Posted in இலங்கை செய்திகள்

கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

கிழக்குக் கடற்பரப்பில்; தீ விபத்திற்கு உள்ளான MT New Diamond எரிபொருள் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ ஓரளவு

கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப்

பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில்

நிலவும் பாதகமான வானிலை காரணமாக மற்றும் அதிக உஷ்ணத்துடன் கப்பல் இருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளது.

கப்பலின் மூலம் ஏற்படக்கூடிய சமுத்திரவியல் பாதிப்புக்களைப் பற்றி ஆராய்வதற்காக இன்று அதிகாலை நான்கு மணியளவில் நிபுணர்கள் குழுவொன்று ஸ்தலத்திற்கு

அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டர் இந்திக்க டீ சில்வா தெரிவித்தார்.

இந்தக் கப்பல் முதற்தடவையாக தீ விபத்திற்கு உள்ளான இடத்தில் இருந்து பெறப்பட்ட கடல் நீர் மாதிரிகள் இன்று சோதனையிடப்படவுள்ளன. இது தொடர்பான விசேட

கலந்துரையாடல் நேற்று துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் ரோஹித்த அபய குணவர்த்தன இதனை தலைமை தாங்கினார்.

Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொது இடங்களில் போதைப்பொருளை பயன்படுத்திய 547 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையில் முன்

னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மத்தியில் ஆக கூடுதலானோர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இவர்களின்

எண்ணிக்கை 265 ஆகும். இவர்களிடம் இருந்து 89 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

Posted in இலங்கை செய்திகள்

அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.

அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட

அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான

நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை

தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து

அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Posted in இலங்கை செய்திகள்

பாலம் உடைந்ததினால் இரு
ஊர்கள் பிரிந்தது

பாலம் உடைந்ததினால் இரு
ஊர்கள் பிரிந்தது

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பலவெல பிரதேசத்தையும் இணைக்கும் கம்பலவெல பிரதான

பாலத்தின் ஒரு பகுதி உடைவடைந்து உள்ளது. இந்த பாலம் உடைவடைந்து 06 வருடங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இது வரைக்கும்

யாராலும் முன்னெடுக்கவில்லை. இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு முற்றாக துண்டிக்கபட்டுள்ளதுடன்

குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந் நிiலில் இந்த பாலத்தை அமைத்து தருமாறுகோரி விடும் அதே வேலை இந்த பாலத்தை அமைத்து

தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து பல ஆர்பாட்டங்களையும் நடாத்தினர். இது வரைக்கும் அவையும் வெற்றியளிக்கவில்லை.

இந்த பாலத்தின் ஊடாகவே கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் கம்பளை நகரத்திற்கு வந்து

செல்கின்றனர். தற்போது இதற்காக பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்தும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந் நிலையில் இந்த

பாலத்தினை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்

பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள
கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல கிராம சேவகர் பிரிவு 474எல் வெதமுல்ல தோட்டம் கெமினிதன் பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையே இது.

இந்த பாதையில் நாளாந்தம் 1000 க்கு மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த தோட்ட பிரதேசத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடுகின்றது.

ஆரம்ப பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. 166 குடும்பங்களை சேரந்த 750 மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 533 வாக்குகள் இங்கு காணப்படுகின்றது. அத்துடன் விவசாய

செய்கைக்கு வெளி இடங்களில் இருந்து வந்து தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்N;டார் வசித்து வருகின்றனர். மாணவரகள் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி கற்பதற்கு இந்த தோட்டத்தில்

இருந்து இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் உட்பட ஏனைய பாடசாலைகளுக்கு நாளாந்தம் மாணவர்கள் நடந்தும் லொரி மற்றும் தனியார் வாகனங்ளிலும் நடந்துமே செல்கின்றனர். இங்கு

முறையான போக்குவரத்து சேவை இல்லை. தோட்ட பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களின் நிலமையும் இதுவே. இந்த பிரதேசம் மிகவும் குளிர்ந்த ஒரு கஷ்ட பிரதேசமாகும். கடல் மட்டத்தில் இருந்து

5000 அடிக்கு மேல் இந்த தோட்டம் காணப்படுகின்றது. நடந்து செல்லும் போது செங்குத்தான மலையில் 1200 படிகள் ஏற வேண்டும்.

நுவரெலியா கண்டி பிரதான பாதையில் வெதமுல்ல சந்தியில் இருந்து வெதமுல்ல தோட்டம் கயிர்கட்டி தோட்டம் ஊடாக இந்த கெமினிதன் தோட்டத்திற்கு செல்ல 11 கிலோமீற்றர் தூரம்

காணப்படுகின்றது. இந்த பாதையின் இடையிடையே குறிப்pட்ட தூரம் மலையக அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு ஊடாக செப்பனிடபட்டாலும் பெருமளலாவான பாதை இன்னமும்

திருத்தப்படாமல் காணப்படுகின்றஙது. இங்குள்ள மக்கள் தங்களின் அபிருத்திகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதை அவலம் ஒரு தடையாக இருக்கின்றது.

தங்களது வீடுகளை கூட கட்டிக் கொள்ள முடியவி;ல்லை. அதற்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வதிலும் அதற்கான செலவும் அதிகமாக இருக்கின்றது.

இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு உற்பத்தி செலவும்

உற்பத்திகளை வினியோகிக்க சந்தைப்படுத்தும் செலவும் அதிகரித்து வருகின்றது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாய செயற்பாடுகளுக்கு வாகனங்களை

பயன்படுத்த முடியாத நிலையும் தோன்றி உள்ளது. அதற்கான செலவும் அதிகம். தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில்

ஈடுபட்டாலும் அதில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. மக்கள் நாளாந்தம் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர தேவைகளின் போதும் இந்த

பாதையையே பாவித்து வருகின்றனர். இதனால் கர்பினி பெண்கள் வயோதிபர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந் நிலையில் இந்த

பாதையை சரி செய்து கொடுத்து இந்த மக்களின் சுபீட்சத்திற்கு வழி சமைத்து கொடுக்க வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும்.

Posted in இலங்கை செய்திகள்

06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு

06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு

புசல்லாவை நகரிலிருந்து பொரட்டாசி தோட்டத்திற்கு காலை வேலையில் செல்லும் பஸ் போக்குவரத்து முறையான நேரத்திற்கு இன்மையால் இப்பகுதியிலுள்ள 06 பாடசாலைகளுக்கு செல்லும்

ஆசிரியர்களும் மற்றும் ஏனய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி

வருகின்றனர். மாணவர்கள் தனியார் வாகனங்களிலேயே புஸ்ஸல்லாவ நகரத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கு செல்கின்றனர

இப் பிரதேசத்தில் உள்ள நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹெல்பொட வடக்கு தமிழ் மகா வித்தியாலம் மேமொழி தமிழ் வித்தியாலயம் அயரி தமிழ் மகா

வித்தியாலயம்;; புரட்டொப் தமிழ் வித்தியாலயம் ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயம் கெமினிதன் தமிழ் வித்தியாலயம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் வரும் ஆசிரியர்கள் அதிபர்கள்

சரியான போக்குவரத்து வசதி இன்மையால் பாடசாலைகளுக்கு காலை 09 மணி நேரங்களிலேயே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். காலை புஸ்ஸல்லாவ நகரத்திலிருந்து பெரட்டாசி

பிரதேசத்திற்கு 7.30 மணியளவிலேயே தனியார் பஸ் தனது சேவையை ஆரம்பிக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 10 வருட காலமாக இல்லை.

அசிரியர்கள் மீண்டும் பாடசாலை விடுவதற்கு முன் பகல் 01.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பியும் விடுகின்றார்கள். காரணம் இந்த பஸ்சை விட்டால் அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க

வேண்டும். ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும் தங்களது சொந்த மோட்டார் சைக்கில் முற்சக்கர வண்டி ஆகியவற்றில் நேரத்திற்கு செல்கின்றனர். ஒரு ஆசிரியருக்கு தனது பாடசாலைக்கான சேவை

நேரத்தில் நான்கு மணித்தியாலயங்கள் மாத்திரமே பாடசாலையில் சேவை செய்யக் கூடியதாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம்

வினவிய போது நாங்கள் எங்கள் பஸ் சேவையை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க ஆயுத்தமாக உள்ளோம். ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை விட்டு விட்டு போகவும் முடியாது.

இவர்கள் தங்கள் பிள்ளைகளை புஸ்ஸல்லாவ பிரசே பாடசாலைகளில் விட்டுவிட்டே வருகின்றனர் அது வரைக்கும் காத்து நிற்க்க வேண்டும். எங்களுக்கும் அதிகமானவர்கள்

பயணித்தால் தான் இலாபம் கிடைக்கும் பாதை அவலம் காரணமாக பஸ் அடிக்கடி உடைந்து விடுகின்றது. அதற்கும் செலவு செய்ய வேண்டும். மேற்படி பாடசாலைகளுக்கு எங்கள் பஸ்சில்

செல்லாத சொந்த வாகனங்களில் செல்பவர்களும் பாடசாலைகளுக்கு அருகில் இருப்பவர்களும் இவர்கள் வரும் வரைக்கும் இவர்களுடனே செல்கின்றனர். அவர்களும் பொருப்புடன்

நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தவைணையில் இருந்தே காலை 7.30 பஸ் போகின்றது இதற்கு முன்னர் பல வருடங்களாக காலை 8.15 க்கே பஸ் புறப்பட்டது தற்போது நாங்கள் ஒரு படி முன்னேறி

உள்ளோம். எங்களுக்கும் இந்த சமூகம் தொடர்பில் அக்கரை இருக்கின்றது. சிலர் செய்கின்ற குறைகளை பஸ் உரிமையாளர் எங்களை பாதிக்கின்றது. யாரும் எதுவும் கேட்டால் பஸ் லேட் என

இலகுவாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர். தற்போதைக்கு 8 பஸ்கள் சேவையில் உள்ளது என்று கூறினர்.

மேற்படி பிரதேசங்கள் மிகவும் பாதிக்கபட்ட ஒரு கஷ்ட்டபட்ட பிரதேசமாகும். இங்குள்ள மாணவர்கள் திறமையானவர்கள் நன்கு கல்வி கற்க கூடியவர்கள். பலர் பல்கலைகழகம் உட்பட தேசிய

கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான முiறான களம் அமைக்கப்படுமானால் மேலும் இவர்கள் அபிவிருத்தியை நோக்கி செல்வர். இதற்கு

பொருப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

குறைபாடுகள் காரணமாக இப்பிரதேசதில் வாழும் தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளின் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்கள் அதிபர்கள் பல இன்னல்களை

எதிர்நோக்கியும் வருகின்றனர். இதை எந்த கல்விசார் ஆளனியினரும் கண்டுக் கொள்வதில்லை. புஸ்ஸலாலவ நகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி

‘நேரம் கழித்தே மேற்படி தூர பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்கின்றனர். முன்னுக்கு உள்ள பாடசாலைகளுக்கு நேரத்திற்கு சென்றாலும் ரஸ்புரூக் பாடசாலைக்கு ஆசிரியர்கள்

செல்லும் நேரம் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களின் இந்த பிரச்சனைக்கு இந்த பாதை ஒரு பாரிய காரணமாக இருந்தாலும் தற்போது இந்த பாதையின் ஒரு பகுதி திருத்தப்பட்டு

மிகுதியானவை செப்பனிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சரியான நேரத்திற்கான போக்குவரத்து வசதிகளை இவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது சம்பந்தபட்டவர்களின்

கடமையாகும். காலை 7.00 மணிக்கு புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து பஸ் மேற்படி பிரதேசத்திற்கு செல்லுமானால் அதிபர்கள் ஆசிரியர்கள் நேரத்திற்கு பாடசாலை செல்லலாம். அதே போல் பி.ப

2.00 மணிக்கு பின்னர் பஸ் மீண்டும் புஸ்ஸல்லாவ வருமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் இதனை சம்பந்தபட்டவர்கள்

செய்யாததினால் இந்த பிரச்சனை தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றது.

பாதையின் அவல நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றன.;

பாடசாலை மாணவர்களுக்கும் இந் நிலையே சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைக்கும் செல்கின்றனர் இவர்களுக்கும் இந் நிலையே.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவை தற்போது இ;ல்லை.

இந்நிலைமை குறித்த கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ்

வண்டிகள் வாங்கும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன் பாதை பழுதடைந்தையால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். இருந்தும் தற்போது பாதை

செப்பனிடப்பட்டு வருவதால் உரிய நேரத்திற்கு செல்லக் கூடிய தனியார் அல்லது இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த முடியும்.


கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளையே 05 முறை பாரிய பஸ் விபத்துக்கள் இடம் பெற்றன. இவ் வீபத்துக்களில்

பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு;மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு இதற்குறிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

Posted in பிரித்தானிய செய்தி

பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு லொறியில் கடத்தில் செல்லப்பட்ட

ஒரு மில்லியன் பவுண்டுகள் லண்டன் டோவர் எல்லையோர காவல்துறையினரால் முறியடிக்க பட்டுள்ளது

இரண்டு லாரிகளில் இவ்விதம் கடத்தி செல்லப்பட்ட ஒருமில்லியன் பவண்டுகளே பொலிஸாரினால் முறியடிக்க பட்டுள்ளது

முதலாவது லொறியில் £830,000பவுண்டுகளும் இரண்டாவது லொறியில் 330,000 பவுண்டுகளும் கடத்தி செல்ல பட்டுள்ளது

குறித்த ஐரோப்பிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே நிறுவனத்துக்கு

சொந்தமான இரண்டு லொறிகளில் இந்த பணம் எடுத்து செல்ல பட்டுள்ளது

நீண்ட நாட்களாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது விசாரணைகள் மூலம்

தெரிய வந்துள்ளது ,கைதான இரு சாரதிகளும் தற்போது நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

பெரும் பண கடத்தல் முறியடிப்பு
பெரும் பண கடத்தல் முறியடிப்பு
    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

    பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

    கடந்த தினம் மதியம் ,பிரிட்டன் Birmingham.பகுதியில் இருபத்தி ஏழுவயது

    நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார்

    இதில் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளார் ,

    காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க

    படுகிறது ,இந்த கத்தி குத்து தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்புடையாதா

    என்பது தொடர்பில் தெரியவரவிலை
    தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    பிரிட்டன் Birmingham.பகுதியில்
    பிரிட்டன் Birmingham.பகுதியில்
      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு

      வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு

      சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 21 மாவட்டங்களில் 1000 திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

      இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

      மூன்று மாவட்டங்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக 15 இலட்சம்

      ரூபாவை அரசாங்கம் வழங்கியிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண

      சேவை மத்தியநிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்திரி ஜயகொடி தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

      மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

      சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்

      சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

      கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய

      மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை

      சீரற்ற கலநிலையின் காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

      கொழும்பு ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு

      தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு

      களுத்துறை தெற்கில் இருந்து நீர்கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடும்

      கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் மருதாணைக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது.

      இன்று காலை 8.15 மணியளவில் ரயில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இது

      தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

      Posted in உலக செய்திகள்

      கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

      கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

      பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.

      ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி
      எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாவித்ரி


      பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்

      அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

      இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு

      வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

      இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு

      வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில்

      வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது

      Posted in உலக செய்திகள்

      ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

      ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

      ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

      ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்


      ஆட்டோ டிரைவராக மாறிய டாக்டர் ரவிந்தீரநாத்.
      பெங்களூரு:

      ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி

      வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

      இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

      கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத்

      பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா

      நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு

      வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

      இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே 2-வது முறையாக அவருக்கு

      கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை உதறினார். இதற்கு காரணம்

      சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

      மேலும் வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார்.

      அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

      அந்த ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகார து‌‌ஷ்பிரயோகத்தால் தொல்லை கொடுத்ததாக வாசகத்தை எழுதியுள்ளார்.

      இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது

      உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு

      திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று மந்திரி ஸ்ரீராமுலு, டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

      அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், மந்திர ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

      கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

      நாளை தேசிய கண் தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

      கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
      எடப்பாடி பழனிசாமி
      சென்னை:

      நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

      கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

      கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்..

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

      இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

      மகாவலி நீர்த்தேக்க பகுதியில், எதிர்வரும் காலங்களில் சிறிய, சிறிய நிலநடுக்கங்கள், குறுகிய காலத்துக்குள் ஏற்படக்கூடுமென ​

      பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் சி.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

      இத்தகைய அதிர்ச்சிகள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அழுத்தம் அல்லது நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு

      கற்பாறைகளின் வெடிப்பால் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நீர்த்தேக்கத்தின் நீர் அதிகரித்து, குறைவடையும் போது

      இவ்வாறான அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமென பேராசிரியர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

      “ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவும் அதன்பின்னர் அவ்வப்போது, விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பிரதேசத்தங்களில் 2

      ரிக்டருக்கு குறைவான அலகில், பூமியதிர்ச்சி பதிவாகியிருந்தது. இது, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு கீழே மையப்பகுதியில்

      ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றார்.

      “பாறைகளில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்து, கூடும். அதுவே, கண்டியில் ஏற்பட்டிருந்த இரண்டு, பூமியதிர்வுகளுக்கும் காரணமாக

      அமைந்திருந்தது. இதனை சிறிய விடயமெனக் கருதி, நிராகரித்துவிடக்கூடாது. விக்டோரியா, ரத்தெனிகல, ரத்டெம்பே

      ஆகிய நீர்த்தேக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞைக் கருவி தொகுதிகளிலும் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது” என்றார்

      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – மக்கள் அவதி

      நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக,

      நீர்கொழும்பு கட்டுவ புவகவத்தை பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

      மேற்படி பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ‘தெபா எல’ வாவியில், சட்டவிரோதமாக

      தனிநபர் ஒருவர் கட்டி வரும் பாலம் ஒன்றின் காரணமாக தற்போது இந்த நிலை

      ஏறபட்டுள்ளதாகவும் பாலத்தின் கீழ குப்பைகள் சேர்ந்துள்ளதன் காரணமாக,

      நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகுமென, பிரதேசவாசிகள் குற்றஞ்சான்றுகின்றனர்.

      ஐந்து வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளில்

      உள்ளவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, வெளியில் செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளது.

      தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் எனைய வீடுகளும் பாதிக்கப்படும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

      சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

      வெள்ளம்
      வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் பரவும் கொரனோ – மேலும் பலர் பாதிப்பு

      இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

      இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

      அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.

      இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக

      குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2,925ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

      Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-07 06:26:15

      உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3123

      சிகிச்சை பெறும் நோயாளிகள் – 186

      புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் – 2

      குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 2925

      இறப்பு எண்ணிக்கை – 12

      Posted in இலங்கை செய்திகள்

      கடும் புயல் -கடலுக்கு செல்லாதீர் – எச்சரிக்கை

      இன்று (07 ஆம் திகதி) முற்பகல் 09.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம்

      குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய

      சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      மழை நிலைமை:

      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

      காற்று :
      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது

      மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின்

      வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      கடல் நிலை:
      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.

      குறிப்பிட்ட காலப்பகுதியில் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள்

      அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

      பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

      கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

      Posted in இலங்கை செய்திகள்

      19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு

      19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு

      நாட்டிற்கு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மதிப்பிட

      முடியாத அளவு பாதிப்பு ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

      இதனை நீக்கி, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர

      மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

      அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தேசிய பாடசாலையை

      ஆரம்பிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், ஜனாதிபதி

      கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து இதற்கான ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது

      வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது

      வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      நேற்று (05) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர்

      ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.

      குறித்த சம்பவத்தில் கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

      அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சில பொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

      கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள்

      அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.