Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு
கல்லறைகளை தோண்ட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும் – நூதன தண்டனை அறிவிப்பு
கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக
கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை
தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள்
தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை
அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது
விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.
கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு
கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு
பிரிட்டனில் குளிர்காலத்தை முன்னிட்டு மீள வேகமாக பரவி வரும்
கொரனோ நோயின் தாக்குதலினால் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது
இதே பகுதியில் உள்ள போல்டன் எனும் பிரதேசத்தில் உள்ள பார்கள் ,உணவகங்கள்
,இரவுகளியாட்ட விடுதிகள் என்பன நடத்த தடைகள் விதிக்க பட்டுள்ளன ,
உணவகங்களில் டெக்கே வே மட்டும் சுகாதாரமுறைக்கு உட்படுத்த பட்டு எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறது
இங்கே ஒருலட்சம் பேரில் 120 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது
கண்டுபிடிக்க பட்டுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சின்
வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் Conoco இராணுவ தளம் மீது கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இந்த
அமெரிக்கா இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ தளபாடங்கள் மற்றும்
படைகள் குவிக்க பட்டுள்ளன
ஏவுகணை தடுப்பு மையங்களும் அமைய பெற்றுள்ளன
அவ்விதமான உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த இராணுவ தளம்
மீது வீழ்ந்து வெடித்துள்ள ஏவுகணைகளினால் அமெரிக்கா படைகள் நிலை குலைந்துள்ளன
ஈரான் அதரவு படைகள் இந்த துல்லியமான தாக்குதலை தொடராக நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு
ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை
நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர
தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது

சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவின் வடக்கு இட்லீ பகுதியை இலக்கு வைத்து துருக்கிய அரச பயங்கரவாத இராணுவம் குவிக்க பட்டு வருகிறது .
இதுவரை இடம் பெற்று வரும் சமாதான கால பகுதியில் மட்டும் 6,225 இராணுவ
வாகனங்களுடன் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுள்ளதாக சரத்வதேச யுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது
லிபியா ,சிரியா ,ஈராக் பகுதிகளில் துருக்கி இராணுவத்தை குவித்து வருகிறது
இதனால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
சிரியாவில் ஒன்பது ஆண்டுகள் கடந்து பல் நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
இந்த போரில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகியும்
,இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
சிரியாவின் தெற்கு இட்லீ பகுதியை குறிவைத்து பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுளள்து
சுமார் ஒருமணித்தியாலம் இடை விடாது நடத்த பட்ட இந்த தாக்குதலில்
துருக்கி மற்றும் துருக்கிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக இராணுவ மையம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் பர்ஸபர மோதல்கள் வெடித்து பறக்கின்றன

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு
துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு
சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளம் மீது கார் தற்கொலை தாக்குதல் இடம்,பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள்
பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன,
எனினும் துருக்கிய இராணுவ தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
இட்லியை ஆக்கிரமிக்க 16 ஆயிரம் இராணுவத்தை துருக்கி குவித்து பெரும்
தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
வட கிழக்கு சிரியா பகுதி எல்லை வழியாக சவூதி நாட்டை சேர்ந்த இருபது கொமாண்டோ அணி இராணுவத்தின் உள்நுளைந்துள்ளதக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இவர்களது இந்த நுழைவு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பகுதியில் ஈரான் இராணுவ தளங்களும் அமைந்துள்ளன
ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் பெரும் முறுகல் நிலை உள்ளது ,இவ்வாறன நிலையில் சவுதிய படைகள் நுழைதல் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
கருங்கடல் வழியாக பறப்பில் ஈடுபட்ட ரஷியா விமானங்கள் நேட்டோ
படைகளின் Tu-142 நீர்மூழ்கி காப்பு விமானங்கள் பின் தொடர்ந்ததாக ரசியாபாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது
இவர்களது பின் தொடர்தல் கருங்கடல் ,மற்றும் பால்டிக் கடல் பகுதி வழியாகவும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
நேட்டோவும் ,ரஷியாவும் மாறி மாறி இவ்விதம் பரஸ்பர குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள கீகிறீன் சூன் எனப்படும் அமெரிக்கா
,பல் நாட்டு படைகள் உயர் இராணுவ நிலைகளை
இலக்கு
வைத்து நடத்த பட்ட Katyusha ரொக்கட் தாக்குதலில் அந்த மையம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மூன்று ரொக்கட்டுக்குள் குறித்த பகுதியில் திடீரென வீழ்ந்து வெடித்தன
இதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு தெரியவரவில்லை ,ஈரான் இராணுவ
தளபதி சொலைமானி அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை
செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா இராணுவ நிலைகள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்
சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்
ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பட்ட வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய சீனாவின் எல்லைப் புறப்குதியில் குவித்துள்ளது
இரு நாடுகளுக்கு இடையில் முண்ட நேரடி மோதலில் பலர் படுகாயமடைந்து இருந்தனர்
இதனை அடுத்து ரசியாவிடம் அவசர அவசரமாக வாங்கி குவித்த ஏவுகணைகளை தற்போது எல்லைப்புறங்களில் குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்தியா இராணுவம் உள்ளது
தனது சொந்த தயாரிப்பில் நாசகாரி ஏவுகணைகளை சோதனை செய்து
வல்லரசு என்ற நிலையில் இருக்கும் இந்தியா சீனாவின் ஏவுகணைகளை
வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
சீனா பெரும் தாக்குதலை தொடுத்தால் அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்
ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி
ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி
சிரியாவின் எல்லை பகுதியில் தளம் அமைத்து மீள போராடி வந்த ஐ எஸ் உலக பயங்கரவாத இயக்கம் மீது ரசியா மற்றும் சிரியா அரச
இராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தொடர் தாக்குதலில் ஒரு
வாரத்தில் மட்டும் சுமார் 327 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 சிறிய முகாமக்கள் ,ஐந்து ஆயுத கூடங்கள் ,ஐந்து நில கீழ்
சுரங்க பாதைகள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ளன
துல்லியமான உளவு தகவல்கள் மூலம் நடத்த பட்ட தாக்குதலில்
குறித்த தீவிரவாத அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து தேடி அழிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்
மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்
சிரியாவின் Idlib and Latakia பகுதியில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட மனித வெடிகுண்டு தகத்தலை அடுத்து
தற்பொழுது ரசியாவின் மிகையொலி போர் விமானங்கள் குறித்த
எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்
ஈடுபட்டுள்ளன
இதனால் மேற்படி கள நிலவரம் தற்போது இறுக்கமான நிலைக்கு
சென்றுள்ளது ,இந்த விமானங்கள் திடீர் பறத்தல் மிக பெரும் கூட்டு
தாக்குதல் ஒன்றுக்கு ரசியா ,சிரியா இராணுவம் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதனால குறித்த களமுனை பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது
லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்
லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்
லெபனானின் தெற்கு எல்லையோர பகுதியில் இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் இருபது
பொஸ்பரஸ் நச்சு கொத்து குண்டுகளை வீசியுள்ளது என அந்த போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது
செவவாய்க்கிழமை சுமார் இருபதுக்கு மேற்பட்ட இந்த குண்டு
வீச்சை இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தியுள்ளது
உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளை இங்கே வீசியுள்ளதன் மூலம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தின் அதி உச்ச கோர இனவெறியை இது அம்பல படுத்தியுள்ளது
இஸ்ரேல் வழங்கிய இவ்விதமான குண்டுகளையே புலிகள் மீது இலங்கை
அரச பயங்கரவாத இரானுவம் வீசியது ,இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகியமை இங்கே குறிப்பிட தக்கது
அது போன்ற மிக பெரும் இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்
நோக்கில் இஸ்ரேல் அரச பயங்கரவாதம் இந்த செயலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை
சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை
சீனாவின் வடக்கு எல்லையோர வான் பகுதிக்குள் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற சீனா இராணுவத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அங்கிருந்து விலக மறுத்தால் சுட்டு வீழ்த்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அதன் பின்னர் அங்கிருந்து குறித்த விமானம் தப்பித்து சென்றுள்ளது
,மேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
சீனாவுடன் வலிந்து தாக்குதலில் அமெரிக்கா அரச பீடம் ஈடுபட்டுள்ள
நிலையில் ,இந்த இராணுவ அத்து மீறல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
சீனாவுடன் போரினை தொடுக்க போவதாக அமெரிக்கா அதிபர் நகர்வு
இடம்பெற்ற வண்ணம் உள்ளதை இவ்விதமான செயல் மீளவும் இடித்துரைக்கின்றன
ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்
ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்
அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. ‘கிம்முக்கு இதய
அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்’; ‘கிம் உயிரோடு இருக்கிறாரா
என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடைபெற்ற, ‘வடகொரியாவின் தந்தை’ என போற்றப்படும் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் கிம் கலந்துகொள்ளவில்லை.
2011-ம் ஆண்டு வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இந்த நிகழ்வில் தவறாமல்
பங்குகொள்ளும் கிம், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்ற செய்தி, அவர் உடல்நிலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது.
எனினும் ஏப்ரல் மாத இறுதியில் கிம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டது. இதன் மூலம் கிம் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ‘சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை’ என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனிடையே கிம் தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை தனது தங்கை கிம் யோ ஜாங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய தலைவர்
கோமாவில் இருக்கிறார்” என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாங் சங் மின் இது குறித்து அவர் கூறுகையில் “வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கோமாவில் இருப்பதாக தகவல்
கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
அதேசமயம் வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர்.
அண்மையில் வட கொரியா சென்று வந்த சர்வதேச பத்திரிகையாளர் ராய் காலே, கிம் இறந்துவிட்டார் என்று தான் நம்புவதாக கூறினார்.
கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அங்கு ஏதோ பெரிய விஷயம் நடப்பதை உணர்த்துவதாக ராய் காலே தெரிவித்தார். மேலும் கிம் ஜாங்
அன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு முறையாக அறிவிக்கப்பட்டதை
சுட்டிக்காட்டிய ராய் காலே கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் என கூறினார்.
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை
இஸ்ரேல் இராணுவத்தின் ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று ஹிஸ்புல்லாக்கள் புளு லைன் நிலைகளை கடந்து தாக்குதல் நடத்த
சென்ற வேளை ஹிஸ்புல்லா விடுதலை போராளிகளின் ஏவுகணை தாக்குதலினால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுளளது
கடந்த எட்டு வாரத்தில் இரண்டாவது உளவு விமானத்தை குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது
தமது இராணுவ நகர்வு ஒன்றின் பொழுது பாவனைக்கு உட்படுத்த பட்ட
விமானம் ஹிஸ்புல்லா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்துள்ளது
இந்த விமான சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து தற்போது இரு நாட்டு இராணுவத்திற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது
லெபனான் துறைமுகத்தில் தரித்து நின்ற ஆயுத கப்பல் மற்றும் ஏவுகணைகளை
தாக்கி அழித்ததன் பின்னர் இடம்பெற்ற பெரும் சம்பவமாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் அமைய பெற்றுளளமை குறிப்பிட தக்கது
ஈரான் வாழங்கிய ஏவுகனைகளே இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா
ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா
ஈராக் தலைநகர் பக்தாத்தில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் இராணுவ மையங்கள் மீது ஈரான் தொடராக
நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து அங்கிருந்து தமது இராணுவத்தை விலக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்
இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்
தொடர்ந்து நிலவி வருவதால் அங்குல ஐந்தாயிரம் அமெரிக்கா படையினரில்
இரண்டாயிரத்து ஐநூறு பேரை தாம் விலக்கி கொள்ள உள்ளதாக டிரம்பம் அதிரடியாக அறிவித்துள்ளார்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரான் தமது இராணுவத்தை இலக்கு
வைத்து தாக்குதல் நடத்தி டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி
தோற்கடிக்கும் என்பதால் இந்த அவசர நகர்வில் டிரம்ப், ஈடுபட்டுள்ளார் என அடித்து கூறலாம்
தமது படைகளை விலக்கி கொள்ள மறுத்த டிரம்ப் திடீரென தலைகீழ்
முடிவை மேற்கொண்டு இராணுவ விலக்குதலுக்கு வந்துள்ளமைக்கு இதுவே காரணம் எனலாம்
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியாவின் வடக்கு அலப்போ பகுதியில் உள்ள சிரியா அரச இராணுவ நிலைகள் மீது இடைவிடாத பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை துருக்கிய படைகள் நடத்தியுள்ளன
இந்த தாக்குதலில் சிரியா அரச இராணுவத்திற்கு கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
தமது பதிலடி தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள் பலியாகியுள்ளதாக சிரியா அரச இராணுவமும் பரப்புரை புரிந்து வருகிறது
இதன் உண்மையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி
இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி
இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்க ப்பட்ட மக்கள் விடுதலை குழுக்கள் போராடி வருகின்றன
அவ்விதம் அத்துமீறி மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வரும் இஸ்ரேல்
அரச பயங்கரவாத இராணுவத்தினரை இலக்கு வைத்து பாலஸ்தீனம்
காசா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் விடுதலை போராளிகள்
பலூன்கள் மூலம் இஸ்ரேல் நிலைகளை நோக்கி குண்டுகளை கட்டி பறக்க விடுகின்றன
இவ்வாறான பலூன்களை கண்ணுற்ற இஸ்ரேல் இராணுவம் அவற்றில் சிலதை சுட்டு வீழ்த்தியுள்ளன
சில பலூன்கள் இலக்கு நோக்கி நகர்ந்த பொழுதும் அவை வெடித்து சிதறவில்லை
இஸ்ரேல் அரசு இந்த குண்டுகள் வெடித்ததாக அறிவித்தால் மட்டுமே வெளியில்
இதன் சேத விபரங்கள் தெரிய வரும் ,அதனால் இந்த குண்டுகளின் முழுமையான
பாதிப்பு விபரங்களை மறைத்து வருகிறது என்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன












