Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இராணுவ தளபதி தடை – அமெரிக்காவுடன் இலங்கை அவசர பேச்சு
இராணுவ தளபதி தடை – அமெரிக்காவுடன் இலங்கை அவசர பேச்சு
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா
அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அமெரிக்க அதிரடி
தடையை விதித்தது .
இதனை அடுத்து இன்று இலங்கை வெளியுறவனு
அமைச்சர் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவருடன்
அவசர பேச்சில் ஈடுபட்டுளளார் .
இந்த தடையை விலக்கும் படி இவர்களிடம் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
போர் குற்ற சாட்டில் சிக்கி தவித்துள்ள சவேந்திர சில்வாவின்
இந்த பயண தடை என்பது
இலங்கை அரசுக்கு போட பட்டுள்ள சுருக்கு கயிறாகும் ,இதில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவிலை

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை – அனலைதீவு கடல் பகுதிக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடு பட்டார்கள் என் தெரிவித்து சுமார் 11
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது .
அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன் உள்ளிட்ட அணைத்து பொருட்களையும் சிங்கள படை அபகரித்து
சென்றுள்ளதுடன் கைதானவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றிலேமுன்னிலை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளது
புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

கூத்தமைப்பு அரசுக்கு விலை போகாதாம் – கூவிய செல்வம்
கூத்தமைப்பு அரசுக்கு விலை போகாதாம் – கூவிய செல்வம்
தமிழ் தேசிய கூத்தமைப்பு ஒருபொழுதும் ஆளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பாடாது எனவும் ,தனது ஆதரவை
வழங்காது எனவே செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .
இவரது இந்த பேச்சு தான் தேர்தலில் வென்றிட வேண்டும் என்பதான செயலின் ஒன்றாக பார்க்க படுகிறது
இம்முறை இவர் தனது ஆசனத்தை இழக்க கூடும் என்ற நிலையில் இவ்வாறு பேசி வருகின்றார் என மக்கள் மத்தியில் பேச படுகிறது

லஞ்சம் பெற முயன்ற காவல்துறை அதிகாரி கைது
லஞ்சம் பெற முயன்ற காவல்துறை அதிகாரி கைது
இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் லஞ்சம்
பெற முயன்ற பொழுது இரகசிய கண்காணிப்பு
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .
2500 இரகசிய போலீசார் லஞ்சம் வாங்கும் போலீசாரை
கண்காணித்து வருவதாக தெரிவிக்க பட்டிருந்த நிலையில்
இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
வவுனியாவில் மூன்று சிறுமிகள் கற்பழிப்பு; மூவர் கைது
வவுனியாவில் மூன்று சிறுமிகள் கற்பழிப்பு; மூவர் கைது
வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த
பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த
உறவினர் ஓருவர் பாலி யல் வன்பு ணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலில்
மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை
சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக
வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து
அவருடைய தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வ
ன்புணர்வு குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஓருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சிறுமியின் தந்தைதான் 39 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது
வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கை படுகொட பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க பட்ட தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்
கட்டு துவக்கு வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ்
கட்டு துவக்கு வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ்
இலங்கை பூந்தல பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி கட்டு துவக்கு வைத்திருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார் .
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்கள் கைது செய்ய பாடுவார்கள் என அரசு எச்சரித்திருந்த
நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

London’s Euston ரயில்வே நியலைத்தில் காத்து குத்து- சிதறி ஓடிய மக்கள்
London’s Euston ரயில்வே நியலைத்தில் காத்து குத்து- சிதறி ஓடிய மக்கள்
பிரிட்டன் -London’s Euston station ரயில்வே நிலையத்தில் நபர் இருவர்
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளானர் .
இதனால் அங்கிருந்த பயணிகள் பீதியில் ஓடினர் .
சம்பவம அறிந்து விரைந்து வந்த ஆயுத பொலிசார் நிலைமையை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
பிரிட்டனில் காத்தி குத்து தாக்குதல்கள் தற்போது அதிகரித்து செல்கிறது
இது பொலிசாருக்கு பெரும் சவாலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்; களமிறங்கிய தொண்டர்கள் photo
வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்; களமிறங்கிய தொண்டர்கள் photo
வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை
கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன்
ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான
முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக எவ்வித ஊதியமும் இன்றி அவர்களுக்காக சேவையாற்ற தயராகவுள்ள கை
கொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்களுக்கான பயிற்சி பாசாறை வவுனியா
குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலய மண்டபத்தில் இன்று (15.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.
இதன் பொது தொண்டர் ஊழியர்களுக்கு தற்கொலைகள் ஏன் இடம்பெறுகின்ற அதற்காக தீர்வினை எவ்வாறு
வழங்குவது , அவர்களுடன் எவ்வாறு அனுகுவது தொடர்பாக சமூக ஆர்வளர் நித்தியானந்தன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்..




அரச அதிகாரிகளிடம் கேள்வி கேட்க தயாராகும் வவுனியா கிராம மக்கள்; பின்னனியில் நிறுவனம் photo
அரச அதிகாரிகளிடம் கேள்வி கேட்க தயாராகும் வவுனியா கிராம மக்கள்; பின்னனியில் நிறுவனம் photo
“கிராமத்திற்கு தகவல் உரிமை” என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை கருத்தரங்கு வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நடைபெற்றது.
வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் அப்ரியல்
இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவையின் மூலமாக தகவல் சட்டம் தொடர்பில் மக்களை
தெளிவுபடுத்தல் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கல் என்பன இடம்பெற்றன.
அத்துடன் தகவல் கோரும் படிவம் பூரணப்படுத்துதல் மற்றும் பொது நிறுவனங்களை உறுதியாக அடையாளம்
காண்பது தொடர்பில் பிரசைகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.
அப்ரியல் இளைஞர் வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் , ஊடக அமைச்சின் உதவி செயலாளர் எம்.பி பண்டார மற்றும் ஊடக
அமைப்பின் உயர் அதிகாரிகள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் அப்ரியல் இளைஞர் வலையமைப்பின்
ஊழியர்கள் ,பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்




வவுனியாவில் இந்திய குழுவினர்; விசா பெற இலகு வழி photo
வவுனியாவில் இந்திய குழுவினர்; விசா பெற இலகு வழி photo
வடமாகாண மக்களுக்கு ஆலோசனை சேவை வழங்கும் செயற்றிடத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக
குழுவினர் இன்றையதினம் (15.02) வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பு வவுனியா அரிசி ஆலை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று
காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.30 வரை இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூரகத்தின் அபிவிருத்தி , விசா , கடவுச்சீட்டு போன்றவற்றின் பிரதம அதிகாரி
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் உதவி அதிகாரி சுரேஸ்குமார் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு இந்தியன் விசா பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள
பிரச்சனைகள் , கல்வி புலமைப்பரிசில் , வவுனியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் பிரச்சனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள்
வழங்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக வருகை தந்திருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.




வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நிலத்தை தோண்டி விசேட தேடுதல் photo
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நிலத்தை தோண்டி விசேட தேடுதல்
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் இன்று (15.02) காலை மர்ம பொருட்களை தோண்டும் பணிகள் இடம்பெற்றது.
நேற்று (14.02) காலையிலிருந்து காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று (15.02) குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், தடயவியல் பொலிஸார், விஷேட
அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள்,
கிராமசேவையாளர் முன்னிலையில் பக்கோ இயந்திரம் மூலம் தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் முன்னாள் போராளி என்று
தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் பிக்கான், அலவாங்கு மற்றும்
பூசைப்பொட்கள், பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம்
வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூடப்பட்டிருந்தது.





கொரனோ வைரஸ் ஒரே நாளில் 150 பேர் பலி -60.000 பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் ஒரே நாளில் 150 பேர் பலி -60.000 பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 150 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இதுவரை இந்த நோய் தாக்கத்தில் சிக்கி கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் உயிர் பலியை தடுக்க இதுவரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை
தொடர்ந்து லட்ஷத்துக்கு ,மேற்பட்டோர் இந்த நோயின் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளனர்
உயிர் ர் பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

10 கோடி தங்கத்துடன் நபர்கள் சுற்றி வலைப்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு
10 கோடி தங்கத்துடன் நபர்கள் சுற்றி வலைப்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு
இலங்கை மாதகல் கடற்பரப்பில் படகு மூலம் தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கடல் படையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெரும் தொகையில் தங்கம் மீட்க பட்டுள்ளது ,மேலும்
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

அந்த செயலை புரிந்த பெண் உள்ளிட்ட 10 பேரை அள்ளி சென்ற பொலிஸ்
அந்த செயலை புரிந்த பெண் உள்ளிட்ட 10 பேரை அள்ளி சென்ற பொலிஸ்
கொழும்பு கருவத்திட்டம் பகுதியில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் அள்ளி சென்றுள்ளனர்
பிரபல விடுதி ஒன்றில் இவர்கள தங்கி இருந்த பொழுதே இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது
காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

சின்னம் எதுவானாலும் சரி. ஆனால் தேர்தல், பதிவு செய்யப்பட்ட கூட்டணியில்தான்!மனோ கணேசன்
இதயம், அன்னம், யானை என்று சின்னம் எதுவானாலும் சரி. ஆனால் தேர்தல், பதிவு செய்யப்பட்ட கூட்டணியில்தான்!
- மனோ கணேசன்
தேர்தலில் சின்னம், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், “அன்னப்பறவை” யை ஏற்றுக்கொள்வோம். ஆனால், தேர்தலை பதிவு செய்யப்பட்ட
கூட்டணியிலேயே சந்திப்போம். கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐதேக பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும்
இடம்பெறுவோம். கூட்டணியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டாரவும், வேட்பாளர் தெரிவுக்குழுவின்
தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்கள். இவை எங்கள் இந்த குறைந்தபட்ச நிலைப்பாடுகள். இவற்றை
ஐதேக செயற்குழு ஏற்கும் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் எம்பி கூறினார்.
புதிய எதிரணி கூட்டணி தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைக்குழுவில் பங்காளி கட்சி
தலைவர்கள், பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார, வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய
எங்கள் குறைந்தபட்ச நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சஜித் பிரேமதாச
தலைமையிலான பெரும்பான்மை ஐதேக அணியினரும், அனைத்து பங்காளி கட்சிகளும், இணைந்து நாம் ஏற்கனவே
பதிவு செய்து, தயார் நிலையில் வைத்திருக்கும் எமது கூட்டணியின், “இதயம்”, சின்னத்தில் பொது தேர்தலை நாம் சந்திப்போம்.
இதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே சஜித் பிரேமதாசவும், அனைத்து கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சி, கூட்டணியில் பிரதான கட்சி. அந்த கட்சி பிளவுபடக்கூடாது. இதில் நாம் மிகவும் அக்கறை
கொண்டு இருக்கிறோம். உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பெரும்பான்மை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், இன்றைய உள்ளூராட்சி மன்ற பெரும்பான்மை
உறுப்பினர்கள், பெரும்பான்மை கடைநிலை உறுப்பினர்கள் சஜித் அணியுடன்தான் இருக்கின்றார்கள். நாங்களும் அவர்களுடன் இருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடக்கூடாது என்ற சஜித் தலைமையிலான எமது ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை
எவரும் எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட முயலக்கூடாது. அப்படியான விளையாட்டு முயற்சியில்
எவரும் ஈடுபட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணியின் இதயம் சின்னத்தில் நாம் நிச்சயம்
களமிறங்குவோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன.
பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார,
வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச, என்பவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த
தீர்மானங்கள்தான். இன்று இவற்றில் இருந்து பின்வாங்குவது யார் என மக்களுக்கு தெரியும். எங்களுடன்
முரண்படுகின்றவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். ஐதேக பிளவுப்படுமானால், அதற்கான முழு பொறுப்பை
எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும். இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய
செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன்.
சுவிசில் மனித உரிமை ஆணையாளரை சந்தித்த சுமந்திரன் -இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கை
சுவிசில் மனித உரிமை ஆணையாளரை சந்தித்த சுமந்திரன் -இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கை
சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனிவாவுக்கு சென்றுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மனித உரிமை
ஆணையாளரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்
இந்த சந்திப்பில் இவர் என்ன பேசி கொண்டார் என்ற விடயம் தெரிவிக்க படவில்லை ,.
இம்முறையும் இலங்கையை காப்பாற்றும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கடலில் மிதந்து வந்த பொதிகள்
கடலில் மிதந்து வந்த பொதிகள்..! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருகோணமலை கடற்பரப்புக்கு 180 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துக் கொண்டிருந்த ஐஸ் வகை
போதை பொருள் அடங்கிய மூன்று பொதிகளை மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறை முகத்திற்கு வருகை தந்த படகில் இருந்த மீனவர்களே இந்த போதை பொருள் பொதிகளை கண்டெடுத்துள்ளனர்.
பின்னர் அந்த பொதிகளை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

14 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
14 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கை காவல்துறை தலைமையகத்தினால் வழங்க பட்ட
பதவி உயர்வுகளை அடுத்து 14 காவல்துறை அதிகாரிகள்
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இட மாற்றம் செய்ய
பட்டுள்ளனர்
இலங்கை காவல்துறையில் இடம்பெற்று வரும் அதிரடி
மாற்றங்களில் இவையும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது

மது போதையில் வண்டி ஒட்டிய -குடிகார பெண் கைது
மது போதையில் வண்டி ஒட்டிய -குடிகார பெண் கைது
இலங்கை அனுராதபுரம் பகுதியில் அதிக மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் .
இலங்கையில் புதிய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வீதி விதிமுறைகளை மீறுவோர் மீது அதிக தாண்ட பணம்
செலுத்த வேண்டும் என்ற நடைமுறை சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
அவ்வாறு நோக்கின் இந்த பெண் 25 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது video







