பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்

கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்

மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், எதிர்திசையில் பயணித்த

பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்

மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்

இலங்கையில் மக்களை மிரட்டும் மர்ம கொலைகள் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் காடுகள் ,ஏரிகள் ,நீர் நிலைகள்,வீதிகளில் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித உடல்கள் மீட்க படுகின்றன .

தொடராக மிதக்கும் இந்த கொலைகளினால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .பாதுகாப்பற்ற நாடக இலங்கை மாறி செல்வதற்கு ,ஆளும் அரசியல்வாதிகளே காரணம் என குற்றம் சுமத்த படுகிறது .

இந்த கொலைகளினால் பின்னால் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாது உள்ளமையே ,இவை பின்புலத்தில் அரசியல் உள்ளதாக பேச படுகிறது .

கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்

கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்

இலங்கையில் ஆளும் அரசு க்ளஞ்சா செய்யகையை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்க சட்டம் ,

இதனால் இலங்கை உலகில் இதற்கான முதலிடத்தை வகிக்கும் என ,சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் .

குற்றங்கள் ,வன்முறைகள் அதிகரிக்கவும் ,நாடு சீரழிந்து செல்வதற்கும் நிலைப்பாடு அடித்தளமாக மாற்றம் பெறுகிறது .

,அரசியல் தலைகள் மில்லியன் கணக்க்கில் சம்பாதிக்க உருவாக்க பட்டுள்ளதே இந்த சட்டம் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்

இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்

இலங்கை சிறைகளில் கைதிகள் வருகையால் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துளளார் .

இலங்கை சிறைகளில் 13,241 கைதி கள் தங்க வைக்கும் வசதிகளே உள்ளன ,ஆனால் தற்போது 29 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் உள்ளதினால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவை இலங்கையில் பல்கி பெருகியுள்ள குற்ற செயல்கள் ,எண்ணிக்கையை எடுத்து காண்பிக்கிறது ,சட்டம் ,விதிகள் தளர்வு நிலையில் காணப்படுவதே இதற்கு கரணம் என படுகிறது

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

லங்கா ஐ.ஓ.சியும் விலையை உயர்த்தியது
Posted in இலங்கை செய்திகள்

லங்கா ஐ.ஓ.சியும் விலையை உயர்த்தியது

லங்கா ஐ.ஓ.சியும் விலையை உயர்த்தியது

லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இந்த விலை அதிகரிக்கின்றது.

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்

சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுர்த்தி பெறுனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்

வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்

வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மெதவெத்தியகுளம், சிவபுரம், பாம்பேமடுவ மற்றும் நெலக்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து நேற்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.

இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்தனர்.

02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதுமான சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ்,பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருபது பாடசாலைகளைச் சேர்ந்த 7500 மாணவர்களுக்கு, அப்பியாச கொப்பிகள் திங்கட்கிழமை (31) வழங்கிவைக்கப்பட்டன.

பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில்,பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கலந்து சிறப்பித்தார். மற்றும் நுவரெலியா வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் . அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு

நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.

நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
Posted in இலங்கை செய்திகள்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார்.

இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து

கொண்டனர். இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலிஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலிஸார் அறிவுறுத்தினர்.

தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

உண்டியல் திருடன் விடுதலை

உண்டியல் திருடன் விடுதலை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் வைரவர் கோவில் என நான்கு

கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன்

விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

உண்டியல் திருடன் விடுதலை

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய

உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் உறவுகளால் ஏற்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

இவ்வாறான தவறுகள் 2020 ஆம் ஆண்டு 34 இடம்பெற்றுள்ளன. 2021 இல் 48 ஆக அதிகரித்தது. இது 41 சதவீதமாகும். 2022 இல் 65 ஆக அதிகரித்தது. இது 35 சதவீத அதிகரிப்பாகும் என்பது பொலிஸ் தலைமையகத்தின் 2022 வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் 2021 இல் 63 சதவீதமாகவும் 2022 இல் 46 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று (30) அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் அனுகூலமான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

மீன்பிடித் தொழிலை மேம்படுத்த ஜப்பானிய தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்குமாறும், கிராமங்களில் உள்ள பிள்ளைகளின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உதவுமாறும், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டைக்

கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்குமாறும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்