Posted in உலக செய்திகள்

டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி

டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – பாராளுமன்ற சபாநாயகர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக

கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அதிபர் டிரம்பை 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார்.

இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம்

செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது.

அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பாக வாக்க்டுப்பு நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான விவாதம்

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பேசியதாவது:-

நாட்டுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து

வெளியேற்றப்பட வேண்டும். நாம் விரும்பும் நமது அமெரிக்க நாட்டின் தற்போதைய ஆபத்து டொனால்டு டிரம்ப் தான்.

Posted in உலக செய்திகள்

ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு

ஈரான் கடல் பரப்பை சுற்றி அமெரிக்கா ,இஸ்ரேல் ,தென்கொரியா கப்பல்கள்

முற்றுகை இட்டுள்ளன ,இவர்களின் வரவை அடுத்து ஈரானிய போர்

கப்பல்கள் ஓமான் வளைகுடா பகுதியில் திடீர் ஏவுகணை சோதனை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது ,மேலும்

எழுநூறு சூப்பர் டோரா சண்டை படகுகள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்க பட்டுள்ளன

இவற்றில் கனரக ஏவுகணைகள் உள்ளன ,அமெரிக்காவின் மிரட்டலுக்கு

தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த காப்பு நடவடிக்கை ஏற்படுத்த பட்டுள்ளது

அணுகுண்டு சோதனை இருபது வீதம் நிறைவு பெற்றுள்ளதாக

அறிவிக்க பட்டதன் பின்னர் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி

கிழக்கு சிரியாவின் எல்லைப்புற பகுதியில் ஈரான் ஆதரவு படைகள் நிலை கொண்டுள்ளனர்


இவரக்களை இலக்கு வைத்து சிரியா விமானங்கள் தாக்குதலை நடத்தின

இதில் பலர் பலியாகியள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

மேலும் Deir el-Zour பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி 23 அப்பாவி

பொதுமக்கள்பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மனித உரிமை காப்பகம் அறிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை

அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை

ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் யூடுப் பக்கத்தில் காணொளிகள் பதிவிட ஒருவாரம் தடை செய்ய பட்டுள்ளது


எதிர்வரும் இருபதாம் திகதி டிரம்ப் பதவி விலகி புதிய அதிபருக்கு ஆட்சியை விட்டு கொடுக்க வேண்டும் ஆனால் அவர் முரண்டு

பிடித்து பதவி விலக மறுத்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடக தடைகள் அதிகரித்து வருகிறது

ஜனாதிபதி பதவி விலகும் சட்ட மசோதா மூலம் நடவடிக்கைகள்

மேற்கொள்ள பட்டு வரும் நிலையில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்

சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர்,

தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.

முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் நேற்று

சென்னை வந்தடைந்தது. உட னடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு

சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது.

தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒத்திகை, ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி வருகிற16-

ந்தேதி முதல் தினமும் 100 பேருக்கு போடப்படும். தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி பற்றி சென்னை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிச்சார்த்த முறையில் தடுப்பூசி போட்டு பரிசோதித்து, ஆய்வும் செய்துள்ளோம்.

இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட

வேண்டாம். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நானும் முன் மாதிரியாக

தேவைப்பட்டால் அனுமதி பெற்று தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.

இப்போது கூட இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகம்

தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1.2 சதவீதமாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, பெல்ஜியம்

ஆகிய நாடுகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கை, திட்டமிடுதல்களால் இன்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

மனைவியை நண்பர்கள் கற்பழிக்க விட்டு இரசித்த கணவன்

சென்னை வில்லிவாக்கத்தில் காதல் மனைவிக்கு நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர்.

நண்பர்களோடு கூட்டு பாலியல் தொல்லை- காதல் மனைவி புகாரால் சிக்கிய இளைஞர்

சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலனியைச் சேர்ந்த கணேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, கல்யாணம் வரை சென்றுள்ளது. கடந்த மாதம் 5-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத

இடத்தில் கணேஷ், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பம் நடத்தி உள்ளார்.

இதன் பின்னர் காதல் மனைவி என்றும் பாராமல் கணேஷ் மிகவும் வக்கிரமாக நடந்து கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

17 வயது இளம்பெண் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவி கண் எதிரே உல்லாசமாக இருந்துள்ளார். தனது நண்பர்களையும்

வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால் அவரது பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர்

போலீஸ் நிலையத்தில் காதல் கணவரான கணேஷ் மீது இளம்பெண் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புகார் விவரம் வருமாறு:-

எனது பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டதால் எனது பெற்றோர் என் மீது காவல் நிலையத்தில் புகார்

அளித்தனர். நான் எனது கணவர் கணேசுடன் வாழப்போவதாக கூறி விட்டு அவருடன் சென்று விட்டேன்.

நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து முன் பணம் செலுத்தி கடந்த 23-ந்தேதி அன்று வில்லிவாக்கம் ராஜேஷ் நகரில் வாடகைக்கு குடியேறினோம். அன்று

இரவே எனக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி அயனாவரம், மங்களாபுரம் பகுதியில்

வசித்து வரும் 17 வயது பெண்ணை தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தி அவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார்.

ஓரிரு நாட்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு சந்தேகம் ஏற்பட்டு நான் எனது கணவரிடம்

கேட்டபோது எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார்.

ஆபாச வார்த்தைகளால் திட்டியும் என்னை இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி சென்றார்.

எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் சித்ரவதை செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு

உடல் ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டது. ஆகவே நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன்.

அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கூறி வற்புறுத்தினார். அவரது

வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பின் அவருடன் இருந்த பெண்ணும் என்னிடம் தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார்.

ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது

நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் மூடி கடுமையாக சித்ரவதை செய்தார்.

நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை படம் பிடித்தது போல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க

வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். எனது வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால்

அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன்.

எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கணேசிடம் ஏமாந்த மற்ற 10 பெண்களும் யார்-யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணேசனுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேஷ் ‘லவ்லி கணேஷ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். காதல் மன்னன் போல வில்லிவாக்கம் பகுதியில் இவர் வலம் வந்ததாகவும் தெரிகிறது. இதனாலேயே நண்பர்கள் லவ்லி கணேஷ் என்று அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையிலும் புதிய வகை கொரோனா

இலங்கையிலும் புதிய வகை கொரோனா

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில்

குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர

பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் விடுதலை – வழக்கு தள்ளுபடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை

சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு

எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர்

மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்

“பிரதீப் மாஸ்டர்” எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, “கஜன் மாமா” எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான

மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் மற்றும் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல்

அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்

நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.

இதன்பிரகாரம், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில், கடந்தாண்டு நவம்வர்

24ஆம் திகதி, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (11) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாது என

மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

விக்கி சம்பந்தி வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரனோ

ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முதல் தன்னை சந்தித்த சகலரும், தங்களை சுய தனிமைக்கு உட்படுத்துமாறு, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.

அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி காரணமாக கடந்த 09 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதல் 4 பேர் மரணம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(12) 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு-13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

கம்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) காணாமல்போன ஆண் ஒருவர் நேற்று காலை மகாவலி கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை, கங்கவட்ட பகுதியில் குடும்பம் ஒன்று சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம்

முடிவடைந்ததை அடுத்து குறித்த வீட்டில் இருந்து நபர் ஒருவர் (வயது – 60) கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அது தொடர்பில் கம்பளை பொலிஸ்

நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகி இருந்தன.

இந்நிலையில் கம்பளை ரயில்வே கடவைக்கு அருகில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று

தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது காணாமல்போன நபருடைய சடலம் என்பதனை உறவினர்கள் ஊடாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்து

செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்

ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும்

நோயாளிகளிருந்து ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து,

அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும்

நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது 0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்

ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற

நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா

உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த

மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகின்றது.

தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமாஇ? என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு

யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும்

மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்லைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்ற

கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது

பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்து முக்கியமானது. அவர் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு பிரதமர் சமீபத்தில் பதிலளித்துள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு

திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த

கோரிக்கைக்கு அமைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு

காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நேற்று (2021.01.11) சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் புத்தசாசன சமய

மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இத்தினத்தில் இது குறித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படும். 2023

ஆண்டு முதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுவரை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பல்வேறு சதவீதங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி

மன்றங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டது. இப்புதிய ஒப்புதலுக்கமைய முழு நாட்டிற்கும் ஒரு பொழுதுபோக்கு வரி அறிமுகப்படுத்தப்படும்.

உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணி, இலங்கை திரைப்பட இயக்குநர் சங்கம், இலங்கை திரைப்பட காட்சிபடுத்துனர் சங்கம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பல கலைஞர்கள் கடந்த 8ஆம் திகதி கௌரவ பிரதமரை சந்தித்து கொவிட்-19 நெருக்கடிக்கு

மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

அவர்களின் பிரதான கோரிக்கைகளில் பொழுதுபோக்கு வரியை நீக்குமாறும் கோரப்பட்டது. அதற்கமைய கௌரவ பிரதமரின்

தீர்மானத்திற்கேற்ப இன்றைய தினம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 1,946 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இதே நாளில் 213,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 529 பேர் பலியாகியும் 46,169 பேர் பாதிக்க படும் உள்ளனர்

நோயின் தாக்குதல் வீச்சு அதிகரிப்பை அடுத்து புதிய சட்டங்கள்

விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

இறந்தவர் எழுந்து வந்த அதிசயம் – அதிர்ச்சியில் மனைவி

கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை

அடக்கம் செய்துள்ளார். ஆனால். 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் கணவர் உயிருடன் வந்து அதிர்ச்சி அளித்தார்.

இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவன் – அதிர்ந்துபோன மனைவி
உயிருடன் வந்த ஜூலியோ
டெகுசிகல்பா:

கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து

உயிருடன் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65) மற்றும் விக்டோரியா. கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு

குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்கு சென்றுள்ளார்.

இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் இன்று வீட்டிற்கு வரவில்லை.

நடைபயணமாக சென்ற தனது கணவர் வராததால் சந்தேகமடைந்த மனைவி விக்டோரியா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 30-ம் தேதி எல் கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் விக்டோரியாவுக்கு இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் உங்களது கணவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வர வேண்டும் என விக்டோரியாவுக்கு மருத்துவமனை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும்போது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிணவறையில் இருந்த முதியவர் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என அடையாள காட்டுங்கள் என கேட்டுள்ளனர். அந்த உயிரிழந்த நபரை பார்த்த விக்டோரியா இவர் தனது கணவர் ஜூலியோ தான்
என கூறியுள்ளார்.

உயிருடன் வந்த ஜூலியோ

இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த அந்த நபரின் உடலை விக்டோரியாவிடம் மருத்துவ ஊழியர்கள் ஒப்படைத்தனர். உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார்.

அந்த நபரை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது விக்டோரியாவின் மகன் ஒருவர் இது நமது தந்தை தான என சந்தேகம் உள்ளது என கேட்டுள்ளார். ஆனால், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

இறுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரை விக்டோரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், திரினிடேட் மாநகராட்சி பகுதியில் மயங்கி விழுந்த ஜூலியோவை அவ்வழியாக சென்ற சிலர் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஒரளவு நினைவு திரும்பியதையடுத்து தனது வீடு எங்கு உள்ளது என்ற தகவலை ஜூலியோ தெரிவித்துள்ளார்.

ஜூலியோவின் வீடு உள்ள இடம் குறித்து தகவலறிந்த மருத்துவ ஊழியர்கள் அவரது உடல்நலம் சற்றும் முன்னேறிய பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதாவது, தனது கணவர் இறந்து என்று கடந்த 30-ம் தேதி வேறு ஒரு நபரை விக்டோரியா அடக்கம் செய்ததில் இருந்து 4 நாட்கள் கழித்து ஜனவரி 3-ம் தேதி ஜூலியோ வீட்டிற்கு வந்தார்.

கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் நடந்த விவகரத்தை மருத்துவ ஊழியர்கள் விக்டோரியாவிடம் தெரிவித்தனர். அந்த தகவலையடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார்.

மேலும், தனது கணவரை அவர் கண்ணீர் மல்க வரவேற்றார். கணவன் இறந்து விட்டார் என வேறு நபரை அடக்கம் செய்த பின்னர் உண்மையான கணவர் உயிருடன் வந்த சம்பவம் ஹோண்டுராஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க தடைக்கு -சீனா நெத்தியடி

அமெரிக்க தடைக்கு -சீனா நெத்தியடி

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.

மேலும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.‌ குறிப்பாக அமெரிக்காவின் தேசிய

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார்.

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உள்பட பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து சீன வணிக அமைச்சகம்

வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு

வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் சட்ட நடவடிக்கைகளை

மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

வாரத்துக்கு முன் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்.

பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோசையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முன்னுரிமையான பணி என தெரிவித்தார்