Tag: இளம் யுவதிக்கு
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மேகா என்ற (17) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி புகையிரதப் பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த வேளையில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க ரயிலில் யுவதி உயிரிழந்துள்ளார்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதத்தில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் கொட்டகலை நிலையத்திற்கு ரயில் செலுத்தப்பட்டு சடலம் அந்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைதுby நிருபர் காவலன்
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலைby நிருபர் காவலன்
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்ததுby நிருபர் காவலன்
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியதுby நிருபர் காவலன்
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலைby நிருபர் காவலன்












