நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்

Spread the love

நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்

நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள்,

பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற

ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *