Category: சமையல் cook
இன்றைய சமையல் ,இன்றய முக்கிய சமையல்,today cook,today easy cooking
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
வீட்டில் இலகுவாக நம்ம வாய் சுவையாக உண்ணும் வகையில் அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி செய்து அசத்தலாம் .
குஸ்கா கத்தரிகையா பிரியாணி இலகுவாக செய்வது எப்படி என்பதையும் ,அத்தகு தேவையான பொருட்கள் என்ன என்பதை ,வாங்க காணொளி பார்த்துகிட்டே செஞ்சு அசத்தலாம் .
மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
நம்ம வீட்டில் நாள்தோறும் மதியம் மிஞ்சிய சாதத்தில் ,டிபனுக்கு சூப்பரா ,சுவையான
உடனடி தோசை செஞ்சு அசத்துங்க.
இந்த தோசை மிக இலகுவாக செய்திடலாம் .
அப்படியா ஒரு டிபன் தாங்க இது .
வாங்க இந்த டிபன் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .செய்முறை ஒன்று .
மிக்சி எடுத்திடுங்க இரண்டு காப் சாதம் ,அப்புறம் வறுத்த ரவை மிக்சியில்,
பொடியாக அரைத்து எடுத்திடுங்க .
கூடவே ஒரு கப் தண்ணி ஊற்றி பொடியாக அரைத்து எடுத்திடுங்க .
மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
அரைத்த மாவை ஒரு சட்டியில் மாத்திடுங்க .அப்புறம் தோசை மாவு பதத்திற்கு தண்ணி சேர்த்து கரைத்து எடுத்திடுங்க .
தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .தேவையான அளவு அப்ப சோடா ,எலுமிச்சை சாரும் சேர்த்து கலக்கி விடுங்க .
அப்புறம் தோசை கல்லை சூடாக்கி நெய் ஊற்றி கிரிப்சியா சுட்டு எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு .
இப்போ இதுகூட சட்னி சேர்த்து சாப்பிடுங்க, செமையாக இருக்கும் மக்களே .
மிஞ்சிய சாதத்தில் மிக இலகுவான முறையில தோசை ரெடி .
பீட்ரூட் சட்னி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க
பீட்ரூட் சட்னி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க
பீட்ரூட் சட்னி வீட்டில் இலகுவாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க ,பிடிக்காதவங்களும் விரும்பி ரெம்பவே சாப்பிடுவாங்க.
அவ்வாறான மிக இலகுவான முறையில ,சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ..?
பீட்ரூட் சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் .
இலகுவாக பீட்ரூட் சட்னி செய்திடும் செய்முறைக்குள் போகலாமா வாங்க.
250 கிராம் பீட்ரூட் தேங்காய் போல சீவி எடுத்திடுங்க ,
அப்புறம் அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,
நான்கு பூண்டு ,புளி ,தேங்கய் பல்லு ,வறுமிளகாய் ,மல்லி ,பொடியாக வெட்டியா வெங்காயம் ,உளுந்து ,சீராக்கம் ,கடலை பருப்பு ,எல்லாம் போட்டு வறுத்திடுங்க .
இவை எல்லாம் பச்சை வாசம் போகும் வரை வறுத்து எடுத்திடுங்க .
அதன் பின்னர் அடுப்பை நிறுத்தி ,எல்லாத்தையும் மிக்சியில் தண்ணி
சேர்த்து போட்டு அரைத்து எடுத்திடுங்க .
இறுதியாக கரு வேப்பிலை தாளித்து, இந்த சட்னியில் போட்டிருங்க .அவ்வளவு தாங்க வேலை .
இப்போ இட்லி ,தோசை ,சாதம் கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே.
இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
ரெம்ப நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| கவலை வேண்டாம் ,சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட் இந்த பாவற்காய் பொடி
பாவற்காய் பொடி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாமா வாங்க
தமிழ் சமையல்
பாவற்காய் பொடி எய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம் வாங்க ,செய்முறைக்குள் போகலாம் .
வேர்க்கடலை ,( கச்சான் ) வறுமிளகாய் ( செத்தல் மிளகாய் ) பாவற்காய் ,பொடியாக வெட்டி ,இதை அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வறுத்தெடுங்க .
நன்றாக வறுபட்டதும் பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து பிறிம்பாக வைத்திடுங்க .
அப்புறம் பாகற்காய் போட்டு நன்றாக வதக்கி எடுங்க .
நன்றாக வதங்கியதும் ,புளி போட்டு வதக்கிடுங்க ,அதுக்கு அப்புறம் அடுப்பை நிறுத்தி எடுத்து வைத்திடுங்க .
சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .
அவ்வளவு தாங்க ,இதை பொதியில் அடைத்து வைத்திடுங்க .
தேவையான நேரம் இதனை எடுத்து ,இதுகூட தாளித்து போட்டு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் மக்களே.
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
நம்ம வீடுகளில் அவசர நேரத்தில் காய்கறிகள் இல்லாத நேரத்தில ,இது போன்ற உணவுகளை உடனடியாக செய்து சாப்பிடுங்க மக்களே .
இந்த கிரேவி செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்டாக என்ன .?
வாங்க கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
இந்த கிரேவி செய்திட முதல்ல அடுப்பில கடாய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்க .

அப்புறமா இரண்டு பிரிஞ்சி இலை ,ஏலக்காய் ,கராம்பு ,பட்டை ,ஒரு கருப்பு ஏலக்காய் ,ஒரு கரண்டி சீரகம் ,மீளக்கு சேர்த்து வதக்கி கொள்ளுங்க .
அதன் பின்னர் வெட்டி வைத்த ஒருகிலோ தக்காளி சேர்த்திருங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்திடுங்க.
இரண்டு கரண்டி எள்ளு ,முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி ,சேர்த்து வதக்கி வாங்க .இப்போ அடுப்பை நிறுத்தி ,ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .இப்போ இதில கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்திடுங்க .
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
இப்போ கடாய் சூடாக்கி அதில இரண்டு கரண்டி நெய் ,எண்ணெய் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,சீராக தூள் ,கரம் மசாலா ,மூணு கரண்டி மிளகாய் தூள் ,நான்கு கரண்டி மல்லி தூள் ,பெருங்காய தூள் ,கஸ்தூரி மேவி .சேர்க்க கலந்திருங்க.
நன்றாக சூடாக்கி வதங்கிய பின்னர் ,அரைத்து வைத்தவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .
மூடி போட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைத்திடுங்க .
இப்போ கிரேவி ரெடியாகிடிச்சு ,இதை போத்தலில் அடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் .
அவ்வளவு தானாக வேலை .
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்
ராஜஸ்தானில் புகழ் பெட்ரா பாணி பூரி போன்ற சுவீட் செய்து பார்க்கலாம் வாங்க .
இந்த பாணி சுவீட் செய்வது எப்படி ..?
செய்முறை ஒன்று
ஒரு பாத்திரத்தில்மைதா மாவு எடுத்திடுங்க .தேவையான தண்ணி எடுத்து பிசைந்து எடுங்க .கையில கொஞ்சம் எண்ணெய் தடவி நன்றாக பிசைந்து எடுங்க .
இப்போ அகலமான தட்டு எடுத்து அதில நெய் சேர்த்திடுங்க .அதன் மேல இந்த மாவு வைத்து நனறாக மேலும் தட்டி எடுங்க .
அப்புறம் சின்ன சின்ன உருண்டையாக பிரித்து எடுங்க .
அரை மணி நேரம் ஊற வைத்திடுங்க .
நெய்யில் ஊறி செமையாக சாப்டா இருக்கு .
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்
இப்போ சின்ன சின்ன உருண்டையாக எடுத்து ,மாவுக்கு நடுவில் வடை போல ஓட்டை போட்டு மெல்லியதாக லேயர் போல தட்டி எடுங்க .
அப்புறம் பரோட்டோ போல வடிவில லேயருடன் தட்டி எடுங்க .
இதனை ஒரு தட்டில தோசை மாவு போல தட்டையாக தட்டி எடுங்க .அப்புறம் காத்தியால சின்ன சின்னதாக அந்த மாவு வெட்டி எடுங்க.
இப்போ மீளவும் பரோட்டோ போல தட்டி எடுங்க .
அப்புறம் அடுப்பில கடாய வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில போட்டு நன்றாக பொரித்து எடுங்க .
இப்போ இந்த பரோட்டா மேல ஊற்றி கலக்க இனிப்பு பாணி தயாரிக்கணும் .
அதற்கு ஒரு பாத்திரத்தில இரண்டு கப் அளவு சர்க்காரை எடுத்திடுங்க .அதுகூடவே தண்ணி ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .
கலருக்காக குங்கும பூ கலந்து கொதிக்க வைத்து இறக்கிடுங்க .
இப்போ அந்த இனிப்பு பாணியில் பொரித்து வைத்த ரொட்டிகளை தோய்த்து எடுத்திடுங்க .
இப்போ மிக அருமையான சுவீட் ரெடியாடிச்சு .
இப்போ குழந்தைகள் கூட பகிர்ந்து சுவைத்து சாப்பிடுங்க தலைவரே .
எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு
எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இதுவும் ஒன்று .
இந்த மாலை நேர உணவை எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையாக செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .
இந்த சூப்பர் டிபன் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
எப்படி செய்வது ..? செய்முறை ஒன்று .
மிக்சி எடுத்து அதில கடலை ,ஏலக்காய் போட்டு ,பொடி பண்ணி எடுத்திடுங்க .
அப்புறம் பொடியை சட்டியில் மாத்தி ,அதில் தேங்காய் துருவல் சேர்த்து ,கூடவே நாட்டு சக்கரை சேர்த்து கலக்கிடுங்க .இப்போ உள்ளுடன் ரெடியாடிச்சு .
எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு போட்டு அடுப்பில் வைத்து வறுத்திடுங்க .
அரிசி மாவு வாசம் வரும் வரைக்கும் வறுத்திடுங்க .
அப்புறம் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .
இதுகூட மூன்று வாழைப்பழம் சிறிதாகக் வெட்டி எடுத்திடுங்க .அதை மிக்சியில் போட்டு தண்ணி ஊற்றி அரைத்து எடுங்க .
அதுக்கு அப்புறம் மாவிலை இதனை ஊற்றி பிசைந்து எடுங்க .
சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும் வரைக்கும் பிசைந்து எடுங்க .
இப்போ மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து பிசைத்திடுங்க ,இது கலரை மாற்றி கொடுக்கும் அதுக்கு தான் .
அப்புறம் இந்த சப்பாத்தி மாவை உருண்டை உருண்டியாகி பிடித்து மோதகம் போல தட்டையாக தட்டி எடுத்து ,அதுக்குள்ளே இந்த உள்ளுடன வைத்து மூடி விடுங்க .அப்படியே எல்லாத்தையும் செய்திடுங்க .
அதுக்கு அப்புறம் அடுப்பில இட்லீ பாத்திரத்தில் போட்டு 8 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை டிபன் ரெடியாடிச்சு .
இது கலர் வடிவிலே செஞ்ச சூடான செமையான , சத்தான டிபன் .அம்புட்டு தாங்க .நீங்களும் இன்றே செய்து பாருங்க மக்களே .
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க
வீட்டில் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க
இந்த ஈஸியான அப்பம் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..
எவ்வாறு செய்வது கவலை விடுங்க .
செய்முறை ஒன்றுக்குள் போகலாம் வாங்க .
அடுப்பில பாத்திரத்தை வைத்து அதில ஒரு கப் அளவுக்கு வெள்ளம் ,கூடவே ஏலக்காய் ,அரை கப் அளவுக்கு தண்ணி ஊற்றி கரைத்து விடுங்க .
வெள்ளம் கரையும் வரை காய்ச்சுங்க .
இப்ப அடுப்பில இருந்து இறக்கிடுங்க .
அதுக்கு அப்புறம் பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கப் அரிசி மாவு எடுத்திருங்க .இரண்டு கரண்டி கோதுமை மாவு ,சிறிது உப்பு ,தேங்காய் துருவல் ,கரைத்து வைத்த வெள்ளத்தை வடித்து இதற்குள் ஊற்றி கலக்கிடுங்க .
கட்டி இல்லாது கலக்கி எடுத்திருங்க .
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக கரைத்து ஊற்றி கலக்கிடுங்க .
கிட்ட தட்ட தோசை மாவு பதத்திற்கு திக்கா கரைத்திடுங்க .
செய் முறை இரண்டு
இப்பொழுது அப்பா சோடா சேர்த்து கலக்கிடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கி கொள்ளுங்க .

சூடானதும் இட்டலி மாதிரி கரண்டியால குண்டு குண்டா மாவை ஊற்றிடுங்க .
இரு பக்கம் பிரட்டி எடுத்திடுங்க .
நன்றாக வெந்து வந்ததும் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .
அவ்வளவு தாங்க சூப்பர் கார்த்திகை அப்பம் ரெடியாடிச்சு
இதுபோல நாள்தோறும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
வீட்டில நாம் கடை சுவையில் இவ்வாறு சட்னி செஞ்சா ,இருபது இட்லீ சாப்பிடலாம் .
இவ்வாறு கடை சுவையில் தரமான உணவாயு வீட்டில் செஞ்சு அசத்துங்க மக்களே .
வாங்க இப்போ இந்த சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .
இட்லி சட்னி செய்வது எப்படி ..?செய்முறை ஒன்று
தக்காளி கொத்தமல்லி சட்னி செய்திட அடுப்பில ஒரு சட்டி வைத்து கொள்ளுங்க.,அதில தேவையான எண்ணெய் ஊற்றி ஒன்றரை கரண்டி கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு சேர்த்து ,இரண்டையும் நன்றாக வறுத்திடுஙக .
அப்புறம் கூடவே ஐந்து வறுமிளகாய் .இஞ்சி ,சீரகம் ,பூண்டு ,வெங்காயாம் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்திடுங்க .
அப்புறம் பழுத்த தக்காளி நன்றாக வெட்டி சேர்த்திடுங்க .கூடவே உப்பு சேர்த்து வதக்கிடுங்க .இப்போ இதுகூட புளி சேர்த்திடுங்க .
இது கூடவே கடையாசியாக கொத்தமல்லி சேர்த்திடுங்க .அதையும் நன்றாக கலக்கி வதக்கி விடுங்க.
நம்ம சட்னி ரெடியாடிச்சு ,இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .கருவேப்பிலை ,அரைக்கரண்டி, உழுத்தம் பருப்பு ,கடுகு பொரித்து தாளித்து கொட்டிடுங்க
இப்போ இட்லீ கூட சேர்த்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க வேலை மக்களே .
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.அம்புட்டு சுவையாக இருக்கும் .ஒருமுறை செஞ்சு பாருங்க மக்களே .
இந்த கார சட்னி செய்வது எப்படி ..?
கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
சுவையான காரச்சட்னி செய்முறை ஒன்று .
காஞ்ச மிளகாய் நான்கு , காஸ்மீர் மிளகாய் 3 ,வெள்ளம் சின்ன கட்டி ,சீரகம் ,உப்பு ,100 கிராம் சின்ன வெங்காயம் ,ஐந்து பல்லு பூண்டு ,பொடியாக வெட்டிய இரண்டு தக்காளி .ஒரு பெரிய வெங்காயம் .எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து எடுங்க .அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கலக்கி எடுங்க ,ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் எடுத்திடுங்க
அவ்வளவு தாங்க சூப்பரான கார சட்னி ரெடியாடிச்சு ,இதனை இப்போ சாதம் ,தோசை,இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செமை சுவையாக இருக்கும் .
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான சூப்பரான அட்டகாசமான Sidedish .ஒரு மாதம் ஆனாலும் கெடாது அப்டியே இருக்கும் சமைத்து சாப்பிடுங்க மக்களே .
இந்த கார பொடி செய்வது எப்படி
காரப்பொடி செய்முறை ஒன்று .
இந்த காரப்பொடி செய்வதற்கு 20 வறுமிளகாய் ,எடுதியொடுங்க
அடுப்பில கடாய வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு ,இந்த மிளகாயை வறுத்தெடுங்க .
இப்போ அதே கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டை உழுத்தம் பருப்பு ,மல்லி ,போட்டு வறுங்க ,நன்றாக வறு பட்டு வந்ததும் புளி ,கருவேப்பில்லை .சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
ஸ்கூடவே சீரகம் ,போட்டு எல்லாத்தயும் எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .
இப்போ கொஞ்ச பூண்டு எடுத்து கொள்ளுங்க .
இப்போ மிளகாய் போட்டு அரைத்து எடுங்க .அதன் பின்னர் மல்லி கூட்டிடுகளை அரைத்து எடுங்க .
ஒப்போ உப்பு சேர்த்து எல்லாத்தையும் நன்றாக ரசித்து எடுத்திருங்க .
இப்போ சுவையான கார பிடி ரெடியாடிச்சு .ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம் .அப்புறம் என்ன மக்களே இன்றே முயற்சித்து பாருங்க.
10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .
வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
சாம்பார் செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .
நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .
இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .
ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .
இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .
இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே .
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
மொறு மொறு உடனடி அரசி மாவு தோசை செய்ஞ்சி சாப்பிடலாம் வாங்க .
மிக இலகுவாக உளுந்தே இலலாம எப்படி தோசை செய்வது .அதை தாங்க இதில் பார்க்க போகிறோம் .
அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
உடனடி அரிசிமாவு தோசை செய்முறை ஒன்று
ஒரு மிக்சி எடுத்து கொள்ளுங்க ,அதில
ஒரு கப் அரசி மா அல்லது வறுத்த மாவு ,அது கூட அரை கப் வேக வைத்த சாதம் ,தேவையான உப்பு ,கடலை மாவு இரண்டு கரண்டி ,கூடவே தேவையான தண்ணி சேர்த்து நனறாக அரைத்து எடுங்க .
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
அரைத்ததன் பின்னர் சோடா உப்பு ,எலுமிச்சை பழசாறு போட்டு மிக்ஸ் பண்ணி .தோசை கல்லில் மாவை ஊற்றி மேலே கொஞ்ச எண்ணெய் தெளிச்சு அப்படியே மொறு மொறு போல சுட்டு எடுங்க
உளுந்தே இல்லாம மிக சுவையான அரிசிமாவு உடனடி தோசை ரெடியாடிச்சு
.
அப்புறம் என்ன இன்றே ஆரம்பியுங்க ,செம சுவை கூடவே மிக இலகுவான வழிமுறை .இது எனக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு மக்களே.
உடனே செஞ்சு அசத்துங்க .
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil

கேசரி கல்யாண வீட்டுக்கு இப்படி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே.மிக சுவையான தரமான ,கடை சுவையில் எப்படி ரவா கேசரி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
இந்த ரவை கேசரி செய்வது எப்படி ..?
ரவா கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க கேசரி செய்முறைக்குள் போகலாம் .
கடாயில அரை கப் அளவு நெய் சூடாக்கி கொள்ளுங்க .கூடவே முந்திரி பருப்பு ,திராட்சை பாதம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இப்போ இதனை நெயில் இருந்து வெளியிலே எடுத்திடுங்க .
இப்போ அதே கடையில அதே நெய்யில ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்க .இப்போ அதே ரவையில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் பண்ணிடுங்க .
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil
அப்புறம் ஏலக்காய் தூள் ,சேர்த்து கொதிக்கும் சூடான தண்ணி சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .
அப்புறம் ஊற வைத்த குங்கும பூ தண்ணி சேர்த்திடுங்க .நனறாக கலக்கி வாங்க .
அதன் பின்னர் மூன்று கரண்டி ஒயில் சேர்த்து 8 நிமிஷமே அப்படியே வேக வைத்திடுங்க .
இப்போ இதில் முன்னர் வறுத்து வைத்த எல்லாத்தையும் போட்டு கலக்கி 3 நிமிஷம் வேக வைத்திடுங்க .
அவ்வளவு தாங்க மிக சுவையான தரமான கடை சுவையில் கல்யாண வீட்டு ரவா கேசரி செய்தாச்சு .அப்புறம் இதை சாப்பிட்டு பார்த்து சுவையை எங்களுக்கு சொல்ல்லுங்க மக்களே .
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
நம்ம வீட்டில இட்லி போடி மிக இலகுவாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாமா வாங்க .
சுலபமான முறையில் ,சுவையாக உடனடியாக இட்லி பொடி தயாரிப்பது எப்படி..?
உங்கள் கேள்விக்கு இதோ செய்முறை விளக்கம்
இட்லி பொடி செய்வது எப்படி ..?
இட்லி செய்வதற்கு தேவியான பொருட்கள் என்ன ..?
சுவையான இட்லி பொடி செய்முறை ஒன்று
இந்த பொடி செய்திட காடயில ஒரு கப் அளவு உளுந்து பருப்பு போடு வறுத்திடுங்க .உளுந்து வாசம் வரும் வரை வறுத்திடுங்க .
உளுந்து கலர் மாறியதும் உளுந்தை நிப்பாட்டி கொள்ளுங்க .
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
அதே கடையில அரை கப் அளவு கடலைப் பருப்பு போட்டு அதனையும் ,அதே போல வறுத்து எடுத்திடுங்க .
அப்புறம் வெள்ளை எள்ளு சேர்த்து அதனையும் நன்றாக வறுத்து எடுத்திடுங்க .
அதே கடையில 10 வறுமிளகாய் நன்றாக கலர்மாறி வரும் வரை வறுத்து எடுத்திடுங்க .இறுதியாக கருவேப்பிலையும் போடு அதுபோலவே, வறுத்து எடுத்திடுங்க .
இப்போ சீரகம் மிளகு சேர்த்து இத்தனையும் வறுத்து எடுத்திடுங்க .
வறுத்த எல்லா பொருளையும் மிக்சியில் போட்டு ,உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக மாவு போல அரைத்து எடுத்திருங்க .
இப்போ செமையான இட்லி பொடி ரெடியாடிச்சு .இட்லி பொடி கூட நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுங்க .
அவ்வளவு தாங்க .சுலபமாக வேலை முடிஞ்சிருச்சு.
எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
கடையில் மீன் வாங்கினால் இந்த முறையில் செய்து பாருங்க ,சுவையோ வேற லேவலாக இருக்கும் .
சமைப்பது முக்கியமல்ல ,அதனை சுவையாக சமைப்பதில் தான் அதன் வெற்றி உள்ளது .
வாய்க்கு சுவையாக ருசித்து சாப்பிட இது போல பண்ணுங்க மக்களே .
வாங்க இப்ப மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .
மீன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையானமீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் .
புளி எடுத்து பாத்திரத்தில் ஊற வைத்திடுங்க .
இப்போ கடாய் சூடாக்கி அதில எண்ணெய் விட்டு ,ஒரு கப் அளவு பொடியாக வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .கூடவே பூண்டு ,கருவேப்பிலை ,சீரகம் ,மிளகு ,நன்றாக வதக்கி வாங்க .
எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
இவை ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
அதன் பின்னர் அதே கடாயில் மூன்று கரண்டி நல்லெண்ணெய் , ஒரு கரண்டி கடுகு வெந்தயம் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,இரண்டு பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா தக்காளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
அதன் பின்னர் மசலா சேர்க்கணும் .இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,கரம் மசலா ,மல்லி தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .
அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீ,புளி தண்ணியை விட்டு கலக்கி விடுங்க .
இவை நன்றாக சூடானதும் ,மீனை போட்டு மூடி போட்டு மூடி வேக வைத்திடுங்க .திக்கா வேணுமா என்றால் அதற்கு ஏற்ப வேக வைத்திடுங்க .
இப்போ சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .இது போலவே நாளும் செய்து சாப்பிடுங்க மக்களே .
Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க
Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க
மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் Home made KFC Chicken வீட்டில் ஈசியாக செய்வது என்பது பற்றி கவலை வேண்டாம் .
வாங்க இப்பொழுதே நாங்கள் நம்ம வீட்டில் Home made KFC Chicken செய்து அசத்தலாம் வாங்க .
Home made KFC Chicken செய்முறை ஒன்று
தேவையான அளவு சிக்கின் எடுத்து ,அது கூட மோர் சேர்த்து உப்பு சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணி விடுங்க .
ஐந்து மணிநேரமா இவ்வாறு ஊறிய பின்னர் அதனை எடுத்து பாவிக்கலாம் .
இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு தூள் ,இரண்டு கரண்டி மிக்ஸ் பேபி ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,
இரண்டு கரண்டி வெனிகர் ,ஒரு கரண்டி சோயா சோஸ் ,தக்காளி சோஸ் ,சில்லி சோஸ் ,உப்பு பொறு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .
Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க
இது கூட மோரில் ஊற வைத்த சிக்கனை எடுத்து போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க . மாசலா சிக்கனில் நன்றாக கலக்கி, மூன்று மணி நேரம் ஊற வைங்க .
இப்போ மைதா மா மற்றும் பால் பவுடர் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .
இப்போ ஊறவைத்த சிக்கனை எடுத்து, இந்த மாவிலை போட்டு எடுங்க .
இப்போ மாவை அரித்து எடுத்து விடுங்க .மீளவும் இதை பாவிக்க போறம் ,கட்டிகள் அகன்ற பின்னர் இரண்டாவது தடவை பாவிக்கணும் .
அதன் பின்னர் தண்ணியில போட்டு, மீளவும் மாவிலை போட்டு எடுத்து ,அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .
நன்றாக மொறு மொறு சிக்கன் நமக்கு கிடைக்கும் .
Home made KFC Chicken இப்போ ரெடியாடிச்சு .இதை இப்பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
அம்புட்டு தாங்க Home made KFC Chicken வீட்டில ரெடியாகிடிச்சு . .
அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க
அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க
வீட்டில் அடுப்பே இலலாம இப்படியும் உணவு செய்யலாம் தெரியுமா ..?
வாங்கோ இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம் .
அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செய்வது எப்படி .
மாலை உணவு செய்முறை ஒன்று
அரை கப் தேங்காய் துருவல் .மொன்று பசி மிளகாய் .அரை கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி உப்பு ,பெருங்காய தூள் ,தேவையான அளவு கருவேப்பிலை ,அரை கப் கொத்தமல்லி இலை ,எல்லாத்தையும் மிக்சியில் போட்டு தண்ணி சேர்க்காம அரைத்து எடுங்க .
அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க
செய்முறை இரண்டு
இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு வெள்ளை அவல் ,இரண்டு கரண்டி தண்ணி விட்டு நன்றாக கலந்து விடுங்க .
இது கூட இப்போ அரைத்து வைத்தவற்றை சேர்த்து கலக்கி விடுங்க .
இப்போ இது கூட ஒரு எலுமிச்சை பழ சாறு விட்டு கலந்து விடுங்க .
அப்புறம் நன்றாக சீவி வைத்த கரட் வேர்க்கடலை சேர்த்து கலந்திடுங்க .
அவ்வளவு தாங்க ,அடுப்பே இலலாம் இப்போ ஈஸியான அவல் டிபன் ரெடியாடிச்சு .
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கு என்று .மக்களே .
இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
இப்படி இட்லி செய்தா 10 இட்லி ஒன்றாக சாப்பிடலாம் .அப்புறம் என்ன செய்து சாப்பிடுங்க மக்களே .
மிகவும் இலகுவான முறையில் தரமான சுவையில் ,அடுத்தே வீடே வீடு தேடி வரும் சுவையோ சுவையில் செய்து அசத்துங்க மக்களே .
இட்லி குருமா செய்வது எப்படி .
அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் ,சோம்பு ,கராம்பு ,பட்டை ,அன்னாசி பூ ,வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர், தக்காளி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க ..
நன்றாக வதங்கிய பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி வந்த பின்ன ,அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .
இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு, தண்ணி சேர்த்து அரைத்து கொள்ளுங்க .
அதே கடாயில எண்ணை ஊற்றி, சோம்பு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளுங்க .
அதன் பின்னர் தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்க .
அப்புறமாக அரை கரண்டி மஞ்சள், மல்லி தூள் , கார தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .
இது கூடவே அரைத்த மாசாலாவை போட்டு வதக்கி வாங்க .
தேவையான அளவு தண்ணி ஊற்றி நன்றாக கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,கொத்த மல்லி இலை போட்டு இறக்கி கொள்ளுங்க .
இப்போ சூடான சுவையான குருமா ரெடியாடிச்சு .
இதனை இட்லி கூட இந்த குருமாவை போடு ஒரு புடி புடிச்சு பாருங்க .செமை சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க .வேலை .
அப்புறம் என்ன இன்றே வீட்டில சமைத்து பாருங்க மக்களே .
பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க
பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க
பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா வீட்டில இதுபோல செய்து பாருங்க , சுவையோ சுவை அம்புட்டு தரமான பிரியாணி தோற்கும் வகையில் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம் .
இந்த வெள்ளை குஸ்கா செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன
300 கிராம் அரசி ,நன்றாக கழுவி அதனை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க.
வெள்ளை குஸ்கா செய்திட தேவையான பொருட்கள்
ஒரு கரண்டி இஞ்சி பூண்டு ,பட்டை ,கராம்பு ,ஏலக்காய் ,
ஒரு அன்னாசி பூ ,ஒரு பிரியாணி இலை ,ஒரு தக்காளி ,
பச்சை மிளகாய் ,இரண்டு கரண்டி புளிச்ச தயிர் ,
இரண்டு வெங்காயம் ,முந்திரி பருப்பு ,கொத்தமல்லி ,ஒரு கைபிடி அளவு புதினா ,உப்பு .
பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க
வெள்ளை குஸ்கா செய்முறை .
குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் ,நெய் விட்டு ,மசாலா பொருட்களை வதக்கி எடுங்க .
மலசா பொருட்கள் யாவும் வதங்கிய பின்னர், ஊற வைத்த பசுமதி அரிசியை போட்டு நன்றாக் கலந்து விடுங்க .
அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் அரிசியுடன் சேர்த்து வேக வைத்திடுங்க. அவ்வளவு தாங்க வேலை .
இப்போ அருமையான சூப்பரான வெள்ளை வெள்ளை குஸ்கா ரெடியாடிச்சு .
இப்போ சுட சுட சாப்பிடுங்க மக்களே .
மிகவும் இலகுவான முறையில் இப்படி செய்து அசத்துங்க .







































































































