Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
ரஷ்யா நாட்டின் வாடகை இராணுவத்தின் மிக முக்கிய ஊடக நபர் ஒருவர் ,
மத்திய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஓட்டலில் குண்டு வெடிப்பு
மூலம் படு கொலை செய்யப்பட்டுள்ளார் .
ரஷ்ய ராணுவ செய்தியாளர் விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப் பட்டார்
என உக்ரைன் அறிவித்துள்ளது .
வாடகை இராணுவத்தினருக்கு உரிய கொட்டல் ஒன்றில் வைத்தே,
இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது உக்ரைன் தரப்பினர் .
இது ரஷ்ய மற்றும் ரஷ்ய வடக்கை இராணுவத்தினருக்குள் மோதல்
உள்ளதான தோற்ற பாட்டை காண்பிக்கிறது .
சமீப காலங்களாக புதின் மற்றும் ரஷ்ய முக்கிய நபர்கள் ,
இவ்விதமான குண்டு வெடிப்பின் மூலம்,
கொலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்
போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்
போலந்தில் தயாரிக்கப்பட்ட 100 ரோசோமாக் பல்நோக்கு கவச வாகனங்களை ,
உக்ரைன் ஆர்டர் செய்துள்ளது என்று போலந்தின் பிரதமர் தெரிவித்தார்.
தெற்கு போலந்து நகரமான சிமியானோவிஸ் ஸ்லாஸ்கியில் உள்ள ரோசோமாக் உற்பத்தித் தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஆர்டர் செய்துள்ளேன் என்று மேட்யூஸ் மொராவிக்கி கூறினார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து போலந்து பெற்ற நிதி மற்றும் உக்ரைன் பெற்ற
அமெரிக்க நிதிகள் மூலம் இந்த கவச வண்டிகள் வாங்கிட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
ஆயுதங்களை வாங்கி வாங்கி உக்ரைன் ரஸ்யாவை அடிக்கின்ற பொழுதும் ,ரஷ்யஎனக்கு நோ ஏதும் இல்லை என எழுந்து ,வேகமாக உக்ரைனை தாக்கி வருவதால் ,ஜெலன்ஸி சீற்றம் அடைந்துள்ளார் .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினர் இன்றும் கடும் மோதலில் ஈடுபட்டனர் .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ரஷ்ய பாரிய முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
இந்த படை நகர்வுக்கு கடும் ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி
தாக்குதல் சூட்டு ஆதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்
விமானங்கள் தாக்குதலை நடத்தின .
ரஷ்ய ஏவிய தற்கொலை விமானங்களில் ஆறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,
620 ரஷ்ய வீரக்ள பலியாகியுள்ளதாக வழமையான ஊடக அறிக்கையில் ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
எனினும் தமது தாக்குதல்களில் உக்ரைன் பலத்த ஆயுத ஆளணி
சேதங்களை சந்தித்து உள்ளது எனரஸ்யா தெரிவித்துள்ளது .
முன்னேறும் ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்தி நாட்டை
காப்பாற்ற எப் 16 ரக போர் விமானங்கள் ,சிறுத்தை டாங்கிகள் ,
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அவசரமாக வழங்கும் படி ,
அமெரிக்க பிரிட்டனிடம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கோரிக்கை விடுத்துள்ளார் .
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்கா இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ
தியேட்டரில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியும் , 28 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கலீல் – ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 260 பேர்,
ஹெவி மெட்டல் இசை நிகழ்ச்சியை நடத்தும் இடத்திற்குள் இருந்ததாக,
பெல்விடேர் தீயணைப்புத் தலைவர் ஷான் ஷாடில் தெரிவித்தார்.
கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இருப்பினும் சம்பவ தினம் இரவு 7:45 மணிக்கு ஒரு சூறாவளி எச்சரிக்கை குறித்து,தேசிய வானிலை சேவை அறிவுறுத்தல் விடுக்க பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு அவர்கள் கேட்கும் நீண்ட ஏவுகணைகளை வழங்கிட,
அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது .
பல்வேறு பட்ட ஏவுகணைகள் ,ராடர்கள் ,உளவு விமானங்கள் ,
மற்றும் பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது .
எனினும் அவற்றை வைத்து ரஸ்யாவை ,உக்ரைன் ராணுவத்தினரால்,
வெற்றி கொள்ள முடியவில்லை .
அதனால் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பட்டால் ,
ஒருவேளை அவை ரஷ்ய படைகள் வசம் சிக்கிவிட்டால் ,
அதனை போல வடிவமைத்து ,தமக்கு எதிராக பயன் படுத்த ,
ஆரம்பித்து விடும் என்பதால் ,இந்த ஏவுகணைகளை
வழங்கிவிட அமெரிக்கா இராணுவ தலைமையகம் தயக்கம் காண்பித்து வருகிறது .
இந்த சம்பவம் ,உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை கொலண்ட்
இராணுவத்தினர் வழங்கு கின்றனர் .

இந்த நாய்களின் செயல் சாப்பாடு மிக அளப்பெரியது என்கிறது கொலண்ட் இராணுவம் .ரஷ்ய படைகள் மண்ணுக்குள் ,மரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும்,குண்டுகளை தமது மோப்பம் ஊடக இலகுவாக கண்டு பிடிக்கும் வல்லமை கொண்டவை .
மேலும் வாகனங்களில் குண்டுகள் எடுத்து செல்ல பட்டாலும்,
இந்த நாய்கள் ,அந்த குண்டுகளை கண்டு பிடிக்கும் செயல் திறன்,
கொண்டவை என நெதர்லாந்து இராணுவம் தெரிவிக்கிறது .
அவ்விதமான 11 நாய்களையே கொலண்ட் ,
உக்ரைனுக்கு இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளது
லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்
லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்
லண்டன் Ashford Borough Council பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ,
குப்பை வாளிகளுக்குள் ,குப்பைகளை போடாது ,வீதியில் கொட்டி வீசிய குற்றத்திற்கு ,மாநகரசபை 1000 பவுண்டுகள் தண்டம் ,
அதாவது நான்கு லட்சம் இலங்கை ரூபாய்களை தண்டமாக அறவிட்டுள்ளது .
பிரிட்டனில் பிளாஸ்டிக்,போத்தல்கள் ,மட்டைகள் ,
குப்பைகள் போடுவதற்கு என குப்பை வாளிகள்
வைப்பதுண்டு ,அந்த விதிகளை மீறி ,வீதியில் வீசியதால் இந்த தண்டம்
அறவீடு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது .
பணத்தை செலுத்த தவறிய நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு
அந்த நபர்கள் அழைக்க பட்டுள்ளனர் ..
இவ்வாறு இலங்கை,இந்தியாவில் சட்டம் வந்தால்
நாடு உருப்படும் என வெளிநாட்டு தமிழர்கள் கருத்தாக உள்ளது .
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ
வெற்றி மாறன் விடுதலை படத்தை திரை அரங்கில் பார்க்க விடாது தடுத்த காவல்துறை அதிகாரியை திரை அரங்கில் வைத்து தமிழிச்சி ஒருவர் வெளுத்து வங்கியுளளார் .
தமிழ் அரசியலை காவல்துறை அட்டூழியங்களை பேசும் படமாக விடுதலை திரைப்படம் உள்ளது .
அதில் நிர்வாண காட்சிகள் காண படுகின்றன ,அதனால் இந்த விடுதலை திரைப்படத்தை, திரையில் பார்க்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து காவல்துறையினர் கலகத்தில் ஈடுபட்டனர் .
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்
காவல்துறையின் இந்த அட்டூழிய செயலானது, விடுதலை திரை படத்தை பார்க்க வந்த திரை அரங்கில், மக்கள் கொதித்து பேசும் காட்சிகள் , சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன ..
இந்த மக்கள் பேச்சுக்கள் வைரலாகிய வண்ணம் உள்ளதால் ,விடுதலை திரைப்படம் தொடர்பிலான எதிர் பார்ப்பும் மக்கள் ஆதரவும் அதிகரித்து காணப்படுகிறது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள் போர் ரோந்துகளை நடத்தி பதட்டத்தை அதிகரித்துள்ளன .இது தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் அமெரிக்க விஜயத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், ஒன்பது சீன விமானங்கள் , இடைநிலைக் கோட்டின் வடக்கு, மையம் மற்றும் தெற்கில் உள்ள புள்ளிகளில் கடந்து சென்றதாக தெரிவித்துள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
இந்த எல்லை கோடானது , இது இரு தரப்புக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற இடையகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தைவானின் ஆயுதப் படைகள் அதன் சொந்த விமானம் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்தன .எனினும் மோதல்களை ஏதும் மேற்கொள்ள படவில்லை .
தைவானில் பதற்றத்தை ஏற்படுத்த அல்லது தாய்வானை மிரட்ட, சீனா இவ்வாறான அத்துமீறல்களை புரிந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக, கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டை சேர்ந்தவர்கள் ,அமெரிக்கா கனடா எல்லையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
திருட்டு தனமாக அமெரிக்கா எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தக்குழுவில் இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
இவர்களுடன் சிறுவர்களும் உள்ளே நுழைய முயன்றதாக போலீசார் தெரி விக்கின்றனர் .அவர்களது சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்கின்றன .
கடும் சினோவுக்குள் கால நிலையை கருத்தில் கொள்ளாது, சிறுவர்களை ஆளை கொள்ளும் ஆறு அடி உயரம் கொண்ட பனிக்கட்டி களை ஊடறுத்து ,அமெரிக்கா எல்லையை கடந்து, கனடாவுக்குள் நுழைய முயன்ற வேளையே இவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான இருவரில் ஒருவர் கனடா நாட்டு குடியுரிமை கொண்டவர் என ,அவரது கடவு சீட்டின் மூலம் கண்டறிய பட்டுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் மற்றும் தேடுதல் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் இராணுவ முக்கிய புரட்சிகர படை தளபதி ஒருவர் ,
சிரியா டமக்காஸ் பகுதியில் வைத்து இஸ்ரேலின் ஆள் ,
இல்லா உளவு விமானம் மூலம் கொலை செய்யப் பட்டுளளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து ,ஈரானுக்கு எதிரான,
பல படை நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் .மேலும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகருமாக விளங்கி வந்தார் .
அவ்வாறான முக்கிய தளபதியை துல்லியமாக, கண்காணித்து போட்டு தள்ளியுள்ளது இஸ்ரேல் .
மேலும் லெபனானின் ஹிஸ்புல்லா ,ஜிகாத் ,கமாஸ் போன்ற,
போராளி குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி,
ஒருங்கிணைத்து வந்துள்ளார் .
ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
அவ்வாறான மிக முக்கிய படை தளபதியை ,
குறி தவறாது இஸ்ரேலியா இராணுவம் போட்டு தள்ளியுள்ளது .
ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் அனுபவம் வாய்ந்த ,
தளபதி கொலை செய்யப்பட்டதற்கு ,இஸ்ரேல் விரைவில் விளைவை சந்திக்கும் என ,ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .
சோலைமானி கொலையை அடுத்து ,அவரை போன்று உருவாகி வரும் ,
தளபதிகளை இஸ்ரேல் தொடராக கொலை செய்தவண்ணம் உள்ளமை ,
இங்கே கவனிக்க தக்கது .
இந்த செய்தி குரல் வடிவில் கேட்க இதில் அழுத்துங்கள்
அமெரிக்கா உலங்குவானூர்தி விபத்து 9 இராணுவம் பலி
அமெரிக்கா உலங்குவானூர்தி விபத்து 9 இராணுவம் பலி
அமெரிக்கா Trigg County, Kentuck பகுதியில் இராணுவத்தின் உலங்குவானூர்தி ,
இரண்டு வானில் மோதி வீழ்ந்து நொறுங்கின .
இந்த இரன்டுவ உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி ,
9 இராணுவம் பலியாகியுள்ளனர் என, அமெரிக்கா இராணுவம் அறிவித்துள்ளது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் கடனுதவி
பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் கடனுதவி
பாகிஸ்தானுக்கு சீனா அரசனது இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இந்த கடன் உதவி அவசரகால செயல்பாட்டுக்கு வழங்க .படுகிறதும்
மீளவும் சீனாவின் வலைக்குள் வசமாக பாகிஸ்தான் சிக்கியுள்ளது எனலாம் .
இதுபோலவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சிக்கியுள்ளது .
இலங்கை பாகிஸ்தான் நான்கு வருடங்களின் பின்னர் சோமாலியாவாக மாறும் நிலை ஏற்பட போவதை இன்றே அடித்து கூறலாம்
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி விற்று வந்த
செலவொக்கிய நாடடை சேர்ந்த ஆயுத தரகர் ஒருவர்,
அமெரிக்காவினால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
கடந்த வருடத்தில் இருந்து டயன் வகையான ஆயுதங்களை ,
வடகொரியாவிடம் இருந்து கொள்வனவு செய்து ,
ரஸ்யாவுக்கு விற்று வந்துள்ளது அமபலமாகியுள்ளது .
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
56 வயதுடைய நபரே இந்த ஆயுத முகவராக செயல் பட்டு ,
உக்ரைன் களத்திற்கு ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்தார் ,
என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .
குறித்த நபர் எவ்விதமான ஆயுதங்களை எந்த காலத்தில் பெற்று கொடுத்தார் என்பது தொடர்பிலான ,முக்கிய தகவல்களை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது .
இந்த ஆயுத முகவரது ,கணக்குகள் யாவும் முடக்க பட்டுள்ளன .
மேலும் சிலரை கைது செய்திடும் நடவடிக்கையில்,
அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் நாட்டின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்கள் ,ஜெர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
ஜெர்மன் நாட்டுக்கு முதன் முதலாக பயணித்த இளவரசர் என்ற பெயரை,
நீண்ட காலத்தின் பின்னர் இளவரசர் சாள்ஸ் தட்டி செல்கிறார் .
ஜெர்மன் சென்ற பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அங்கு ,பிரிட்டன் இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் .
ஆறு ஒன்றின் மேலாக அமைக்க பட்ட இயந்திர பாலம் ஒண்றினை கடந்து சென்று அங்கிருந்த மக்களை பார்வை இட்டார் .
பலத்த இராணுவ காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர்
ஜெர்மன் பயணம் அமைந்துள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,ரஷ்யா எல்லையோர நாடு ஒன்றுக்கு இளவரசர் சாள்ஸ் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கொசு விரட்டியால் டெல்லியில் கொசு விரட்டி மருந்தை பயன்படுத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர்.
by TaboolaSponsored Links How to avoid mutilating yourself in pursuit of beauty? Simpla 360 This Is How People Over 35 Lose Weight Fast Support My Weight தோனி மட்டும் இதை பண்ணா மேட்சே மாறும்.. 4 இம்பாக்ட் வீரர்கள்..
சிஎஸ்கே களமிறக்கும் அசாத்திய யுக்தி? இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது.
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
எனவே அவர்கள் அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அதை முழுவதும் பரவியிருக்கும். கலாஷேத்ரா விவகாரம்..
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்..சட்டசபையில் முதல்வர் உறுதி அதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம் வைர நகைகள் மாயம்
யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம் வைர நகைகள் மாயம்
பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்.
52 வயதில் நிர்வாண போஸ்.. பாத் டப்பில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய பத்மா லக்ஷ்மி
52 வயதில் நிர்வாண போஸ்.. பாத் டப்பில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய பத்மா லக்ஷ்மி
52 வயதாகும் சென்னையை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் டிவி நடிகையான பத்மா லக்ஷ்மி பாத் டப்பில் ஆடை அணியாமல் உணவு உண்ணும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
ரஷ்யா வடகொரிய புது டீல் ஒன்றை புரியும் திட்டமிடல் வகுக்க பட்டு
செயல் பாட்டு காட்சிக்குள் வந்துள்ளன ,இந்த் திடீர் புது டீலினால் கடுப்பாக்கியுள்ளது அமெரிக்கா.
உக்ரைன் போருக்கு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கிட ,வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .அதற்கு கைமாறாக அல்லது அதற்கு பண்டமாற்றாக ,உணவு பொருட்கள் வழங்கிட ரஸ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
உணவு பொருட்களை பெற்று கொண்டு, அதற்கு ஆயுதங்களை வாங்கிட ,ரஸ்யா புதிய டீல் செய்துள்ள நிலையாலே, அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .
வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து ,உலக வரைபடத்தில் இருந்து வடகொரியாவை அழித்துவிட ,அமெரிக்கா கூட்டு நாடுகள் வலையை விரித்த நிலையில் .அந்த வலையை அறுத்தெறிந்து வடகொரியா துணிகரமாக பயணிக்கும் செயலாக ,ரஷ்யா புது ஆடுகளத்தை திறந்து வைத்துள்ளது .
ரஷ்ய வடகொரியாவின் இந்த கூட்டு நகர்வு ,அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவில் வானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள் பலர் மரணம்
அமெரிக்காவில் வானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள் பலர் மரணம்
அமெரிக்கா கென்டக்கியின் ட்ரிக் கவுண்டியில் இரு இராணுவ உலங்கு வானூர்திகள் நேரெதிர் மோதி வீழ்ந்து நொறுங்கின .
இதன் பொழுது அந்த உலங்குவானூர்தியில் பயணித்த இராணுவத்தினர் பலர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த உலங்கு வானூர்திகள் மக்கள் வீடுகளுக்குள் மேல் ,
வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
இரவு பயிற்சிப் பணியின் போது இரண்டு அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள்,பயிற்சியில் ஈடுபட்ட வேளை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
101வது வான்வழிப் பிரிவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் வீழ்ந்து நொறுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விபத்துக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .












































