சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி ,வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டத்தரணி ஒருவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்ப்பு

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்கள் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் காரில் இருந்து குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிமைப்பத்திரம் பெற்ற துப்பாக்கி என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்த பின்னர், துப்பாக்கியை விடுவிக்க வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் மல்பா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

முந்திய செய்திகள்…

‘தெம்பிலி லஹிரு’, ‘பெக்கோ சமன்’ இருவருக்கும் தடுத்துவைப்பு

‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’

ஆகியோரை டிசெம்பர் 2ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (17) அன்று பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்

கும்பல்களின் தலைவர்களான ‘கெஹல்பத்தர பத்மே’ உட்பட ஐந்து பேர் இந்தோனேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பொலிஸ் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக்

கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஊடாக புதன்கிழமை (17) சரணடைந்தார்.

அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்

கைதுசெய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக தயாராக

இருப்பதாக, அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப்

பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு ,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில்

மீன்பிடி இடம்பெற்று வருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர்

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான

சிறியமீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம்மீனினங்கள் இறந்தநிலையில் மீண்டும்

கடலில்கொட்டப்படுவதாகவும் இதனால்தற்போது சிறுமீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் புதன்கிழமை (17) அன்று வடமராட்சி வடக்கு

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்

பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்
Posted in இலங்கை செய்திகள்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில் ,2025 ஆம் ஆண்டு உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்தது கடந்த

செப்டம்பர் (11) ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது

குறியீட்டின் படி, இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது, இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு 41 இடங்களுக்கு

விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் இந்த நாடுகள் 96வது இடத்தைப் பிடித்துக்கொண்டது.

உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு

உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய

நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 227 இடங்களுக்கு எதிராக 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
Posted in இலங்கை செய்திகள்

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்


இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன் | அலறும் இஸ்ரேல்,இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன நாட்டிற்கான அங்கீகாரத்திற்கு பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஐரோப்பா என்பன அங்கீகரிக்க உள்ளன.

இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில்

தனிநாட்டு பிரகடனம் பரபரப்பாக இடம் பெறுவதால் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .

இஸ்ரேலின் இன்றைய பிரதமர் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கப்படும் நிலை காணப்படுவதுடன்

இனப்படுகொலை குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகிறது .

இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.

அதனால் இப்பொழுது இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.

Palestine to become a separate state this month | Israel is screaming

Britain, Canada, France, Australia and Europe are set to recognize the recognition of a separate state of Palestine this month.

Israel’s ruling Netanyahu is in shock as the declaration of independence is making headlines.

Israel’s current Prime Minister Netanyahu is facing the possibility of being overthrown and is likely to be arrested on charges of genocide.

So now the Israeli ruling elite is screaming

HOW YOUTUBE Multi-Language Audio’s

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐநா முன் பறந்த புலிக்கொடி
Posted in இலங்கை செய்திகள்

ஐநா முன் பறந்த புலிக்கொடி

ஐநா முன் பறந்த புலிக்கொடி

ஐநா முன் பறந்த புலிக்கொடி ஐநா முன் பறந்த புலிக்கொடியால் இலங்கை ஆளும் அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .

தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டு

தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டும் அறுபதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சுவிஸ் நாட்டில் இடம் பெற்று வருகிறது .

அதனை அடுத்து தமிழர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திய பொழுது ஐநா வுக்கு முன்பாக புலிக்கொடி அங்கு பறக்க விடுவதற்கு அனுமதி அளித்திருந்தது .

விடுதலை புலிகளின் தேசியக்கொடி

இதனால் தமிழீழ , விடுதலை புலிகளின் தேசியக்கொடியாக விளங்கும் புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அங்கு பட்டொளி வீசி பறந்தது.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு கூடி இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக புலிக்கொடி பறந்து அசைந்து ஆடியது .

வளமையாக சுவிஸ் அரசாங்கம் புலிக்கொடி பிடிப்பதற்கு தடை விதித்து வந்தது .

ஆனால் இந்த முறை அறுபதாவது மனித உரிமை கூட்டத்தொடரில் தேசியக் கொடியான புலிக் கொடி பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையம் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது .

இவ்வாறான நிலையில் இம்முறை புலிக்கொடியுடன் மனித உரிமை பேரவைக்கு முன்பாக இலங்கை இடம் பெற்றது இனப்படுகொலை என தமிழர்கள் முழங்கிய செயல், இலங்கை அரசாங்கத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல் ,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை செவ்வாய்க்கிழமை (16) சந்தித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல்

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல்

தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள்

இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தி

செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை கார்ல்டன்

இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.”

பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு

பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு

பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு ,பாராளுமன்ற வளாகத்தின் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு நாகப்பாம்பு காணப்பட்டது, இதனால் கடந்த வாரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாராளுமன்றத்தின் உதவி இயக்குநர்

பாராளுமன்றத்தின் உதவி இயக்குநர் (நிதி) ரோஹித பத்மசிறி முதலில் அந்த நாகப்பாம்பைக் கண்டார்.

அன்று மாலை பணியில் இருந்த அவர், நாகப்பாம்பைக் கண்டதும் உடனடியாக பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

அதன்படி, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாகப்பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று வீசியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள்

தியவன்னாவ நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள காட்டில் இருந்து பல்வேறு வகையான நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. முன்னதாக,

பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பல பாம்புகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வீசினர்.

இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை

இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை

இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை ,அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள்

உலக வங்கி எச்சரிக்கிறது

இணைவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் 300,000 (3 லட்சம்) புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் பிரதித் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட்

கூறுகிறார். உலக வங்கியின் பிரதித் தலைவரின் இலங்கைக்கான முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தின் முடிவில் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும்.

உலக வங்கியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், இலங்கை கடினமாக வென்ற பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாராட்டினார், மேலும்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில்

அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்

அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். உலக வங்கியின் பிரதித் தலைவர் மேலும் கூறியதாவது:

“பொருளாதார மீட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள், முதலீடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய

வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார்

மூலதனத்தைத் திரட்டுதல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்தப் பயணத்தில் இலங்கையை ஆதரிக்க உலக வங்கி குழு தயாராக உள்ளது.” என்றார்.

இறைச்சி கடையில் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சி கடையில் அடாவடி

இறைச்சி கடையில் அடாவடி

இறைச்சி கடையில் அடாவடி ,ஹட்டன் நகரில் இறைச்சி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

தனி இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி இன்னும் சில ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. .எனினும் வாடிக்கையாளர்களின்

தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை என தெரியவருகிறது.

தனி இறைச்சி என்னும் பெயரில் எழும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எழும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக

விகிதத்தில் எழும் இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவிலான இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

தரம் குறைவாக ஏசி

தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாகவும் தெரியவருகிறது.

“ஹட்டன் மாட்டிறைச்சி கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பாக

ஏதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாக பதில் கிடைக்கிறது விலைக்கு தகுந்த பொருள்

கிடைப்பதில்லை வியாபாரிகளின் பேச்சிகள் கேட்டு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்

சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம் ,பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம்

அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் அவர் கொண்டு

வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு, அது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக இடம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் திலீபனின் ஊர்தி செவ்வாய்க்கிழமை (16) திருகோணமலையை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனுக்கு திருகோணமலை மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு ,கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17

புறக்கோட்டை பொலிஸார்

தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் தோட்டா

யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல் ,இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்

பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கையை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, கொழும்பில்

உள்ள சீனத் தூதுவர், விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பின்னர் சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறுநாள் சந்தித்தார்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது, ​​சீனத் தூதுவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசியில் அழைத்து கைது குறித்து விசாரித்ததாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்
Posted in இலங்கை செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அரசு சேவைகள் முழுவதும் செயல்திறனை

மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக, பொது நிர்வாக அமைச்சு அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் விழா

உள்துறைப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் விழாவின் போது, ​​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்

உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இந்த முயற்சியைத் தொடங்கி வைத்தார்.

பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதும், நவீன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பொதுத்துறையை மாற்றுவதும் அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

“மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். இந்த டிஜிட்டல் கையொப்ப முயற்சி கிராம அலுவலர் மட்டத்தை கூட அடைய வேண்டும்,” என்று அபேரத்ன கூறினார்.

2006 ஆம் ஆண்டு 19 ஆம் எண் மின்னணு பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த செயல்படுத்தல், உள்துறை பிரிவிற்குள் உள்ள

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரி

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுடன் தொடங்கியது. சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட லங்காபே மூலம் வழங்கப்படுகிறது.

இந்த முயற்சி ஆவண செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களை நீக்கி, வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாக பணிப்பாய்வுக்கு உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம் ,சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.

பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத்

தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட பாதாள உலகக் கும்பலே இந்த திட்டத்தை தீட்டியிருந்துள்ளது.

பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ பல சந்தர்ப்பங்களில் தன்னை தொலைபேசியில்

அழைத்த கமாண்டோ சாலிந்தா, இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணல், இரண்டு கிளேமோர் குண்டுகளை கமாண்டோ சாலிந்தாவிடம் கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக கெஹல்பத்தர பத்மே

மற்றும் கமாண்டோ சாலிந்தா இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகி இருந்துள்ளனர்.

ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, ​​நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார்

சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டதால் ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு கேமராவில் துப்பாக்கியை பொருத்தி அதை செயல்படுத்துவதன் மூலம் ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் முன்பே தெரியவந்தது.

தாக்குதலில் ஈடுபடவிருந்த நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் முன்னர் கைப்பற்றப்பட்டது.

பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டவுடன், அந்த திட்டம் நிறுத்தப்பட்டது, மேலும் திட்டத்தை தயாரித்தவர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட கேமராவையும் தீயிட்டு அழித்தார்.

கமாண்டோ சாலிந்தவுக்கு ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கர்ணல், பேலிகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

46 பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை

46பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை

46 பில்லியன் டாலர் கடனில்தவிக்கும் இலங்கை 46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை இந்த கடனை எப்படி திருப்பி அடைக்கப் போகிறது. Sri Lanka is stranded at sea for $46 billion ( இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் )

இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் ஒருவரது தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் கடனை வாங்கி குவித்து அதனூடாக பெற்று கொண்ட கடனுக்கு மீள் வட்டியை செலுத்தி தப்பித்துவருகிறது இலங்கை .

இவ்வாறான நடவடிக்கை தொடரும் பட்ஷத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.

அப்படி நோக்குகின்ற பொழுது இன்றைய ஆளும் அணுக குமார திசநாயக்க ஆட்சி மிகவும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் அவர்கள் சிக்கி உள்ளார் .

இவ்வாறான நிலையில் அனுரா ஆட்சி அதிகாரம் வெகு விரைவில் கவிழ்க்கப்பட்ட அபாயம் காணப்படுகிறது .

அரசியல்வாதிகளை கைது செய்து சிறை அடைக்கும் அனுரா Anura arrests and imprisons politicians

அதனால்தான் தற்பொழுது அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாம் எழுப்புகிற கேள்வி என்னவென்றால் 46 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு மாதந்தோறும் இலங்கை.

இலங்கை வட்டித்தொகை எவ்வளவு How much is the interest rate in Sri Lanka?

இலங்கை வட்டித்தொகை எவ்வளவு என கேட்கிறோம் அதற்கு அருள் ஆட்சியும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளும் அதில் ஏதும் தெரிவிக்க மறுக்கிறார்கள்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளலாம் சுத்துமாத்து அரசியலை மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறை காரணமாக அறுவற ஆட்சி மிக விரைவில் கவிழ்க்கப்பட போகிறது .

என்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் எமது கேள்விக்கு பதில் இருந்தால் அனுராக் குமார திசநாயக்காவின் ஆட்சியில் உள்ளவர்கள் யாராவது எமது கேள்விக்கு திட்டக் பக்கத்தில் பதில் தருவீர்களா.

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு ,இலங்கை லோக்கல் ஆவா ஓயா வியன்னா கால்வாயில் இருந்து சிறிய அளவிலான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . Gun recovered from canal ( இன்றைய இலங்கை செய்திகள் )

சிறிய ரக அதி நவீன துப்பாக்கி Small-caliber, ultra-modern rifle

இந்த சிறிய ரக அதி நவீன துப்பாக்கியை தாம் கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கியின் சேவை எண் மற்றும் அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதன் ஊடாக இந்த துப்பாக்கியை பயன்படுத்தியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் 12 துளைத்து துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து டீ 56 தோட்டாக்கள் மற்றும் ஏழு ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்கள் என்பன ஒரு பொலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த நாட்களில் தண்ணீர் குறைந்து கால்வாயின் அடிப்பகுதி தெரியும் என்பதால் இந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தெரிந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள் .

துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் Who purchased the gun?

இந்த துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் ..? யார் இதை பயன்படுத்தினார்கள் ..

இதனை பயன்படுத்தி படுகொலைகள் ஏதும் இடம் பெற்றதா ..?என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த துப்பாக்கி மீட்பு சம்பவத்தின் பின்புலத்தில் துப்பு துலக்கும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை , மட்டக்களப்பில் புண்ணை சோலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் . Several lakhs stolen in house break-in in Batticaloa ( இலங்கை செய்திகள் )

இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணம் More than two lakhs of money இன்றைய

வீட்டில் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தையும் , 32 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் .

வீட்டினுடைய சமையலறை வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த 32 தங்க நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் என்பனவற்றை அலுமாறியில் இருந்து திருடி சென்றுள்ளனர் .

இந்த நூதன திருட்டு மேற்கொண்டதை அடுத்து தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை

சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கையில் [போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

வீடு புகுந்து நகைகளை திருடி செல்லும் வரைக்கும் வீட்டின் உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் How did they carry out this theft?

இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்கின்ற விடயம் தொடர்பாக தற்பொழுது கொள்ளை சம்பவங்களை மேப்பம் பிடிக்கும் குற்றவியல் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டுக்குள் நுழைந்து திருட்டை மேற்கொண்ட திருடர்கள் சிக்குவார்களா அல்லது இந்த கொள்ளையர்களை இலங்கை காவல்துறையினர் தப்பிக்கப்படுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேற்படி திருட்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்

நீரில் மூழ்கி சிறுவன் மரணம் , ஹால வெல பகுதியில் நீர்த்தோக்கத்தில் நீராடிச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கிபலியாகியுள்ளார் .Boy dies after drowning ( இன்றைய இலங்கை செய்திகள் )

மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .It has caused shock among the people.

பரிதாபகரமாக பலியாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஹலவெல பகுதியை சேர்ந்த சிறுவனே சம்பவ இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இவ்விதம் நீரில் மூழ்கிய சிறுவனை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

இலங்கையில் நீர் எரிகளில் Water fires in Sri Lanka

இலங்கையில் நீர் எரிகளில் இவ்வாறு நீராட செல்கின்ற மக்களில் வருடம் தோறும் 1800க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அவ்வாறு இருந்தும் இந்த விபத்துக்கள் நடப்பது தெரிந்தும் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராடிச் செல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவின்மையும் இல்லாத காரணத்தினாலேயே இந்த இறப்புகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இல்லாத நீரேரிகளில் பாதுகாக்கப்பட்ட முறையில் நீராடச் செல்வதால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு
Posted in இலங்கை செய்திகள்

புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு

புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு

புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு புறக்கோட்டை பேருந்து நிலையம் உள்ள அமைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரா குமாரா திசநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார் . Reconstruction of the Purakottai Bus Stand ( இன்றைய இலங்கை செய்திகள் )

பேருந்து நிலையம் 60 ஆண்டுகளில் பின்னர் புனரமைப்பு Bus stand renovated after 60 years

1964 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் 60 ஆண்டுகளில் பின்னர் முதன்முறையாக பெரிய அளவில் திருத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு 424 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து புறக்கோட்டை பேருந்து நிலையம் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு மக்களை கவர்ந்த வகையில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உலக நாடுகளிடம் நிதிகளை வேண்டி Requesting funds from the world’s nations

உலக நாடுகளிடம் நிதிகளை வேண்டி அபிவிருத்தி என்கின்ற பெயரில் இவ்வாறு பேரூந்து நிலையங்கள் தொடரூந்து நிலையங்களை வீதிகளை புணர் அமைத்து வருகிறது .

கடனை வேண்டி கடலில் தத்தளிக்கும் இலங்கை தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இப்பொழுது இவ்வாறு செயல்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.