இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக
குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2,925ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-07 06:26:15
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3123
சிகிச்சை பெறும் நோயாளிகள் – 186
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் – 2
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 2925
இறப்பு எண்ணிக்கை – 12