மின்சார தடை – நடந்தது என்ன..? – விசாரணையில் விசேட குழு

Spread the love

நேற்று இடம்பெற்ற மின்விநியோக சீர்குலைவு பற்றி ஆராய்வதற்காக

நியமிக்கப்பட்ட குழு இன்று காலை கூடவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடு முழுவதிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

கெரவலப்பிட்டி உப மின் நிலையத்தின் விநியோக வலைப்பின்னலில்

ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் எனக் கருதப்படுகின்ற நிலையில்

குழுவொன்றை நியமித்து உண்மையைக் கண்டறியுமாறு மின்வலு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தச் சீர்குலைவு காரணமாக வீதிப் போக்குவரத்துச் சமிக்ஞைகள் இயங்காமல்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ரெயில் சேவைக்குப் பாதிப்பு

ஏற்படவில்லை எனவும் ரெயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் மின்விநியோக வலைப்பின்னல் சீர்குலைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *