Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11
ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்திருக்கலாம் என்ற
சந்தேகத்தில் நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை
தந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக பாடசாலையின் அதிபர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே உள்வாங்கபட்டமை குறிப்பிடதக்கது
பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 17 பேர் பலி-23 பேர் காயம்
பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 17 பேர் பலி-23 பேர் காயம்
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா
மோன்லேவாட் என்னுமிடத்தில் 45 அடி உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் இயந்திரக் கோளாறு காரணமாக
பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் .
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை
மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை சாவோ பாலோவின் டாகுவாவில் ஒரு பஸ் மற்றும் டிரக் மோதிக்கொண்டதில் 42 பேர் பலியானார்கள்.
பிரேசிலில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொடிய விபத்து இது ஆகும்.
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன.
இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின்
60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன,
அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் பேலியகொட பொலிஸ் பிரவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில்,குற்றப் புலனாய்வு பிரிவினரால், 116 பேரிடம்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தமாக 116 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இதில், சிறைச்சாலை அதிகாரிகள் 45பேர்,
வைத்தியர்கள் 11 பேர், தாதியர் 7 பேர், கைதிகள் 53 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூறாவளி நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது
சூறாவளி நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது
புரெவி (“BUREVI”) சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது.
சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்று வளிமண்டலவியல்
திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.
யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,மன்னார் ,திருகோணமலை மற்றும் புத்தளம்
ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்பின்னர் சில இடங்களில்
மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் -காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
வவுனியாவில் -காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
வவுனியா, பேராற்றில் காணாமல் போன மாணவனின் சடலம், இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக
வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் தி.தனுசன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்ட தனுசன் பலத்த தேடுதலின்
போதும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், அவரது சடலம்
நீர்ப்பகுதியில் மிதந்துள்ளமையை அடுத்து நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் வெடிகுண்டுகள் மீட்பு
திருகோணமலையில் வெடிகுண்டுகள் மீட்பு
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல காட்டுப்பகுதியில் நிலத்தில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த 5 கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சேருநுவர பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்ற அனுமதியை பெற்று மீட்கப்பட்டு கைக்குண்டுகள் செயழிலக்கச் செய்யப்படவுள்ளன
கண்டியில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்
கண்டியில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
இன்று கண்டி, திகனையில் மூன்று தடவைகள் நிலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது
. இதனால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணிகள் பாதுகாப்பாக உள்ளத்தில் தெரிவிக்க பட்டுளள்து
எனினும் மக்கள் இந்த அணைக்கட்டுகள் உடைந்தால் தாழ்வான
பகுதிகள் பாதிக்க படும் அபாயம் ஏற்படும் என அச்சம் கொண்டுள்ளனர்
எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம்
பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130 ஆகும்.
- பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர். கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப்
- பெற்றுக்கொண்டிருந்த போது 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19
- நிமோனியாவால் அதிகரித்த பாக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
வலுவிழந்து இருக்கிறது என்று சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 5 ஆம் திகதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு இழக்கிறது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர தொடங்கி,
தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கடும் மழை
பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். தமிழகத்தின் ஏனைய
மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில்
அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை
அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை
அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான
நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்லாத்துறை
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில்
தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும்
மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள்
தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம்
அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள்
நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும் இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட 2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகளில் 52 சத வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமை
கைதிகளில் 52 சத வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமை
சிறைக் கைதிகளில் 52 வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமையாகி யுள்ளார்கள். இவர்கள் சமுகமயப்படுத்தப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இவ்வாறான கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்காக நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவை என்று தெரிவித்த அமைச்சர், இவ்வாறான கைதிகளை சிறையில் அடைப்பது தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காகவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும்
இடம்பெறாதிருப்பதற்காகவும் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , இந்த குழு இன்றைய தினம் மஹர சிறைச்சாலையை அவதானிப்பதற்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.
- 29ஆம் திகதியளவில் நாட்டின் சிறைச்சாலைகளில் 28,541 சிறைக் கைதிகள் இருந்தனர். இவர்களுள் 20,723 பேர் விளக்கமறியல் கைதிகள். 7818 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்றும் அமைச்சர் கூறினார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மஹர சிறைச்சாலையில் 2891 கைதிகள் இருந்துள்ளனர். இவர்களுள் 2559 பேர் விளக்கமறியல் கைதிகளாவர், 732 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள். அங்கு இடம்பெற்ற சம்பவத்தினால் 2020.12.02 ஆம் திகதி வரையில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 106 பேர் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 38 பேர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையிலும், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் 24 பேர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 53 கைதிகள் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான இரண்டு அதிகாரிகளும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைச்சாலை திணைக்களம் நேற்றைய தினம் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான
காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. இவற்றின் மூலம் கைதிகள் மத்தியில் மோதல்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கைதிகளின் உயிர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் 11,500 பேர் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும்,. இதற்கு
மேலதிகமாக இவர்களுக்கு ரபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், வீரவில திறந்தவெளி
சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான மத்திய நிலையம் ஒன்று எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன்இ வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல்
போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும்
சேதமடைந்துள்ளன. சண்டிலிப்பாய்இ சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன. இ இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
ரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 170 வீடுகள் ஓரளவிற்கு சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நேற்று நாட்டுக்குள் நுழைந்த புரெவி சூறாவளியை தொடர்ந்து
தற்பொழுது உள்ள நிலைமை தொடர்பாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்தார்.
பிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி
பிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி
இன்று பிரிட்டன் Wessex Water’s Bristol பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு
நிலையத்தில் உள்ள தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் நல்லவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்
தற்போது குறித்த பகுதியில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர், பொது சுகாதார
பரிசோதகர் அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன்,
குறித்த பரிசோதகரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரகம-அட்டுளுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், குறித்த பிரதேசத்தில் அடையாளம்
காணப்பட்ட தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, அந்த தொற்றாளர் குறித்த அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக,
கொவிட் 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 402 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பில் இதுவரை
பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10, 140 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,502 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்19 தொற்றாளர்களாக 878 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.







