Posted in இலங்கை செய்திகள்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்துக்கும் அச்சுறுத்தல்

ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட மூன்று விடயங்களுக்காக குறித்த அதிகார சபைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

தீப்பற்றலுக்கு உள்ளான MT New Diamond கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நாளை

கலந்துரையாடவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம்

பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும்

உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத்

தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை

ஒதுக்கியுள்ளது என்று உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்தார.

Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்த சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை

மேம்படுத்துவது தொடர்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.09.12) சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கௌரவ பிரதமர் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

சுற்றுலா நகரங்களுக்கு செல்வதற்கான வீதிகள் மற்றும் ஏசதமடைந்த நிலையில் காணப்படும் அனைத்து வீதிகளையும்

புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இதுவரையில் தங்களது சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளைஇ சுற்றுலாப்

பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனம்

திரும்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி

செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையை

கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

Posted in உலக செய்திகள்

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ:

காங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி

வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரிகள்

கூறும்போது, “தங்க சுரங்கம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

ஒருவரால்கூட வெளியே வரமுடியவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது” என்றார்.

Posted in உலக செய்திகள்

விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு

விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான

போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.

விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு… தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்
விஜய்


மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது

வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்

ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.

கிழிக்கப்பட்ட போஸ்டர்

ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ‘‘தமிழ் சினிமாவில்

கலெக்‌ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்‌ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு

இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு… எப்போது மக்கள் இயக்க அரசியல்…’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து

அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு

வருகிறது. போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.

Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவரின் மீது வீசப்பட்டிருந்த

09 கைப்பேசிகள் மற்றும் 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பெக்கெட்

ஒன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Posted in உலக செய்திகள்

போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.

போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.

போலீசார் சீருடை கண்டு பயம்- ரோந்து காரில் சிறுமியை அமர வைத்து மகிழ்வித்த அதிகாரிகள்


சிறுமி யாசியா போலீஸ் ரோந்து பிரிவின் சொகுசு காரில் அமர வைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.
துபாய்:

துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமி யாசியாவுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம்.

குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவளது பெற்றோர் எத்தனை

சமாதானம் செய்தும், விளக்கமாக கூறியும் அந்த சிறுமியின் பயம் தெளியவில்லை.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் எதிர்காலத்தில் தனது மகளுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அவளின் பயத்தை போக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு

வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட போலீஸ் துறையின் சுற்றுலா பாதுகாப்பு மற்றும் ரோந்து பிரிவு

தலைவர் ஒபைத் பின் அபித் தலைமையில் தனிப்படை பெண் போலீசார் சிறுமியின் வீட்டிற்கே சென்றனர்.

அவர்கள் கையோடு சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் சிறுமியிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். குறிப்பாக

ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுமியை அமர வைத்தனர். பிறகு அந்த காரில் அந்த வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த சிறுமிக்கு பயம் நீங்கி புன்னகை புரிந்ததும் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். துபாய் போலீஸ்

அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இறுதியில் அந்த சிறுமிக்கு பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர்.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக அதில் பாதுகாப்பு பணி

மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் அக்கறை காட்டுவது சிறப்பாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் மீள இரண்டாம் அலியாக பரவிய வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் ஒரே நாளில் மூவாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவே எதிர்வரும் மாதங்களில் அதிகம் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளதுடன் 85,000 பேருக்கு மேல் பலியாவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்

பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்

பிரிட்டனில் எதிர்வரும் வாரம் 31C அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ,

இது இக்கால பகுதியில் அதிக வெப்ப நிலையாக உணரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது

பொது வெளியில் ஆறுபேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவிக்க

பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகமாக கூடலாம் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 181 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றுக்கு உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது

வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது

மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து

ஏற்படும் என மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு பயந்து வருவதாக பொலிஸாருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்பெற்று வந்தது.

இந்த நிலையில் புலனாய்வுத் துறையினருக்கு பொலிஸார் இவ் வாள்வெட்டு குழு பற்றி அறிவித்ததை அடுத்து புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை

திரட்டிவந்துள்ள நிலையில், நேற்று மாலை நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சியின் ஆலோசனையில், குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்பெஸ்டர் முகமட் பொலிஸ் சாஜன் கிருபா

தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸார் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வாள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுகுழுவின் தலைவனான தனு கடந்த 2018 ஆண்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இருவர் விசாரணைக்கு நாவற்கேணி பிரதேசத்துக்கு சென்ற போது

அவர்களை துரத்தி துரத்தி தாக்குதல் மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக மட்டக்களப்பு நீதவான்

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுடன் அவர் பிணையில் வெளி வந்துள்ளார்.

அதேவேளை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் உள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்பாணத்தில் உள்ள ஆவா வாள் குழு

போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும், இக் குழுவில் மேலும் பிரதான 4 பேர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை

கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

Covid 19 தொற்று இடர் நிலையினை தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை

வழங்கும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் (08.09.2020) இடம்பெற்றது.

கலந்துரைடலில் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள்,சுகாதார துறைசார் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாக COvid

19 தொற்றின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்த ஆளுநர் தற்போது அனைத்து இடங்களிலும் Covid 19 தொடர்பில் மக்கள்

அலட்சிய போக்கில் செயற்படுவது அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் Covid 19 இடர் தொற்று தொடர்பில் ஆளுநர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

மாதத்திற்கு இரு தடவை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் கிராமசேவகர்இ சுகாதார துறையினர் மற்றும்

பாதுகாப்பு துறையினர் உள்ளடக்கி Covid 19 தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

ஆலய திருவிழா காலங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து ஆலயங்களில் வேறுபட்ட பூசை நேரங்கள் ஏற்பாடு செய்து சமூக

இடைவெளியை பேணி சன நெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைக்கு அண்மையில் உள்ள உணவகங்களை சுகாதார பரிசோதகர்கள்

கடுமையான சுகாதார பரிசோதனைகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் மாதங்கள் மழைக்காலம் .ஆதலால் சூழலை சுத்தமாக பேணி டெங்கு பரவலை தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்ப

பிரிவினர் சட்டநடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென்று வவலியுறுத்தப்பட்டது.

நாம் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருப்பதால் Covid 19 இடர் நிலை தொடர்பாக மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், வெளிநாடுகளில் இருந்து

வருபவர்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டது.

விழாக்கள், பொதுபோக்குவரத்து, பாடசாலைகள்இஆலய திருவிழாக்கள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளி பேணல்

மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மண் அகழ்வு, கிரவல் அகழ்வு தொடர்பில் குறிப்பாக மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டப்பட்டது.

பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இனங்கண்டு அவற்றை சீர்செய்து அவற்றில் உப உணவு பயிர்களை பயிரிட்டு அரசின்

விவசாய அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

கர்நாடக மாநிலம் மண்டியா டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ்,

பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை மேற்கொண்டு

வந்தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து

கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை 3 பூசாரிகளும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், 3

பூசாரிகளையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.

இதைதொடர்ந்து மர்மநபர்கள் கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் பூட்டுகளை உடைத்த

மர்மநபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி

அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சம்பவம் குறித்து மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில்

கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதை தடுத்த 3 பூசாரிகளையும் அவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில்

கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா

புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா

அமரர் ஆறுமுகம் தொண்டமான் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.09.11) பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகம் தொண்டமான் இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து

கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அனுதாப உரை வருமாறு:

‘சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நினைவுகூறும் போது சௌமியமூர்த்தி தொண்டமான்

முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர்

பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட

தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர்

காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா

மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா

மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம்

தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக அவர்களின் சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார். குறிப்பாக இந்திய

வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற

இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அனைத்து

சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம்

தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார். சம்பளத்திற்கான போராட்டங்களின் போது

மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது

வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.

அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார்.

பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார்.

இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட

விரும்புகிறேன். அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும்

நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்.’

Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார

தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி

செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 130 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாட்டின் மருந்து தேவையை

உள்நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் வருடாந்தம் 60 பில்லியன் ரூபா நாட்டுக்கு மீதமாகும். குறித்த இலக்கை

வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மருந்துப் பொருள் உற்பத்தி மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள்

குறித்து நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

தற்போது ஆசிய வலயத்தில் அதிக மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கையாகும். உடனடியாக இந்த

நிலைமை மாற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பங்களிப்பதற்கு பாரியளவில் சுதேச முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காக்கொண்ட மருந்து உற்பத்திக்காக 400 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரில் தாபிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆபிரிக்கா

மற்றும் தென்கிழக்காசிய வலயத்தில் மருந்து பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. இந்த சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதும் இதன் ஒரு நோக்கமாகும்.

அரச துறையை முன்னேற்றும் அதேநேரம் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. மருந்து பொருட்கள் உற்பத்திக்காக

முதலீட்டு முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மருந்து பொருள் உற்பத்தி இறக்குமதி நிறுவனங்களிடம் திறந்த அழைப்பொன்றை விடுத்தார்.

சுதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வலயம் ஒன்று அனுராதபுரம் ஒயாமடு பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. 25 நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 300 மில்லியன்

அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை செய்வதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய அரசின் கீழ் நாட்டின் மருந்து உற்பத்தியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை நாட்டில் உற்பத்தி செய்யும் பணிகள்

ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தியை பதிவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகின்றது. அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியதன்

தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் சுதேச மருந்து பொருட்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை

தீர்ப்பதற்காக தனியான பிரிவொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அரச மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை பொது மக்களுக்கு கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சதோச மற்றும்

கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையங்களில் 100 மருந்து விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ,

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினதும்

துறைசார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் மருந்து பொருள் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Posted in இலங்கை செய்திகள்

கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு

கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு

கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு

முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக் கொண்டார்.

இச்சந்திப்பின்போது பிரதமர் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை

ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில்

தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான

ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

கனடா தமிழ் முதலீட்டாளர்களை
கனடா தமிழ் முதலீட்டாளர்களை
Posted in இலங்கை செய்திகள்

செம்மணி சுடலைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டும் யாழ் மருத்துவமனை – மக்கள் எதிர்ப்பு

செம்மணி சுடலைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டும் யாழ் மருத்துவமனை – மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவ கழிவுகளை செம்மணி

சுடலைக்கு கொட்டி வரும் யாழ்ப்பாண மருத்துவ மனையின் செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த மருத்துவ கழிவுகளின் மக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சறுத்தல்

ஏற்படும் என்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு பலமாக உள்ளது ,இதனால்

நோய் தோற்று அதிகமாகும் என அஞ்ச படுவதால் , இந்த கழிவு கொட்டும் செயல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

யாழ் மருத்துவ மனையின் சமீப கால செயல் பாடுகள் மக்கள் மத்தியில்

கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்

வவுனியாவில் மாணவனின் பல்லை உடைத்த – வாத்தியார்

கடந்த தினம் வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வு ஒன்றில் ஒலிவாங்கி செயல் இழந்துள்ளது

அதனை அடுத்து மீள ஒன்றை எடுத்து வரும் படி வாத்தியார் ஒருவர் கட்டளை

பிறப்பித்துள்ளார் ,எனினும் அதனை எடுத்து வர அவர் மறுத்த நிலையில் கன்னத்தில் ஓங்கி அடித்துளளார்

இவரது அடியினால் மாணவனின் பள்ளு உடைந்ததுடன் ,அவனது கன்னம் வீங்கிய நிலையில் உள்ளது

வீடு சென்ற மாணவன் அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெற்றவருக்கு தெரிவித்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

ரவுடிகளாகி மாறி வரும் ஆசிரியர்கள்

Posted in இலங்கை செய்திகள்

யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழ்ப்பாண பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று அந்த

வீட்டின் உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்து சென்றுள்ளது

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகள் செய்து வருகின்றனர் ,

கோட்டாவினால் உருவாக்க பட்ட ரவுடி கும்பல் ஒன்றே மேற்படி இழி செயலை செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

Posted in உலக செய்திகள்

கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து

கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து

கனடாவில் 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்தான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
டொராண்டோ:

கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண்

குழந்தைகளுடன் ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர். இதற்கு காரணம், தனது இளைய குழந்தை (19 மாத

பெண் குழந்தை) முக கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்துவதுதான் என்று சவுத்ரி கூறினார். மேலும், விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது

மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட

சகித்துக்கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முக கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை என கூறப்படுகிறது

. இதற்கிடையே நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், தீவிரமாயினர். அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு

வெளியேறுமாறு கூறினர். அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், போலீசாரையும் வரவழைத்தனர். அதைத்

தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர். ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என

கூறி விட்டனர். இதற்கிடையே போலீசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். விமான சேவையும் ரத்தானது. இருப்பினும் கனடாவில் கொரோனா

கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்தார். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முக

கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.