ரஸ்யா தாக்குதல் 19பேர் பலி
Posted in உலக செய்திகள்

ரஸ்யா தாக்குதல் 19பேர் பலி

ரஸ்யா தாக்குதல் 19பேர் பலி

ரஸ்யா தாக்குதல் 19பேர் பலி ,கிரிவி ரிஹ் நகரில் ரஷ்யா 19 பேரைக் கொன்றதாக உக்ரைன் கூறுகிறது

வெள்ளிக்கிழமை உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ் நகரில் ரஷ்ய தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்

அங்குள்ள இராணுவக் கூட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

ரஷ்ய அறிக்கையை தவறான தகவல் என்று உக்ரைனிய இராணுவம் கண்டித்தது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் கூகிள் நியூஸ் கீப் அப்டேட் செய்யப்பட்டது, தி பிசினஸ் ஸ்டாண்டர்டின் கூகிள் செய்தி சேனலைப் பின்தொடரவும்

பிராந்திய ஆளுநர் செர்ஹி லைசாக், டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் ஏவுகணை குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கி 18 பேரைக் கொன்றதாகவும், தீ விபத்துகளை ஏற்படுத்தியதாகவும் எழுதினார்.

பின்னர், ரஷ்ய ட்ரோன்கள் வீடுகளைத் தாக்கி ஒருவரைக் கொன்றதாகவும் நகர இராணுவ நிர்வாகி ஒலெக்சாண்டர் வில்குல் கூறினார்.

பிராந்திய ஆளுநர் செர்ஹி லைசாக், டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் ஒரு ஏவுகணை குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கி 18 பேரைக் கொன்றதாகவும், தீ விபத்துகளை ஏற்படுத்தியதாகவும் எழுதினார்.

பின்னர், ரஷ்ய ட்ரோன்கள் வீடுகளைத் தாக்கி ஒருவரைக் கொன்றதாகவும் நகர இராணுவ நிர்வாகி ஒலெக்சாண்டர் வில்குல் கூறினார்.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட படங்கள், சாம்பல் நிற புகை வானத்தில் எழுந்ததால், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்கள் நடைபாதையில் கிடப்பதைக் காட்டின.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், டெலிகிராமில் ஒரு பதிவில், ஒரு உணவகத்தில் “யூனிட் கமாண்டர்கள் மற்றும் மேற்கத்திய பயிற்றுனர்களின் கூட்டத்தை” குறிவைத்து “உயர் துல்லியமான தாக்குதல்” நடத்தப்பட்டதாகக் கூறியது.

“தாக்குதலின் விளைவாக, எதிரிகளின் இழப்புகள் மொத்தம் 85 படைவீரர்கள் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் அதிகாரிகள், அத்துடன் 20 வாகனங்கள் வரை” என்று அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பின்னர் ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். அமெரிக்கா கடந்த வாரம் ரஷ்யாவுடன் உடன்பட்டதாகக் கூறியது மற்றும்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய் ,3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம்,

தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான்.

அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.

அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.

குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.

நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.

நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு

அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு ,எல்பிட்டிய – ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுரா ஆட்சியில் தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

இது திட்டமிடப்பட்ட உள்ளக சாதியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .

அமெரிக்க பொருட்களுக்கு 34 வீத வரி விதித்தது சீனா
Posted in உலக செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு 34 வீத வரி விதித்தது சீனா

அமெரிக்க பொருட்களுக்கு 34 வீத வரி விதித்தது சீனா

அமெரிக்க பொருட்களுக்கு 34 வீத வரி விதித்தது சீனா ,அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய வரித் திருத்தம் அமுலாகும் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியினால் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வை வரிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தீர்வை வரியை அதிகரிப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச வர்த்தக சட்டத்திற்கு முரணானதென சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இராசமாணிக்கம் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்

தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர் ,வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களொ பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத்

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் நிராகரித்தமை போல் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிராகரிப்பார்கள் என்ற செய்தியை தைரியமாக பாராளுமன்றில் சொல்லியிருக்கின்றேன்.

மட்டக்களப்பில் அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் விட்ட தவறை இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.

அவர்களுக்கு பாராளுமன்றில் உரையாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. செயற்றிறன் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

சிலவற்றை பாராளுமன்றில் கதைத்தால் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளார்கள் என்றார்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா
Posted in இலங்கை செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா

இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்

பப்புவா நியூ கினியாவின் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவின் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் நிலநடுக்கம் ,பப்புவா நியூ கினியாவின் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவின் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

18,800 மக்கள் வசிக்கும் கிம்பே நகரிலிருந்து வடகிழக்கே 185 கிமீ தொலைவில் 49 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

கலா அக்கா பிறந்த நாள் கலக்கல் அவுஸ்ரேலியா 
Posted in வன்னி மைந்தன் உதவி

கலா அக்கா பிறந்த நாள் கலக்கல் அவுஸ்ரேலியா 

கலா அக்கா பிறந்த நாள் கலக்கல் அவுஸ்ரேலியா

கலா அக்கா பிறந்த நாள் கலக்கல் அவுஸ்ரேலியா ,வவுனியா பகுதியில் சிறார்களுக்கு உணவளித்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் .

இன்றைய தனது பிறந்த நாளில் உணவலு அளித்து மகிழ்வித்த காலா அக்காவுக்கு எமது இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களி தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது ,ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலீசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது


மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த

இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.


இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.


இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.


அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.


அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர்

துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு ,ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
Posted in இலங்கை செய்திகள்

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்

கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும் ,கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பில் யாழில் இன்று (03) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

‘ தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்தில் அது பேசு பொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.

ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட அரசுடமையாக்க பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும்.” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம் ,வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சிரியாவின் இராணுவத் தளங்கள் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்குகிறது
Posted in உலக செய்திகள்

சிரியாவின் இராணுவத் தளங்கள் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்குகிறது

சிரியாவின் இராணுவத் தளங்கள் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்குகிறது

சிரியாவின் இராணுவத் தளங்கள் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்குகிறது ,சிரியாவின் டமாஸ்கஸ், ஹமா மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் உள்ள இராணுவ விமானத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல்

புதன்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் ஹமா இராணுவ விமான நிலையத்தை கிட்டத்தட்ட அழித்தது மற்றும் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களிடையே டஜன் கணக்கான

காயங்களுக்கு வழிவகுத்தது என்று சிரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, தெற்கு சிரியாவின் தாசில் பகுதியில் இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் பல ஆயுதப் படைகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம்

கூறியது. இந்த பணியின் போது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களால் பதிலளித்தன.

இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முன்னணியைத் திறக்க விரும்பவில்லை என்று சிரியாவின் தலைமை கூறியுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் போது, ​​இராணுவ நிறுவல்கள் மற்றும் ஆயுதங்களை குறிவைத்து இஸ்ரேல் பல ஆண்டுகளாக சிரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு PG நாடுகள் ஏவுதளத்தை மறுத்துவிட்டன
Posted in உலக செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு PG நாடுகள் ஏவுதளத்தை மறுத்துவிட்டன

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு PG நாடுகள் ஏவுதளத்தை மறுத்துவிட்டன

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு PG நாடுகள் ஏவுதளத்தை மறுத்துவிட்டன ,சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் குவைத் ஆகியவை அமெரிக்க போர் விமானங்கள் ஈரானை தாக்க தங்கள்

பிரதேசங்களையும் வான்வெளிகளையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டை குண்டுவீசுவதாக மிரட்டியதை அடுத்து, சவுதி அரேபியா மற்றும் பிற பாரசீக வளைகுடா

கடற்கரை நாடுகள் ஈரானை தாக்க அமெரிக்க போர் விமானங்கள் தங்கள் விமானநிலையங்கள் அல்லது வான்வெளிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அனைத்தும் தங்கள் வான்வெளிகள் அல்லது பிரதேசங்களை ஈரானுக்கு எதிரான ஏவுதளமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று

அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளன, எரிபொருள் நிரப்புதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உட்பட, என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி மிடில் ஈஸ்ட் ஐயிடம் தெரிவித்தார்.

வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை இராணுவத் தாக்குதலுக்கு உட்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முக்கியமான இராணுவத் திட்டமிடல் குறித்து விவாதிக்க பெயர் தெரியாத நிலையில் அதிகாரி பேசினார்.

“அவர்கள் இதில் ஈடுபட விரும்பவில்லை” என்று அதிகாரி கூறினார்.

வளைகுடா பாரசீகக் கடலோர நாடுகளின் பிடிவாதமான போக்கு, யேமனில் உள்ள அன்சரல்லா எதிர்ப்பு இயக்கத்தின் மீது பாரிய வான்வழித்

தாக்குதல்களைப் பயன்படுத்தி, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மேசைக்கு தெஹ்ரானை அழைத்துச் செல்ல நம்பிக்கை கொண்டிருந்த டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு பின்னடைவாகும்.

செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக ஏமன் வெற்றிகரமான தாக்குதலைத் தொடங்கியது
Posted in உலக செய்திகள்

செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக ஏமன் வெற்றிகரமான தாக்குதலைத் தொடங்கியது

செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக ஏமன் வெற்றிகரமான தாக்குதலைத் தொடங்கியது

செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக ஏமன் வெற்றிகரமான தாக்குதலைத் தொடங்கியது ,வடக்கு செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான “ட்ரூமன்” மற்றும் அதன் துணைப் போர்க்கப்பல்கள் மீது

ஏமன் ஆயுதப் படைகள் கூட்டு கடற்படை, ட்ரோன் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சனா, சாடா மற்றும் பல மாகாணங்களில் 36க்கும் மேற்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பல பொதுமக்கள் கொல்லப்பட்டு

காயமடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு செங்கடலில் விமானம் தாங்கிக் கப்பலான “ட்ரூமன்” மற்றும் அதனுடன் இணைந்த கப்பல்கள் மீது ஏமன் ஆயுதப் படைகள் கூட்டு கடற்படை, ட்ரோன் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சர்வவல்லமையுள்ள கடவுளின் அருளால், இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது, மேலும் ஆக்கிரமிப்புத் தாக்குதலின் ஒரு பகுதி நடுநிலையானது.

பிராந்தியத்தில் அச்சுறுத்தல்களை குறிவைத்தல் தொடரும், மேலும் காசா மீதான ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகை முழுமையாக நிறுத்தப்படும் வரை

பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.