Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு
சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு
இலங்கையில் முஸ்லீம் இனத்தை சேர்ந்த 14 வயதுஸ் சிறுவன் ஒருவனை சிங்கள காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என மகிந்த மகன் நாமல் ,சங்ககாரா உள்ளிட்டவர்க்ள குரல் கொடுத்துள்ளனர்
போலீஸ் தலைமையகமும் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளது
சிங்கள காவல்துறையினர் ஊரடங்கு வேளையில் இவ்விதம் காட்டும் மிராண்டித்தனமாக மக்களை தாக்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கையில் கொரனோவை வென்றோம் – மகிந்தா திமிர் பேச்சு
புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கையில் கொரனோவை வென்றோம் – மகிந்தா திமிர் பேச்சு
நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின்போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப்
பின்பற்றியமையினாலும் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது என்று
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொசொன் றோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தேசத்தை நாகரிகமடையச் செய்த முதிர்ச்சியடையச் செய்த தேசத்தை முன்னேற்றி பாதுகாத்த புத்த மதத்திற்கு அடிப்படையாக
அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது.
இந்த தர்மவிஜய செய்தியுடன் அறியாமையினால் மங்கிப் போயிருந்த சிங்கள தீபம் சத்தியத் தத்துவம் காரணமாக பிரகாசம் பெற்று ஒளிவீசத் தொடங்கியது. அதன் மூலம் குறுகிய காலத்தில்
தூய கலாசாரத்தையும் கொண்ட நாகரிக மடைந்த தேசமாகமாற்றமடைந்தது. அதன் பிரதிபலனாக இந் நாட்டை ஒற்றுமைப்படுத்திய சிரேஷ்ட இளவரசர்கள், தீரமிகு தளபதிகள்
, காட்டிலிருந்த பாரிய கருங்கல்லில் அன்பு, கருணை, மன அமைதி போன்ற உயர்ந்த பண்புகளையும் சேர்த்துச் செதுக்கிய வியப்
பூட்டும் கலைஞர்கள், இயற்கையின் அழகை சொற்களில் வடித்த கவிஞர்கள் போன்றோர் இந்நாட்டை செழுமைப்படுத்தினர்.
இம்முறை பொசொனின் பிறப்புடன் உலக சுற்றாடல் தினமும் அதேதினத்தில் கொண்டாடப்படுகிறது. எமது மூதாதையரின் முழு உடம்பிலும் ஒன்றித்துப்போயிருந்த இந்த சிரேஷ்ட தத்துவம்
காரணமாக உயிரினங்கள் உட்பட இயற்கையின் அனைத்து அம்சங்கள் மீதும் நிதமும் அன்பு செலுத்தி, அவற்றைப் பாதுகாக்கின்ற பலமான தேசமொன்று தோற்றம் பெற்றது.
இன்று அதற்கு மாறாக நடந்துகொண்டமையினால் முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும்
என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும். நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும்,
புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப்பின்பற்றியமையினாலும் இலங்கை
அத்தொற்றுநோயை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது. இன்னும் சிறிய காலப்பகுதிக்குசுகாதார மற்றும்
பாதுகாப்புப் பிரிவினர் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாமனைவரும் செயற்பட வேண்டியுள்ளது
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் — போக்குவரத்து அமைச்சு
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் — போக்குவரத்து அமைச்சு
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் தி;ங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்pத
போக்குவரத்து அமைசசர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும்.
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில்
பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பஸ் களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள்
போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸகளை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் வங்கிகளில் உள்ள பணத்திற்கு அரசு பொறுப்பு இல்லை-மக்கள் பணத்திற்கு ஆப்பு
இலங்கையில் வங்கிகளில் உள்ள பணத்திற்கு அரசு பொறுப்பு இல்லை-மக்கள் பணத்திற்கு ஆப்பு
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வைப்பீடுகளில் 6,00 000 ரூபாவுக்கு மாத்திரமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறும்
நிதி நிறுவனமான த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்..
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வைப்பீடுகளில் 6,00 000 ரூபாவுக்கு மாத்திரமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான நிதி நிறுவனங்களில் 6,00 000 ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையை வைப்பீடு செய்வது தொடர்பில் பொது
மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிராம மக்கள் தமது பணத்தை வைப்பீடு செய்யும் கூட்டுறவு வங்கிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும்
இதுதொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருபபதாகவும் அமைசசர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டமையால்
சிரமங்களுக்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவைச கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர்
கௌரவ பிரதமரின் தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படதாகவும் தெரிவித்தார்.
இதன் போது , நிதி நிறுவனம் வீழ்ச்சியடைதல் மற்றும் மூடப்படுவதினால் வைப்பீட்டாளர்கள் எதிர்நோக்கும் சிரமம்
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி ஆளுனரினால் எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களின் மீது
நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறித்தும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
த பினான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்தில் கொள்ளும் பொழுது இந்த நிறவனம் ஏலமிடப்படும் வரையில் அந்த
நிறுவனத்தில் வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்ர் கூறினார்.
மத்திய வங்கியினால் இந்த விடயம் தொடர்பாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய 93 வீதமான வைப்பாளர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் வைப்பீட்டாளர்களின் பணத்தை விதிகளுக்கு அமைவாக செலுத்துவதற்கு .நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் இன்று சந்திர கிரகணம்
இலங்கையில் இன்று சந்திர கிரகணம்
இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் இன்று 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெறும் என்றும் அவர் கூறினார்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய
நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல்இ நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த
மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.
அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த
முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.
இருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி சந்திர
கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும். உணவுப்பொருட்களில் துளசி இலையை சேர்ப்பது
மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றை செய்யலாம்.மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ள கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு
எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான மரபுப்படி கிரகண நேரத்தின் போது வெளியே செல்லக்கூடாது.
இன்று உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்
இன்று உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்
குழுந்தைகளை பாதுகாப்போம்..
இனக்கலவரம் மதக்கலவரம் போர் வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும் பெண்களும் தான். போரின்போது பள்ளிக்
கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. அது மட்டும்மல்லவா வருமையிலும் குழந்தைகள் பாதிக்கின்றனர். என்று
கூறுகின்றார் உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மலையக மக்கள்
முன்னணியின் தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்…
தொடர்ந்து அவரது அறிக்கையில்
இன்று இலங்கை மலையகத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைந்துந்துள்ளது. குழந்தைகளுக்கு மந்த போஷணம் அதிகரித்து வருகின்றது. மலையக குழந்தைகளின் இந்த பிரச்சனைக்கு தீர்வு
காணப்பட வேண்டும் பாடசாலைகளில் சத்தணவுத்திட்டம் அனைவருக்கும் கிடைக்க அரசு புதிய திட்டங்களை முன் வைக்க
வேண்டும். மலையகத்தில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தல் பாலியல் துஸ்பிரயோகம் காரணமாகவும் குழந்தைகள் நாளாந்தம் பாதித்து வருகின்றனர். இதற்கு எல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்
ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த விடயம் மலையகத்தில் எத்தனை பேருக்கு தெரியும். மலையகத்தில் யுத்தம் நடைபெறாவிட்டாலும் இனக்கலவரம் உட்பட
பலவேறு காரணங்கினால் குழந்தைகள் நாளாந்தம் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் இருந்து நாமும் குழந்தைகளை பாதுகாப்போம் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தள்ளா

வாழைச்சேனை கடதாசி உற்பத்தி செயற்பாடுகள்- மீண்டும் ஆரம்பம்
வாழைச்சேனை கடதாசி உற்பத்தி செயற்பாடுகள்- மீண்டும் ஆரம்பம்
வாழைச்சேனை கடதாசி ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் அபிவிருத்தி
அமைச்சர் விமல் வீரவன்ச கடதாசி ஆலைக்கு (30 மே) விஜயம் செய்து இயந்திரங்களின் இயக்கங்களையும் உற்பத்தியையும் நேரில் பார்வையிட்டார்.
அத்தோடு மற்றைய கடதாசி வகைகளின் உற்பத்திகளையும் விரைவாக ஆரம்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை
தெரிவித்ததாக கடதாசி ஆலையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், கடதாசி ஆலையின்
உற்பத்தி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடதாசி ஆலை தனது உற்பத்தியின்
ஒரு பகுதியான ‘காட்போட்’ உற்பத்தியை இப்போது ஆரம்பித்துள்ளது.
இது இன்னும் ஓரிரு மாதங்களில் கடதாசி உற்பத்தியில் இறங்கிவிடும். எமது நாட்டின் கடதாசித் தேவையின் 78 விகித்தை
இது நிறைவு செய்திருந்தது. இதனுடைய அப்போதைய ஆளணி 3000 ஆகும். இதன் திருத்த வேலைகளை பாதுகாப்புப் படையின்
கடற்படை, இராணுவம் என்பன இந்திய பொறியியலாளர்களின் ஆலோசனையோடு நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யத்தன்பலாவ, குருணாகலை முகவரியில் வதியும் ஈ.எம்.பீ.ஏ குமார என்பவராகும்.
பணித் தடைக்கு உள்ளாகியுள்ள அவர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு
குறிப்பிட்டு ஜனாதிபதி அவர்களின் கடிதத் தலைப்பையும், ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்துடன் எழுதப்பட்டுள்ள
கடிதமொன்றையும் இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குமார என்பவரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன்
பின்னர் நேற்று (03) கைது செய்யப்பட்டார். ஆவணத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய
உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 08 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட
வடமேல் மாகாணத்தில் ‘வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும்
அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.
ஆனாலும் குறித்த மாகாணத்தில் நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால்
செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால்
அதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய ‘வனமி’ இறால் செய்கை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த ‘வனமி’ இறால் செய்கை
ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மத்திய வங்கி ஆளுநர் சுஜீவ ராஜபக்ஷவினால் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
பிரதமரின் விஜேராம இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. மத்திய வங்கியின்
பதில் பொது முகாமையாளர் பொனிபஸ் சில்வா,மற்றும் அஸாம் அஹமட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முல்லையில் தொடர் தற்கொலைகள் – நடப்பது என்ன ..?
முல்லையில் தொடர் தற்கொலைகள் – நடப்பது என்ன ..?
அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவின் மாத்தளன் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில்
மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அம்பலவன் பொக்கணை கிராமத்தினை சேர்ந்த 15 அகவையுடைய கிருஸ்மூர்த்தி துஸ்யந்தன் (மதுசன்) என்ற சிறுவனே இவ்வாறு
தவறான முடிவினால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்.
நேற்று காலை வீட்டில் இருந்து விளையாடிய சிறுவன் தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார்
வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டுள்ளான் .
தாயார் வேலை முடிந்து வீடு வந்து பார்த்தபோது சிறுவன் தூங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.
உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான் என வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்கள்
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
சிறுவனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
மொரட்டுவ தாக்குதல் – சிலர் கைது
மொரட்டுவ தாக்குதல் – சிலர் கைது
மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (03) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, காணாமல் போயுள்ளனர்.
ஒரு இடத்தில் இவரை நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்தில் தொழில் பார்க்கச்சென்றுள்ளனர்.திரும்பி வந்து பார்த்த போது, அவரைக்
காணவில்லை. பின்னர், மீனவர்கள் சேர்ந்து தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், சக மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண
விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு வலயத்தினால் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்
வவுனியா தெற்கு வலயத்தினால் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்
வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்தினால் மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாகவும்,
மாணவர்களை அதற்கு வழிப்படுத்துமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட்- 19 தாக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில்
க.பொ.த உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம், புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் எந்தவித
கட்டணமுமின்றி இலவசமாக வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கு அதிபர்கள் வழிப்படுத்துவதுடன், பாட ஆசிரியர்களும் தமது மாணவர்களின்
பங்குபற்றுதலை உறுதிப்படுத்தவும், குறித்த வகுப்புக்களில் பங்குபற்றாத மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும்
மேற்கொள்ளுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் , 05ஆம் , 06ஆம்
மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு
உட்படுத்தப்படவுள்ளதாகவும் , இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன்
பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.
இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole)
ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய
இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும்
அறிவிக்கப்ட்டுள்ளது.
கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக
முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம்
தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம்
ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்
சுமார் நான்கே வருட காலம் ஆட்சியில் பங்காளியாக இருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக வரலாற்றில் பல சாதனைகளை
செய்து முடித்துள்ளது. இலங்கையில் மாறி, மாறி வந்த அரசாங்கங்களில், 1978ம் ஆண்டு முதல் சுமார் 38 வருடங்கள்
ஆட்சியில் இருந்த, பல மலையக கட்சிகளின் சாதிப்பு எமது இந்த நான்கு வருட சாதனை பட்டியல் நினைவில் நிற்கும்படியாக
உள்ளதை ல் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் இன்று நினைவு கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்
முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
2015ம் வருடம் ஜூன் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையிட்டு
கருத்து கூறியுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார பரப்பின் சகல துறைகளையும் குறுக்கு வெட்டாக ஊடறுத்து சென்றுள்ளது.
எமது கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், எமது பொது செயலாளராக அன்டன் லோரன்ஸ் மற்றும் இன்றைய பொது
செயலாளர் சந்திரா சாப்டர் உட்பட எமது ஆலோசகர்களாக இருந்த வாமதேவன் மற்றும் பெ. முத்துலிங்கம் ஆகியோரின் பங்களிப்பில் இந்த சாதனைக நிகழ்த்தப்பட்டுள்ளன.
எமது முதற்கட்ட கட்டமைப்பு சாதனை பட்டியலை இன்று வெளியிடுகிறேன். இது தவிர நுவரெலியா, கொழும்பு, கண்டி,
பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் வாடா கிழக்கு மாவட்டங்களான
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றில்
அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அடுத்த பட்டியலில் வெளியிட உள்ளேன்.
முதற்கட்ட கட்டமைப்பு பட்டியல்:
1) தொழிலாளர் குடும்பங்களுக்கு தோட்டங்களில் “ஏழு பேர்ச் காணி” வழங்களுக்கான இலங்கை அரசின் அமைச்சரவையில்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2) “நாங்கள் இனிமேலும் நாட்கூலி தொழிலாளர்களாக இருக்க மாட்டோம், எதிர்காலத்தில், கிராமவாசிகளாக மாறுவோம்” என்ற
கொள்கையின்படி, மலையகத்தின் புத்தெழுச்சியை உறுதிப்படுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின் பேரில், “மலையக புதிய கிராமங்கள்..” என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டது.
3) நான்கு வருடங்களாக ஆரம்பிக்கப்படாமல் நின்று போயிருந்த “இந்திய அரசின் வீடமைப்பு உதவி திட்டம்”, இந்திய
அரசாங்கத்துடன், எமது “புதிய மலைநாட்டு கிராமங்கள்…” அமைச்சு கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
4) அமைச்சரவை பத்திரத்தின்படி எமது நல்லாட்சி அரசு வழங்கிய சொந்த காணிகளில் சொந்த உறுதி பத்திரம் கொண்ட “தனி வீடுகள்” மலைநாட்டில் கட்டப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
5) கடந்த காலத்தின் “லயன் குடியிருப்பு“ என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து, கட்டப்படும் அக்குடியிருப்புகள், “மலையக தமிழ் கிராமங்களாக” அறிவிக்கப்படும் நடைமுறை ஆரம்பமானது.
6) அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின்படி “மலையக அபிவிருத்திக்கான அதிகார சபை” உருவாக்கப்பட்டது.
7) மலையகத்தில் அரசியல் அதிகார பகிர்வு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில், “புதிய ஆறு பிரதேச சபைகள்” அமைக்கபட்டன.
8) புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமானது.
9) “மலையக மக்களால் வாக்களித்து பிரதேச சபைகளை தெரிவு செய்யும் பிரதேச சபைகளால், தோட்ட புறங்களுக்கு நிதி ஒதுக்கி,
அபிவிருத்தி செய்ய முடியாது” என்ற 30 வருட அடிமை சட்ட விதி அமைச்சரவையில் தூக்கி எறியப்பட்டு, மலையக தோட்டப்புற
பிரதேச சபைகளின் அதிகார எல்லை 33ம் விதி சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.
10) சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக அண்மை காணிகளை பிரித்து வழங்குதல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
11) மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில் காத்திரமான சம பங்கும், அந்தஸ்தும் வழங்கப்படுவது, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
12) பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டி, அவர்களை
வெளிப்பயிர்செய்கை வருமான திட்டத்தின் அடிப்படையில் “மலையக தமிழ் விவசாயி”யாக மாற்றும் சிறுநில உடைமையாளர் திட்டம், கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
13) “மலையக பல்கலைக்கழகம்” பற்றிய சாத்தியப்பாட்டு அறிக்கை, மலையக சான்றோர் குழுவினாரால் தயாரிக்கப்பட்டு, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு பளையை சேர்ந்த தமிழ் போலீசார் பலி
கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு பளையை சேர்ந்த தமிழ் போலீசார் பலி
கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு போலீசார் பலி
வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு
பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன் போது இன்று காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், – வீதி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லையில் கிணற்றில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லையில் கிணற்றில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில்
கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த யுவதியின் உடலம் கிணற்றில் கிடப்பது இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட
நிலையில் கொலையா? தற்கொலையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.







