Posted in இலங்கை செய்திகள்

புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்

புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்

புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்த வர்த்தக நிலையங்களை

நாளாந்தம் காலை 5.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்கமைவாக இன்றைய தினம் அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

வியாபாரிகள் கணிசமான அளவு பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் 50மூ ஊழியர்களை பணியில் ஈடுப்படுத்தி மொத்த

வர்த்தகம் இடம் பெறுவதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.

தட்டுபாடு இன்றி அனைத்து அத்தியவசிய பொருட்களும் புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் இருப்பதாகவும்

Posted in இலங்கை செய்திகள்

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. பிரெண்டா பார்டொன்

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார்.

நாட்டின் மூலோபாய திட்டம் 2018-2020 ஊடாக உலக உணவுத் திட்ட உதவியின் மூலம் அதற்கான ஒத்துழைப்பை தொடர தேசிய

முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அதற்கேற்ப தற்போதைய நாட்டின் மூலோபாயத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உலக உணவுத் திட்ட

நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த

ரணசிங்க, ஐநாவின் உலக உணவு த் திட்ட கொள்கை திட்ட அதிகாரி திரு. அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை திருமதி. பார்டன் பாராட்டினார்.

மேலும், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னெடுகப்படும் நடவடிக்கைகள் மற்றும் தற்போது நாட்டில் நிலவும் நிலைமைகளின் போது உலக உணவுத் திட்டத்தினால்

இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நாட்டில் குறிப்பாக தொற்று நோய் பரவல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளையில் உலக உணவுத் திட்ட நிறுவனம் இணை

நிறுவனங்களுடன் இணைந்து அவற்றுக்கு நிலையான தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டிய விதம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தங்களின் போதான அவசர நிலைமைகளின் போது கடந்த காலங்களில் உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட

உதவிகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

முப்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் சிறப்பான

நடவடிக்கைகள் குறித்து உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் வதிவிடப் பிரதிநிதி இதன் போது குறிப்பிட்டார்.

தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, ஊரடங்குச் சட்டம்

அமுல்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உயர்வான சேவையை வழங்க இராணுவ – சிவில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சமாதானத்திற்கான நோபல் பரிசை வெற்றிகொண்ட

உலக உணவுத்திட்ட நிறுவத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை துவங்குவதற்கு முன்னர் மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் செய்வதற்காக உணவு

அல்லாத உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தகவல் தொழிநுட்ப உபகரணங்களை உலக உணவுத் திட்ட நிறுவனம் இதன் போது வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு
உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்

ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்

மேலும் பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19

தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.

இதற்கமைவாக ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்

அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்

ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அது தற்சமயம் நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துவகைகளை கொள்வனவு

செய்வதற்காக வாரத்திற்கு இரண்டு நாட்கள் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.


காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் திறந்திருக்குமென கொவிட்-19 தொற்றுப் பரவலைத்

தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.

Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ

இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை

முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 3 மாவட்டங்கள் அதி அபாய வலயமாக அறிவிப்பு

இலங்கையில் 3 மாவட்டங்கள் அதி அபாய வலயமாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை

ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு மாட்டத்தின் ஏழு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 19 பொதுசுகாதார பரிசோதகர்

பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, பத்தரமுல்ல, கொலொன்னாவ, கஹத்துடுவ, மொரட்டுவ, கடுவலை ஆகிய மாநகரசபைப் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில், ராகம, வத்தளை, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வெயாங்கொட

மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்கள் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மேற்படி மாவட்டங்களின் 27 சுகாதார பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

பேலியகொட மீன்சந்தை கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கோரளைப்பற்று மத்தி

பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புடைய இரண்டாங் கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும்வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. க.

கருணாகரன் தலைமையில் நேற்று (26) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான

உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.

இன்று (27) முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும் மிக

அவசியமாக நடாத்தப்படவிருப்பின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

மேலும் சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்படவேண்டும்.

ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகமைவாக செயற்படுவதுடன்,

மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.

இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினைக்

கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்படும்.

சந்தைகளை திறந்த மைதானங்களில் நடாத்துவதுடன், உணவகங்களில் உட்காந்து உண்பதற்கு 50 வீதம

அனுமதிக்கப்படுவர். பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகளையே ஏற்றப்படல் வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் காவல் பிரிவு செயற்படுவதுடன்

பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட

நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசேட பணிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

கொவிட் – 19 தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளம்

கொவிட் – 19 தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளம்

கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை

வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல்

திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் சற்று முன்னர் நடைப்பெற்றது.

இதன் போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட் – 19 தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள

நிலைமை தொடர்பாக நேற்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தனியார்துறை ஊழியர்கள் சம்பளம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக ஏற்கனவே இதற்காக அமைக்கப்பட்ட செயலணியிளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவர்களுக்கான சம்பள நடைமுறையை இவ்வருடம் செப்டம்பர் மாதம் தொடக்கம்

டிசம்பர் மாதம் வரையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை அரசாங்கம் தனியார்துறையினருக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் வருமாறு.

17) கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள ச10ழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடித்தல்

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள ச10ழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர்

ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியால் 2020 மே மாதம்

தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கீழ்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடன்பட்டு அதற்கமைய மேற்கொள்ளப்பட்டது.

• கொவிட் 19 தொற்றால் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்காமல் இருத்தல்

• சமூக இடைவெளியைப் பேண வேண்டியிருப்பதால், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்துவதற்கு இயலாது

போவதால் ஊழியர்களை நேரசூசி அடிப்படையில் அல்லது வேறு பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி சமமாக பணிபுரியும் வகையில் பணியில் அமர்த்துதல்

• வேலை இல்லாததால் ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவன ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட

மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50மூ வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல்

• அவ்வாறு செலுத்தும் சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்தல்களை மேற்கொள்ளல்
தற்போது கொவிட் 19 தொற்று நாட்டில் பரவி வரும் நிலைமையில்

இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை மேற்குறிப்பிட்டவாறு செயற்படவும் குறித்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக

தொழில் அமைச்சர் அவர்கள் முன்வைத்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி

தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி

இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான

தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதிய நடைமுறை குறித்து இராணுவத் தளபதி விளக்கமளிக்கையில .

கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில்

இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.

இதற்கு முன்னதாக, கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதும் அவருடன் தொடர்பைப் பேணியவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இனிமேல்

அந்த நடைமுறை அமுலில் இருக்காது. மாறாக தொற்றாளருடன் முதலாவது தொடர்பை பேணியவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார். இவ்வாறு வீடுகளில்

தனிமைப்படுத்தப்படுபவர்கள் உரிய விதிமுறைகளை அனுசரித்து வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.

அவர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் முதியவர்கள்

மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் இதனை கருத்திற்கொண்டு

நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு

இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு

கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல ஆகிய STF முகாம்களிலுள்ள 9 பேருக்கு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த மூன்று STF முகாம்களும் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலிய​கொடையில் இருந்து மீன்

கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலமே கொரோனா தொற்று

முகாம்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில்

கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக அடித்து பூட்டு

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக அடித்து பூட்டு

நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத்J திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர

அலுவலகங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் திறக்கபடமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொழும்புக்கு வரும் அனைத்து

தூர இடங்களுக்கான போக்குவரத்து பஸ் சேவைகள் பலவற்றை இரத்து

செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்

இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்

இலங்கையில் 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளதாக . பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மரணமான இந்த நோயாளி 70 வயதைக் கொண்ட ஆண் ஆவார். அத்தோடு கொழும்பு 02 பகுதியச் சேர்ந்தவர்.

கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட

சிக்கலான நிலைமையின் காரணமாக கொழம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்.

இது இலங்கையில் பதிவான 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்

ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில்,

காட் விளையாட்டு, குழுவாக விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்

படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கம்பஹா மாட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு

மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ,

முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வீதிகளில், ஒழுங்கைகளில் மற்றும் அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடமுடியாது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அக்கம் பக்கத்தினருடன் விளையாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பேணும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை,

பொரள்ளை, வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட

பகுதிகளுக்குள் இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு

தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும்

வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளைய தினம்

அதாவது 2020 அக்டோபர் மாதம் 26ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய உணவுப்

பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும்

என கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

அனைத்து இரவு தபால் ரயில் சேவைகளும் ரத்து

அனைத்து இரவு தபால் ரயில் சேவைகளும் ரத்து

இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் அனைத்து தபால் ரயில்களும்; சேவையில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் மற்றும் கொழும்பு கோட்டைக்கு வரும் அனைத்து தபால் ரயில்களும்

சேவையில் ஈடுபடாது. அத்தோடு நாளாந்த நேர அட்டவணைக்கு அமைவாக சேவையில் ஈடுபடவிருந்த மேலும் சில ரயில்

சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதி சங்கத்தின் பொது செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பொலிஸ் எல்லை பகுதிக்குள் இன்று மாலை தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் கரையோர ரயில் பாதையில் நாளாந்த சேவையில் ஈடுப்படும் 6 ரயில் சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும்

இடம்பெறும். உயர்தர பரீட்சை காலபகுதிக்கு அமைவாக மாணவர்களின்

போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் சில இடம் பெறவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

கொழும்பு- பதுளைக்கு இடையிலான NB-9017 என்ற இலக்க பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா

தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் NB-9017 என்ற பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹாலி-எலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தலங்கம பஸ் டிப்போவுக்குச் சொந்தமான NB-9017 என்ற பஸ்ஸில் 23ஆம் திகதி

ஹாலிஎல நகருக்குச் சென்றுள்ள குறித்த நபர், அங்கு மதுபான கடையொன்றுக்குச் சென்று, மதுபானங்களை கொள்வனவு

செய்துள்ளதுடன், ஹாலிஎலயிலிருந்து மற்றுமொறு பஸ் வண்டியில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவர் ஹாலிஎலைக்கு பயணித்த பஸ் நேற்று முன்தினம் (23) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த போது, அது பலாங்கொட

பிர​தேசத்தில் இடைநிறுத்தப்பட்டு, அதன் நடத்துனர், சாரதி, அதில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொற்றாளர் ஹாலி-எல ரொசட் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது, சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென ஹாலி- எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு

கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு

கஹதுட்டுவையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக,

கஹதுட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி, தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.

கஹதுட்டுவ- மினுவன்வில வீதியில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு

கொரோனா ​தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து 6 வர்த்தக

நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தகருடன்

தொடர்பிலிருந்த 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்

நன்கு சமைத்த மீன் ஊடாக கொ​ரோனா வைரஸ் பரவாது என விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தை சுகாதார அமைச்சு வலியுறுத்த #

விரும்புகிறது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பதில்) விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரனின் கையொப்பத்துடன்

அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை​யிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கோட்பாட்டு அடிப்படையில் எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என்பதால்,

சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தை கைகளால் தொடுவதை

தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அநாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார

நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல்

ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்தும் நடத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும்

கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

விதிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மத்திய மையம் அறிவித்துள்ளது.

கொத்தொட்டுவ, முல்லேரியாவ ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் நேற்றிரவு

7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.

நடமாட்டாங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

விசேடமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில்

கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதினால் வீடுகளில்

தங்கியிருக்குமாறும் பொலிசார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை,

வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள்

இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது