஸ்ங நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்
குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்
ஜெர்மனியில் இருந்து கிளிநொச்சி பரந்தன் சென்ற நபர்,
புரிந்த செயல் உலக மக்கள் மத்தியில் கொதிப்பை
ஏற்படுத்தியுள்ளது .
பரந்தனில் வீடு கட்டி வசித்து வந்த குடும்பம் ஒன்றின்
வீட்டை உடைத்து,அந்த குடும்பத்தை கடத்தி அடித்து
மிரட்டியுள்ளார் .
இந்த ஜெர்மன் தமிழரின் செயல் மனித நகரிகமற்றது என
மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்
வெளிநாட்டவர் காணியை அடாத்தாக பிடித்து ,
குறித்த குடும்பத்தினர் தங்கி வாழ்ந்த நிலையில்
ஆத்திரமுற்ற ஜெர்மன் தமிழன் இந்த செயலை,
புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாதிக்க பட்ட குடும்பத்தினரோ அது தமது காணி எனவும் ,
ஜெர்மன் தமிழர் அடாத்தாக தமது இரண்டு அறைகள் கொண்ட ,
வீட்டை புல்டோசர் மற்றும் 10 ரவுடிகளை கூட்டி வந்து உடைத்து ,
பிள்ளைகளை மூவரையும் கடத்தி சென்று காட்டில் வைத்து அடித்துள்ளதாக
தெரிவித்துள்ளார் .
இந்த காணொளியானது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ள இலங்கை| இலங்கை செய்திகள்
உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ள இலங்கை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஜனவரி முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதியில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் மூலம் அரசாங்கம் 1,033
பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
உள்நாட்டில் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு கடனை செலுத்த தவறிய அரசாங்கம் உள்நாட்டு
கடன் பொறியிலும் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்
21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும்
செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கஞ்சா செடிகள் சிக்கின| இலங்கை செய்திகள்
கஞ்சா செடிகள் சிக்கின | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பனாமுர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இதிகாட்டிய மற்றும் முள்எட்டியாவல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 50 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்
புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கை புத்தளம் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
ஒரு வினாடி மட்டும் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
பறவைகள் ,மயில்கள் என்பன பலமாக
கத்திய வண்ணம் இருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்|இலங்கை செய்திகள்
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்|இலங்கை செய்திகள்
நேற்று (21) மாலை 5.45 மணியளவில் மருந்துப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் புகை மூட்டத் தொடங்கியதையடுத்து, வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு அம்பலாங்கொடை பொலிஸாருக்கு அறிவித்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
பின்னர் காலி தீயணைப்பு பிரிவினரை வரவழைத்து தீயை அணைத்து பல மருந்துகளை காப்பாற்றியதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் மருந்துகளுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்
யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்காரி ஒருவர் 140 ஏக்கரில் பண்ணை செய்கிறார் .
இந்த பண்ணையில் தற்போது 10.000 தென்னைகள் வளர்க்க படுகின்றன .
அதாவது பல்லாண்டு பயிர் செய்கை இடம்பெறுகிறது .
அதற்குள் ஆடு மாடு கோழிகள் ,தென்னை ஏனைய பல்லாண்டு பயிர்களும் உற்பத்தி செய்ய படுகின்றன .
நமது இலங்கையர்கள் அங்கிருந்து மண் சரியில்லை தண்ணி இல்லை என்ற காரணங்களை கூறியவாறு காலத்தை கடத்தியவாறு செல்கின்ற ,கால கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன .
வெள்ளைக்காரியி பெயரில் பெரும் அரசியல் முதலை ஒன்று பணம் விளையாடுகிறது.
சும்மா ஒரு ஆடம்பர கடை போட்டாலே வெள்ளை வான் தந்து நிற்கிறது .இதற்குள்ள அம்மணியை செய்திட இலங்கை அரசு விட போகிறதா என்ன .
காதில பூ கந்தசாமி .ஆனால் அவருக்கு எம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ லெதன்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அண்மையில், மீன்பூனை(Fish cat) நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
மீன்பூனைகள் தங்களுடைய குட்டிகளுடன் இவ்வாறு நடமாடுகின்றன. பற்றைக்காட்டுக்குள் வசிக்கும் இவ்வாறான மீன்பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளை கொன்று தின்றுவிடுகின்றன என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
இவ்வாறு, நேற்று (21) சுற்றித்திரிந்த மீன்பூனைகள் தொடர்பில், நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தோட்டத்துக்கு விரைந்த அதிகாரிகள், மீன்பூனைகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.
தோட்டங்களுக்கு அண்மையில் இருக்கும் பற்றைக்காடுகளுக்கு தீ மூட்டுவதால், இவ்வாறான மிருகங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி பூனைகள் மனிதர்களுக்கு எவ்விதமான
தீங்குகளையும் விளைவிக்காத போதிலும்,
செல்லப்பிராணிகளை கொன்று தின்றுவிடுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நாய் குட்டிகள் இரண்டின் மீது காரொன்றை ஏற்றிய குற்றச்சாட்டின் கீழ் 27 வயதான பெண் ஓட்டுனர் மதுரட்ட பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ரிகிலகஸ்கட வீதி கதுரகடே பட்டியப்பெலெல்ல பகுதியில், வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் கடந்த 17 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வாகனமேற்றி நாய்க்குட்டிகள் கொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து மதுரட்ட பொலிஸ்க்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
அந்தப் பெண், பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்த சமயத்தில், மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண், வலப்பன நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டபோது,குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதனையடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அப்பெண் விடுவிக்கப்பட்டார்.
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




































