Posted in உலக செய்திகள்

ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு

ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு

தேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல்

கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.

ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்

ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-

‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக

யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில

அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.

கொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே

அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.

நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி

அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.

எனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.

ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர்.

அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.

எனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை

வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.

கட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா? அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ்

நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.

அப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும்.

இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.

தேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு

செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.

கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து

கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

பிரிட்டன் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து


விரைவில் முழு லொக் டவுன் ஆகும் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

இந்த முழு அடைப்பு பிரிட்டன் பொருளாதாரத்தில் மிக பெரும் இடியை தரும் என ஆளும் அரசு தெரிவித்துள்ளதுடன்

மக்களின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு அரசு

செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இதனால் புதிய வியாபாரிகளை

உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசு செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

எதிர் வரும் எட்டு வாரங்கள் முதல் இந்த லொக் டவுன் ஏற்படும் நிலைக்கு செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

    பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

    பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

    சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இருபது பேர் பலியாகியுள்ளனர்

    மேலும்3,991 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

    மக்களுக்கு விடுக்க பட்ட வேண்டுதல்களை புறக்கணித்து மக்கள் வீதிகளில்

    முகக் கவசம் இன்றியும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்

    இதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும் நிலைக்கு அரசு

    செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் ,
    எதிர்

    வரும் எட்டு வாரங்களுக்குள் பிரிட்டன் முழு முடக்க நிலைக்கு வர கூடும் என அஞ்ச படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

      மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

      ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்

      நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும்

      வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த

      நினைவேந்தல் இடத்தில் இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.

      தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

      இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும்

      வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

      ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு

      பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.

      பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத்

      தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக

      வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.

      மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே

      விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி நிற்கின்றது என நாடுகடந்த

      தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

      Posted in உலக செய்திகள்

      12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      பிரிட்டனில் 12 நாட்களான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்த நாய்

      ஒன்று கடித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

      பெற்றவர்களின் அலட்சிய போக்கினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

      சிசுவை கோரமாக கடித்து குதறியது ,
      உடலில் பலத்த

      காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி சிசு இறந்துள்ளது

      கொலை குற்ற சாட்டில் பெற்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்

      பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்

      அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள எரிபொருள்

      நிலையம் ஒன்றுக்குள்
      புலி இனத்தை சேர்ந்த நச்சு கொடிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது

      இதனை கண்ணுற்ற மக்கள் பெட்ரோல் அடிப்பதை இடை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்


      அவுஸ்ரேலியாவில் அதிக வெப்பம் காரணமாக இவ்விதமான கொடிய விச யந்துக்கள் உலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

      பெற்றோல் நிலையத்திற்குள்
      பெற்றோல் நிலையத்திற்குள்
      Posted in இலங்கை செய்திகள்

      பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்

      பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்

      வீதி ஒழுங்குச் சட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பதாதைகளை வீதிகளில் காட்சிப்படுத்திய பெண் பொலிஸார் அக்கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

      மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், போக்குவரத்து பிரிவின்

      அதிகாரிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

      இந்தப் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு, பெண் பொலிஸாரை பயன்படுத்தியமைத் தொடர்பில் சமூக

      வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, அவர்கள் இந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்

      காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்

      ஹட்டன்-நுவரெலியா வீதி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருக்கும் காணியை அபகரித்தமை தொடர்பிலான விவகாரம் தொடர்பில், ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு

      விடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு அமைவாக, இராணுவ அதிகாரிகள் பலர், நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜராகியிருந்தனர்.

      இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, உள்ளிட்ட அப்படையணியின் கேர்ணல்கள் இருவரும் இன்னும் சில அதிகாரிகளும் நீதிமன்றத்தில்

      ஆஜராகியிருந்தனர். அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரும் ஆஜராகியிருந்தனர்.

      மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி, முன்னிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது,

      செப்டெம்பர் 15ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டு, வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

      கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலுள்ள காணியை இராணுவத்தினர் கையகப்படுத்திவிட்டனர். அத்துடன்,

      அக்காணியிலிருந்த சில கட்டடங்களையும் ஆக்கிரமித்துவிட்டனரென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      கொரோனா வைரஸ் தொற்றின் போது, தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்களாக மாற்றுவதற்காக, நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டது. ஜூலை மாதம் வரை

      மட்டுமே தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்குமென அறிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவ வீரர்களை அங்கு

      நிலைநிறுத்தியது மற்றும் கட்டடங்களை இராணுவ முகாமாக மாற்றிவிட்டதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் வாடிக்கையாளர், 50 வருட காலத்துக்கு அந்த நிலத்தை வைத்திருக்கிறார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த

      ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, அந்த நிலத்தை அந்த வாடிக்கையாளரிடமே ஒப்படைக்குமாறு, மனுவின் ஊடாக கோரியிருந்தார்.

      இந்த வழக்கில், இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 58 பேர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

      இவ்வாறான வழக்கொன்று இராணுவத்தினரால் இம்மாதிரியான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாதென

      இராணுவத்தின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரன்ன, இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணிகள், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

      இதேவேளை, வழக்கின் பிரதிவாதிகளா குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பை,

      எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு கோரி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு வழக்கை, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி ஒத்திவைத்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு

      ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு

      ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச்சபை அமர்வு நேற்று நியுயோர்க் நகரில் ஆரம்பமானது.

      எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வின் தலைவர் வொல்க் பொஸ்கிர் சுட்டிக்காட்டினார்.

      குறிப்பாக கொவிட்-19 போன்ற தொற்று நிலைமையில் இந்த எண்ணம் மிகவும் பலமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்

      அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல்நோக்கு செயல் திட்டமொன்று அவசியம் .என்று தெரிவித்தார்.

      கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த மாநாடு கடும் சட்டங்களுக்கு அமைய இடம்பெறுகிறது. இதனால், பல உலகத்

      தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. உலகத் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு

      ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு

      பிரதான வீதிகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் வாகனம் நிறுத்துவது முற்றாகத் தடை…

       சிறிய பாலங்கள் கம்பிப் பாலங்கள்இ மரப் பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள்…

       வீதிகளின் இருபுறமும் இரண்டு மில்லியன் மரக் கன்றுகளை நட திட்டம்….

      ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

      சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.

      போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுபுள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை

      ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

      நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும்

      வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

      கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று

      (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

      சிறிய பாலங்கள்இ மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களில் 8,000

      கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

      வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையானளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்குவதாக

      ஜனாதிபதி தெரிவித்தார். வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும்

      மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

      பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

      நிர்மாணப் பணிகளுக்கு தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வீதி நிர்மாணப் பணிகளை

      கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதும் ஒப்பந்தக்கார்கள் இருதரப்பினர்களினாலும் நடைபெற வேண்டும். உப

      ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

      அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

      அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள்இ சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

      அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோஇ இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின்

      செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

      அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

      வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க

      தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

      யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (15.09.2020) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப்

      பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

      குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்

      தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

      இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில்

      காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை

      அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

      எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

      இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட

      பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

      எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால்

      பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்

      நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்

      நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

      தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

      இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள்,

      பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

      அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற

      ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

      Posted in உலக செய்திகள்

      ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை

      ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை

      பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

      அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்
      சசிகலா

      சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை

      விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம்

      வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால்

      அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

      இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

      இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.

      மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத

      தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.

      இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

      Posted in உலக செய்திகள்

      சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

      சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

      சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 பொருட்களை

      அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

      சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
      கோப்புப்படம்

      வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ் தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

      இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது

      சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

      மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

      எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர்

      உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

      இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை

      நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

      Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

      முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்

      முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்

      இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு

      கல்லறைகளை தோண்ட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

      முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும் – நூதன தண்டனை அறிவிப்பு
      கோப்புப்படம்

      கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக

      கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.

      இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை

      தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

      அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

      இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள்

      தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை

      அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.

      மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது

      விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.

      Posted in உலக செய்திகள்

      கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்

      கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்

      திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு 1990-ம் ஆண்டு

      பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்


      1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் நித்யானந்தாவுக்கு எழுதிய கடிதம்
      அனுப்பர்பாளையம்:

      சமீப காலமாக வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் கிண்டல், கேலி சித்திரங்கள், ஜோக்குகள், மற்றும் மீம்ஸ்கள் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

      வருகிறது. அந்த பதிவுகளை லட்சக்கணக்கானோர் பார்ப்பது மட்டுமின்றி, அதை உடனடியாக நண்பர்களுக்கு அனுப்பியும், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சாக வைப்பதால் பல லட்சம் பேர் உடனே

      பார்த்து விடுகின்றனர். இதனால் உற்சாகமடையும் நெட்டிசன்கள் தங்கள் பதிவுகளை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக சமூக வலைதளங்கள் இளைஞர்கள், மாணவ-

      மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

      இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க

      வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக

      வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

      திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர்,

      கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

      எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

      தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள்

      மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன்

      தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவையும், தற்போது அவர் உள்ள கைலாசா என்ற இடம் மற்றும் அவருடைய பெண் சிஷ்யர்கள் பற்றியும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி

      பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 1990-ம் ஆண்டில் பிறந்தவர்கள் என்ற பெயரில் திருமணமாகாமல் மன

      உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து

      அனுப்பப்படுவது போன்ற கடிதம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

      Posted in பிரித்தானிய செய்தி

      செக்ஸ் தொல்லை கொடுத்து- 2 பெண்களை தாக்கிய எம்பிக்கு – 2வருடம் சிறை

      செக்ஸ் தொல்லை கொடுத்து- 2 பெண்களை தாக்கிய எம்பிக்கு – 2வருடம் சிறை

      பிரிட்டனில் மிகள் புகழ்பெற்று விளங்கும் Elphicke, 49, வயதுடைய எம்பி ஒருவர்


      இரு பெண்களை பாலியல் தொல்லை கொடுத்து தண்டித்தார் என்ற குற்ற

      சாட்டில் தொடரப் பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

      நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த வழக்கில் வழங்க பட்ட

      தீர்ப்பில் பல முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளமைக்கு குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு

      2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு

      லெபனான் நாட்டில் இரண்டாயிரத்து அறுநூறு வருடம் பழமை

      வாய்ந்த வைன் தொழில் சாலை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

      புராதான ஆய்வாரட்சியாளர்கள் நாடத்திய தேடுதல் சோதனையின்

      பொழுது இந்த அழகிய பொக்கிஷம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

      உலகில் இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட முதலாவது குடிபான தொழில் சாலை

      இதுவாக கண்டறிய பட்டுள்ளது
      தொடர்ந்து ஆய்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      இதே பகுதியில் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

      2600 வருடம் பழமை வாய்ந்த
      2600 வருடம் பழமை வாய்ந்த
      Posted in இலங்கை செய்திகள்

      உடபுஸ்ஸலாவ ரப்பான அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா photo

      உடபுஸ்ஸலாவ ரப்பான அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா photo

      உடபுஸ்ஸலாவ ரப்பான தோட்டம் அருள்மிகு ஸ்ரீ அம்மன் ஆலய கும்பாபிஷேக

      விழாவை முன்னிட்டு இன்று (15) நடைப்பெற்ற எண்ணை காப்பு விழாவில்

      ம.ம.முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சர் கெளரவ

      கலாநிதி வே ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பாதிப்பு

      பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைக்கு
      போதிய வைத்தியர் இன்மையால்
      நோயாளர்கள் பாதிப்பு

      நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ (474A) எல்பொட (474J) போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பெரட்டாசி தோட்டம் ரஸ்புருக் பிரிவுஇ பெரட்டாசி பிரிவுஇ பூச்சிகொட பிரிவுஇ பெரட்டாசி தொழிற்சலை

      பிரிவுஇ மேரியல் பிரிவுஇ அயரி பிரிவுஇ எல்பொட வடக்குஇ மேமொழி பிரிவுஇ காச்சாமலை பிரிவுஇ கட்டுக்கித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் பிரிவுஇ கந்தலா தோட்டம் போன்ற

      தோட்டங்களில் சுமார் 10.000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள்;;. இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில்

      விவசாயம் செய்து வருகின்றனா.; இவர்களின் வைத்திய தேவையின் பொருட்டே பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

      முன்னால் ஜனாதிபதி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க ஆட்சிக்காலத்தி; தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்க்ம் பொருப்பேற்கும் திட்டத்தின் கிழ் மலையகத்தில்

      காணப்பட்ட வைத்தியசாலைகளான இறம்பொடை – பெரட்டாசி தோட்ட வைத்தியசாலைஇ ஹேவாஹெட்ட -முல்லோயா தோட்ட வைத்தியசாலைஇ கந்தபொலை – ஜபொரஸ்ட் தோட்ட

      வைத்தியசாலைஇ கடுகன்சேனை – பார்கேபல் தோட்ட வைத்தியசாலைஇ ஹட்டன்- டிக்N;;காயா வைத்தியசாலை போன்றவை தோட்ட நிர்வாகத்த்pலிருந்து அரசாங்க

      வைத்தியசேவைக்கு உள்வாங்கப்பட்டது. இதன்படி இவைகளை திருத்தும் பணிகளும் இதற்கான வளங்களை பெற்றுகொடுப்பதில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுடது. அதன் பயனாக பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை

      திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெரும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியரும் 03 ஊழியர்களும் 02 காவலாளியுமே காணப்படுகின்றனர். இருக்கும்

      வைத்தியர் காலை 8.00 மணிக்கு வந்து மாலை 4.00 மணிக்கு தனது சேவையை முடித்து விடுவார். 4.00 மணிக்கு பிரகு மருந்து எடுக்க முடியாது. வெள்ளிக்கிழமை 12 மணிக்கு வீட்டுக்கு போய் விடுவார்

      திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கே மீண்டும் வருவார். சனி ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பூட்டு தான். இந் நிலையில் மேலும் ஒரு வைத்தியர் இந்த வைத்தியசாலைக்கு

      தேவைப்படுகின்றது. இதனை பெற்றுக் கொடுக்க சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      தொழிலாளர்களோ மாலையில் வேலைகளை முடித்துவிட்டு தான் வைத்தியசாலைக்கு வருவார்கள். அப்போது வைத்தியர் இருக்கமாட்டார். இனி வைத்தியரின் வீட்டுக்கு சென்று பணம்

      கொடுத்தே மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வைத்தியரும் வேரு வேலைகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றால் அன்று வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும்.

      பல லட்சம் ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடிய இந்த வைத்தியசாலை தற்போது மக்களுக்கு முறையான பயன் இன்றி காணப்படுகின்றது. நோயாளிகள்

      தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது. கட்டில் போன்றவையும் இல்லை. இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது நோயாளர்கள் தங்கி வைத்தியம் பெருவதற்கே ஆனால் தற்போது அவை

      நடைமுறையில் இல்லை. மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம் காரணம் 25 கி.மீ

      பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த பாதையில் தற்போது குறிபிட்ட தூரம் செப்பனிடப்பட்டு மிகுதியானது திருத்தப்பட்டு வருகின்றது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்

      பெற்றுறுள்ளது. பலர் இறந்தும் பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும்இ குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால்; இடையில் இறந்துள்ளனர்.

      காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது 9

      பிரிவினை கொண்ட தோட்டத்தில் யுஆடீருடுயுNஊநு இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லை. இது தொடர்பாக மக்கள் பல முறை போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை

      எனவே வைத்தியர்கனை நியமித்து வைத்தியசாலை எப்போது முறையாக இயங்குவது அது வரைக்கும் 09 தோட்ட தொழிலாளர்களின் வைத்திய சேவையை இவர்கள் எங்கு போய்

      பெற்று கொள்வார்கள். தற்N;பாது சுமார் 9 தோட்டங்களுக்கும்; பொதுவாக ஒரு வைத்தியரே காணப்படுகினறார். அங்கும் முறையான மருந்து வசதிகள் இல்லை அவசர தேவை ஏற்படும்

      போது தோட்ட லொறிகள் மூலமாக புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். பாதையோ குன்றும்

      குழியுமாக காணப்படுகின்றது. லொறியிலும் முச்சக்கர வண்டியி;லும் செல்லும் போது குழந்தைகள் பாதையிலேயே

      கிடைத்துள்ளது. சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் இறந்தும் உள்ளனர்.

      இவ் நவீன காலத்தில் இப்படியும் நடக்கின்றது என்றால்;. அது மிகவும் ஆச்சரிய படுத்துவதாக்கும் வேதனைபடுவதற்குரியதாகும் சிலருக்கு தகுந்த நேரத்தில் வாகனங்கள் கிடைப்பதும் இல்லை சிலர்

      தனியார் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றனர்.

      தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வகையான நிலைமை வேதனைக்குறிய விடயமாகும்.