Author: நிருபர் காவலன்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார் ,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள்
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்,
தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர்.
அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிடிபட்ட அந்த இளைஞரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம்
பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை பொலிஸார் சேர்த்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
கொலையில் முடிந்த குடும்பப் பகை
கொலையில் முடிந்த குடும்பப் பகை
கொலையில் முடிந்த குடும்பப் பகை மீரிகம ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டார்.
நேற்று (18) அந்தப் பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல் | கொண்டாடும் பெண்கள் ஈழப் பெண்ணே ஈழப்பெண்ணே.
பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள்
வீழ்ந்து போன பெண்களை தட்டி எழுப்பிய வீர பாடல் ,இந்த பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள் .
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே என்ற பாட்டு பெண்ணினம் கொண்டாடும் நிலைக்கு ஏற்ற பாட்டாக எழுச்சி பாடலாக வெளிவந்துள்ளது .
யாழ்ப்பாணம் பாடல்களின் வரிசையில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 63 வது பாடலாக வெளிவருகிறது .
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு அவரது முதலாவது பாடலாக உள்ளது .
பாடலின் பெயர் – ஈழப் பெண்ணே
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா இந்தியா
பாடல் வரிகள் – அகல்யா – லண்டன்
பாடலின் வரிகள்
பல்லவி
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
எழுந்து வா நீ எழுந்து வா
தடைகள் உடைக்க
படைகள் நகர்த்த
தளராமல் நீ எழுந்து வா
அடக்கவா உன்னை முடக்கவா
அகிலம் விழிக்க எழுந்து வா
அங்கையற் கன்னியாய் வெடித்து வா – நீ
அங்கையற் கன்னியாய் வெடித்து வா
( சரணம் 1 )
இழிவா உனக்கு தலை குனிவா
விடை காண நீ எழுந்து வா
துணிவு காட்டு வீரம் நாட்டு
உன்னை யார் என உலகிற்கு காட்டு
தீண்டாமை உன்னை தீண்டவா – இந்த
தீயிலே நீ பொசுங்கி போகவா
தங்கமே நீ எழுந்து வா – இந்த
தரணி ஆள எழுந்து வா
( சரணம் 2 )
தவறுகளை தட்டி கேட்க கலங்காதே
துரோகத்தை துடைத்தெறிய தயங்காதே
தேச கொடியை நாட்ட எழுந்து வா
தேச புதல்வியே துணிந்து வா
வீர மங்கைகள் பிறந்த தேசமே
வீறு கொண்டு எழுந்து வா
பூமா தேவியாய் இருந்தவளே- இனி
பூகம்பமாய் வெடித்து வா
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர் ,தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்
அந்நிலையில் நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர்.
அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார் ,தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற .
இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிப்பு

ஆம்புலன்ஸ் , விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த ஆம்புலன்ஸ் மாத்தறை பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது
மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்
விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின்
போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பீர் கேன்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம் ,வாழ்க்கையையே புரட்டிய ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்.
விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம்
விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம், அலைகள் அசைந்து கொண்டிருக்கும் அந்த சிறிய வீட்டில், நாகேந்திராவும் அகிலாவும் தங்கள் கனவுகளை
பின்தொடர்ந்தனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் நாகேந்திரா, பல ஆண்டுகளாக அகிலாவை காதலித்தான்.
உறவினர்களின் கடும் எதிர்ப்பை மீறி, அவர்கள் அக்டோபர் 28 அன்று திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு வெறும் ஆறு மாதங்களே ஆகியிருந்தது. நாகேந்திரா, தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் குடியேறி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டான்.
அகிலாவுடன் அந்த கடல் மணல் சூழ்ந்த வாழ்க்கை, அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.ஆனால், வாழ்க்கை எப்போதும் அழகான கதையாகத் தொடரவில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடி அவர்களைத் தாக்கியது. கடல் அலைவுகள் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.
வீட்டு செலவுகளை ஈடுசெய்ய, நாகேந்திரா தனது போனில் ஒரு லோன் ஆப்பை இன்ஸ்டால் செய்தான். வெறும் 2000 ரூபாய் கடன் – அது அப்போதைக்கு போதுமென்று நினைத்தான்.
வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான்
அவன் அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான். ஆனால், அந்த 2000 ரூபாய் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது.
கடன் திருப்பிச் செலுத்த சில நாட்கள் தாமதமானது. அப்போதும், கடன் நிறுவனத்தின் முகவர்கள் நாகேந்திராவைத் தொடர்ந்து அழைத்தனர்.
அவர்கள் அவனைத் திட்டி, அவமானப்படுத்தினர். உச்சக்கட்டமாக, அவர்களின் கைகளில் வந்த அகிலாவின் போட்டோக்களை – அது தம்பதியரின் தனிப்பட்ட
நினைவுகள் – அவர்கள் ஆபாசமாக எடிட் செய்தனர். அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, விஷமமான படங்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சில நாட்களுக்குப் பிறகு, நாகேந்திராவின் உறவினர்களுக்கும் அனுப்பினர். “இந்தப் பெண்ணின் விலை என்ன?” என்று அவமானகரமான செய்திகளுடன்.
அந்தப் படங்கள் நாகேந்திராவின் உறவினர்களிடம் வந்ததும், அவர்கள் அவனை அழைத்தனர்.”உன் மனைவியின் ஆபாசப் படங்கள் எங்களுக்கு வந்திருக்கு!
இதுக்கு என்ன காரணம்?” என்று கேட்டு, அவனை நச்சரித்தனர். நாகேந்திரா உடைந்து போனான். சமூக வலைதளங்களில், அந்தப் பெண்ணின் பெயராக “அகிலா” என்று போடப்பட்டது.
அகிலாவின் விலை இவ்வளவு தான்
“அகிலாவின் விலை இவ்வளவு தான்.. இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்” என்று அவரது போன் எண்ணைப் பதிவிட்டனர் லோன் ஆப் கயவர்கள்.
இதனை பார்த்த, சமூக வலைதள சமூக விரோதிகள் அகிலா வேண்டும் என தொடர்ந்து அழைத்தனர்.
“அகிலா இருக்காங்களா? எவ்வளவு விலை?” என்று சபலமான வார்த்தைகளால் அவனை புழு போல துடிக்க செய்தனர்.
ஆசையுடன் காதலித்து, திருமணம் செய்து கொண்ட மனைவியின் அந்தரங்கங்கள் பொதுவெளியில் பரவியது, நாகேந்திராவை தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
அவன் தூங்காமல், உணவு உட்காமல் துடித்தான். அந்த கொடுமைகளைச் சகிக்க முடியாமல், ஒரு இரவில் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக் கொண்டான்.
டிசம்பர் 7 அன்று, அந்த சிறிய வீட்டில் அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தூக்கில் பிணமாக தொங்கும் தன் கணவரைப் பார்த்து, அகிலா அதிர்ந்து போனாள்.
அவள் உடனடியாக மகாராணிபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்.
சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி
சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி
சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி ,வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டத்தரணி ஒருவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்ப்பு
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்கள் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் காரில் இருந்து குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிமைப்பத்திரம் பெற்ற துப்பாக்கி என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்த பின்னர், துப்பாக்கியை விடுவிக்க வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் மல்பா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.
முந்திய செய்திகள்…
‘தெம்பிலி லஹிரு’, ‘பெக்கோ சமன்’ இருவருக்கும் தடுத்துவைப்பு
‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’
ஆகியோரை டிசெம்பர் 2ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (17) அன்று பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
கும்பல்களின் தலைவர்களான ‘கெஹல்பத்தர பத்மே’ உட்பட ஐந்து பேர் இந்தோனேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை பொலிஸ் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மனம்பேரிக்கு தடுப்புக்காவல்
மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக்
கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஊடாக புதன்கிழமை (17) சரணடைந்தார்.
அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்
கைதுசெய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக தயாராக
இருப்பதாக, அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப்
பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு
சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு
சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு ,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில்
மீன்பிடி இடம்பெற்று வருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர்
கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான
சிறியமீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம்மீனினங்கள் இறந்தநிலையில் மீண்டும்
கடலில்கொட்டப்படுவதாகவும் இதனால்தற்போது சிறுமீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் புதன்கிழமை (17) அன்று வடமராட்சி வடக்கு
பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்
உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்
உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில் ,2025 ஆம் ஆண்டு உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்தது கடந்த
செப்டம்பர் (11) ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது
குறியீட்டின் படி, இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது, இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு 41 இடங்களுக்கு
விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் இந்த நாடுகள் 96வது இடத்தைப் பிடித்துக்கொண்டது.
உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு
உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய
நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 227 இடங்களுக்கு எதிராக 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.
என் குழந்தைக்கு தந்தை யார்
என் குழந்தைக்கு தந்தை யார்
என் குழந்தைக்கு தந்தை யார் ,வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்” என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர்
பிரபல சமையல் கலைஞர் மாதப்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியான பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய்
கிரிசில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “பிரபல உணவு தயாரிப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு வழங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும், என் குழந்தையையும் நீதிமன்றம் வரவழைத்து விட்டார்.
என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம். அதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர்
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
பல்வேறு காவல் நிலையங்களுக்கு திசை திருப்பிவிட்டு என்னை அழைக்கழிக்க வைக்கின்றனர்.
என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் குழந்தைக்கு தந்தை என பொறுப்பேற்க வேண்டும்” என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன் | அலறும் இஸ்ரேல்,இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன நாட்டிற்கான அங்கீகாரத்திற்கு பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஐரோப்பா என்பன அங்கீகரிக்க உள்ளன.
இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில்
தனிநாட்டு பிரகடனம் பரபரப்பாக இடம் பெறுவதால் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
இஸ்ரேலின் இன்றைய பிரதமர் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கப்படும் நிலை காணப்படுவதுடன்
இனப்படுகொலை குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகிறது .
இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.
அதனால் இப்பொழுது இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.
Palestine to become a separate state this month | Israel is screaming
Britain, Canada, France, Australia and Europe are set to recognize the recognition of a separate state of Palestine this month.
Israel’s ruling Netanyahu is in shock as the declaration of independence is making headlines.
Israel’s current Prime Minister Netanyahu is facing the possibility of being overthrown and is likely to be arrested on charges of genocide.
So now the Israeli ruling elite is screaming
HOW YOUTUBE Multi-Language Audio’s
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன்
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன்
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன் ,இந்த முடிவை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அரசு பயணத்தின் முடிவில் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இந்த வார இறுதியில் .
பிரிட்டன் ஒரு பாலஸ்தீன அரசைஅங்கீகரிக்கும் Britain will formally recognize a Palestinian state
பிரிட்டன் ஒரு பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் உள்ள துன்பங்களைத் தணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து, ஹமாஸுடனான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலப் போரில் போர்
நிறுத்தத்தை எட்டாவிட்டால், இந்த நடவடிக்கையை எடுப்போம் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஜூலை மாதம் எச்சரித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, எங்கள் அர்ப்பணிப்பு பக்கத்தைப் பார்வையிடவும்.
பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவும் இந்த மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் France, Canada and Australia will also recognize the Palestinian state this month
பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவும் இந்த மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது ஹமாஸுக்கு வெகுமதி அளிக்கும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
வியாழக்கிழமை டிரம்ப் தனது பயணத்தை முடித்தவுடன் பிரிட்டன் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று டைம்ஸ்,
அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல் கூறியது. கருத்துக்கான கோரிக்கைக்கு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஜூலை மாதம், பிரிட்டனுக்கு முன்னோடியில்லாத வகையில் இரண்டாவது அரசு பயணத்தை அனுபவித்து வரும் டிரம்ப், பிரிட்டன் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று
கூறினார், ஆனால் அதன் பின்னர் அமெரிக்கா அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் அத்தகைய நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தனது தொழிற்கட்சியைச் சேர்ந்த சிலரின் அழுத்தத்தில் இருக்கும் ஸ்டார்மர், காசாவில் நிலைமையைத் தணிக்க இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை
எடுக்காவிட்டால், அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என்று கூறியிருந்தார்.
பிராந்தியத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “இரு-அரசு தீர்வு” என்ற கொள்கையை பிரிட்டன் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது,
ஆனால் சரியான நேரம் வரும்போது மட்டுமே இது வரும் என்று முன்னர் கூறியது.
மொசாட் உளவாளிக்கு ஈரானில் தூக்கு
மொசாட் உளவாளிக்கு ஈரானில் தூக்கு
மொசாட் உளவாளிக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்க பட்டுள்ளது .Babak Shahbazi என்கின்ற நபரே இஸ்ரலின் மொசாட் உளவுத்துறைக்கு ஈரான் இராணுவ இரகசியங்களை வழங்கியுள்ளாராம் .
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை
அவ்வாறான இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ,அவருக்கு தூக்கு தண்டனை வழங்க பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
ஈரானுக்குள் இஸ்ரேல் பல முக்கியமான தாக்குதல்களை நடத்திட, இவரே முக்கியமான உளவு தகவலை வழங்கினார் என குற்றம் சுமத்த பட்டுள்ளது .
ஈரானின் அணு உலை விஞானிகள் இருவர் பலியாகிட இவரே மொஸாட் உளவுத்துறைக்கு தகவல்களை வழங்கினார் .
இராணுவ தளபதிகள் படுகொலை
மேலும் பல இராணுவ தளபதிகள் படுகொலை செய்திட இந்த கறுப்பாடே காட்டி கொடுப்பில் ஈடுபட்டதாக, ஈரான் உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பை வழங்கியது .
அவ்விதமான நிலையில் மக்கள் பார்வையிட இவருக்கு மரண தண்டனை வழங்க பட்டதாக ஈரான் செய்திகள் தெரிவித்துள்ளன .
மேற்படி சம்பவம் இஸ்ரேல் மொஸாட்டுக்கு மிக பெரும் நெருக்கடியையும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைனுக்கு ஏவுகணைகளை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா
உக்கிரைனுக்கு ஏவுகணைகளை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா
உக்கிரைனுக்கு ஏவுகணைகளை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா ,அமெரிக்கா மற்றும் உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஒப்புக் கொண்ட புதிய திட்டத்தின் கீழ் முதல் ஆயுத விநியோகங்களில் NASAMS மற்றும் பேட்ரியாட்
வான் பாதுகாப்பு அமைப்பு
வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான மிகவும் மதிப்புமிக்க ஏவுகணைகள் அடங்கும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தார்.
நேட்டோ தலைமையிலான பொறிமுறையான முன்னுரிமை பெற்ற உக்ரைன் தேவைகள் பட்டியல் மூலம் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களுக்கு உக்ரைன்
இதுவரை 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி பெற்றுள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, எங்கள் அர்ப்பணிப்பு பக்கத்தைப் பார்வையிடவும்.
அக்டோபரில் மொத்த உறுதியளிக்கப்பட்ட நிதி 3.5 பில்லியன் டாலர்களை எட்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
தலா 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதல் இரண்டு தொகுதிகளும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை “நிச்சயமாக உள்ளடக்கும்” என்று ஜெலென்ஸ்கி
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர்
கியேவில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு உக்ரைன் மேற்கத்திய நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை பெரிதும் நம்பியுள்ளது.
ரஷ்ய தாக்குதல்களுக்குப் பிறகு கியேவ் தொடர்ந்து கூடுதல் பொருட்களுக்கான அழைப்புகளை மீண்டும் தொடங்குகிறது, இதன் விளைவாக அதிக பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கை ஏற்படுகிறது.
உக்ரைனும் வெப்பமூட்டும் பருவத்திற்கு முன்னதாகவே தயாராகி வருகிறது, ஏனெனில் ரஷ்யா எரிவாயு உள்கட்டமைப்பு உட்பட சேதமடைந்த எரிசக்தி
அமைப்பின் மீது தாக்குதல்களை விரைவுபடுத்தும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
PURL வழியாக உபகரணங்களின் முதல் தொகுதிகள் ஏற்கனவே வந்து கொண்டிருந்தன என்று உக்ரைனில் உள்ள நேட்டோவின் மூத்த பிரதிநிதி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி யாகியுள்ளதக லெபனானின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .
கிழக்கு லெபனான் பல்பீக் பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதல்
கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து லெபனானின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் அப்பட்டமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேலுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்களை அழிப்போம்
அவ்விதமான தாக்குதல்கள் ஊடாக இஸ்ரேலுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்களை அழிப்போம் என இஸ்ரேலியர்கள் சபதம் பூண்டுள்ளனர் என்பதை மேற்படி தாக்குதல்கள் எடுத்து கடடுகின்றன .
யூத படைகள் நடத்தி வரும் இவ்விதமான தாக்குதல்கள் உலக சமாதானத்திற்கு மிக பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக தற்போது மாறி வருகின்றது .
இவ்வாறன நிலையில் உலகம் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளதை காணமுடிகிறது .
ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி ஐநா முன் பறந்த புலிக்கொடியால் இலங்கை ஆளும் அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டு
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டும் அறுபதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சுவிஸ் நாட்டில் இடம் பெற்று வருகிறது .
அதனை அடுத்து தமிழர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திய பொழுது ஐநா வுக்கு முன்பாக புலிக்கொடி அங்கு பறக்க விடுவதற்கு அனுமதி அளித்திருந்தது .
விடுதலை புலிகளின் தேசியக்கொடி
இதனால் தமிழீழ , விடுதலை புலிகளின் தேசியக்கொடியாக விளங்கும் புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அங்கு பட்டொளி வீசி பறந்தது.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு கூடி இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக புலிக்கொடி பறந்து அசைந்து ஆடியது .
வளமையாக சுவிஸ் அரசாங்கம் புலிக்கொடி பிடிப்பதற்கு தடை விதித்து வந்தது .
ஆனால் இந்த முறை அறுபதாவது மனித உரிமை கூட்டத்தொடரில் தேசியக் கொடியான புலிக் கொடி பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையம் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது .
இவ்வாறான நிலையில் இம்முறை புலிக்கொடியுடன் மனித உரிமை பேரவைக்கு முன்பாக இலங்கை இடம் பெற்றது இனப்படுகொலை என தமிழர்கள் முழங்கிய செயல், இலங்கை அரசாங்கத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ஆயுதங்கள் இன்றி தள்ளாடும் இஸ்ரேல்
ஆயுதங்கள் இன்றி தள்ளாடும் இஸ்ரேல்
ஆயுதங்கள் இன்றி தள்ளாடும் இஸ்ரேல் தற்பொழுது பெரும் நெருக்கடி நிலையில் உள்ளது . இதனால் புதிதாக ஆயுத உற்பத்தியை தமது நாட்டுக்குள்ளே தயாரிக்கும் படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வேண்டுதல் விடுத்துள்ளார்.
தரை வழி ஊடாக காசாவுக்குள் யூத இராணுவம்
தரை வழி ஊடாக காசாவுக்குள் யூத இராணுவம் உள் நுழைந்துள்ளது .இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகள் கண்டும் கண்டனத்தை தெரிவித்துள்ளன .
ரசியாவுக்கு அமெரிக்காவின் விமான ரகசியங்களை வழங்க முன் வந்த உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த உளவாளியிடம் அமெரிக்காவின் முக்கிய ஆவணங்கள் எவ்வாறு சென்றன என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன
இன்றைய விசேட உலக தலைப்புச் செய்திகள்.
Israel is currently reeling from a lack of weapons, and Israeli Prime Minister Netanyahu has called for new weapons production within his country.
The Jewish army has entered Gaza by land. The world has condemned this military operation.
A spy who came forward to provide US flight secrets to Russia has been arrested.
Investigations are underway into how important US documents reached this spy.
Today’s special world headlines.
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா
இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா என ஐக்கிய நாடுகள் விசாரணை மைய பாலஸ்தீனம் மக்களிற்கு ஆதரவாக தீர்ப்பாயம் தீர்ப்பை அறிவித்துள்ளது .
இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை
இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இனப்படுகொலையால் இன்று பாலஸ்தீனம் தனி நாடாக மலரும் நிலைக்கு தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
142 நாடுகள் பாலஸ்தீனம் தனி நாடக மலர ஆதரவு அளித்துள்ளது .
விரைவில் பலஸ்தீன் தனிநாட்டு பிரகடனமாக அறிவிக்கப்படலாம்
அதனை அடுத்த மிக விரைவில் பலஸ்தீன் தனிநாட்டு பிரகடனமாக அறிவிக்கப்படலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது .
இன்றைய எதிரி நியூஸ் யூடியூபில் வன்னி மைந்தன் மதிய செய்தி ஆய்வு களத்தின் அரசியல் உலகப் பார்வை செய்திகள்
The United Nations Tribunal has declared that Israel’s actions against Palestine are genocide.
Palestine has now changed its status to a separate state due to the genocide carried out by Israel’s military operation.
142 countries have supported the Palestinian statehood. It is expected that Palestine will be declared a separate state very soon.
Today’sEthiri News YouTube Vanni Mainthan’s afternoon news research field political world view news
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண்
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண்
நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண் ,பெங்களூரை சேர்ந்த இளைஞர் டேட்டிங் செயலியில் பழக்கமான பெண்ணிடம் செல்போன் எண்ணை பகிர்ந்தார்.
இருவரும் வாட்ஸ்அப்பில் பேசி நெருக்கமாகினர். உடலுறவு பற்றி இருவரும் மெசேஜில் பேசி கொண்டனர். அதன்பிறகு அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
மேலும் இளைஞரையும் ஆடைகளை அவிழ்க்க கட்டளையிட்டார்.
ஆசையை அடக்க முடியாமல் இளைஞரும் வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் இப்போது அவர் சிக்கலில் சிக்கி உள்ளார்.
பெங்களூர் ஆடுகோடி அருகே வசித்து வருபவர் 25 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அவர் டேட்டிங் செயலியை தனது செல்போனில் டவுன்லோட் செய்தார்.
அந்த டேட்டிங் செயலியின் பெயர் Happn. இந்த செயலியின் வழியாக அவருக்கும் அனன்யா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செயலி வழியாக தினமும் உரையாடி வந்தனர்.
செல்போன் எண்கள் மாற்றம்
இருவருக்கும் இடையே நட்பு உருவானது. அதன்பிறகு அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர்.
இதனால் நினைத்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் மெசேஜை பரிமாறி வந்தனர். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. நட்பு, நலம் விசாரிப்பு என்று உரையாடி இருவரும் அடுத்தக்கட்டத்துக்கு சென்றனர்.
நிர்வாண வீடியோ கால்
இருவரும் தங்களின் காதல் மற்றும் உடலுறவு குறித்த விஷயங்களை மெசேஜில் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் இடையேயான உரையாடல் ஆபாசமாக நடந்து வந்தது.
கடந்த 4ம் தேதி அந்த பெண் வாட்ஸ்அப்பில் இளைஞருக்கு வீடியோ கால் செய்தார். அப்போது அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார்.
ஆடைகளை அவிழ்த்த இளைஞர்
மேலும் இளைஞரின் ஆடைகளையும் கழற்றும்படி அந்த பெண் பணித்தார்.இதனால் இளைஞரும் ஆசையில் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ கால்
பேசினார். சிறிது நேரத்துக்கு பிறகு உரையாடல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தான் அந்த இளைஞருக்கு சிக்கல் ஏற்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
அதாவது வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய அந்த பெண், இளைஞருக்கு போன் செய்து, ‛‛நிர்வாணமாக இருக்கும் வீடியோ உள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளேன். இதை செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் தர வேண்டும்” னெ்று கூறினார்.
அதாவது இளைஞர் ஆடைகளை களைந்து அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசினார்.
அப்போது, அந்த பெண் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து மிரட்டியது தெரிந்தது. அப்போது தான் இளைஞர் அதிர்ந்து போனார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியே வந்தால் தன் மானம் போய்விடும் என்று இளைஞர் பயந்தார்.
பறிபோன ரூ.70,000
இதனால் ரூ.30 ஆயிரம் தருகிறேன். அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி பெண்ணிடம் கூறினார். அதற்கு அவரும் ‛ஓகே’ என்று கூறினார்.
இதையடுத்து இளைஞர் ரூ.30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பினார்.
அந்த பணத்தை பெற்று கொண்ட அந்த பெண், இதுதான் சமயம் என்று அந்த இளைஞரை மிரட்டி கூடுதல் பணம் கேட்டார். மேற்கொண்டு ரூ.40 ஆயிரம் வரை பறித்தார்.
மொத்தம் ரூ.70 ஆயிரத்தை அந்த இளைஞர் பறிகொடுத்தார். அதன்பிறகும் அந்த பெண் விடவில்லை.
தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் வேறு வழியின்றி அந்த இளைஞர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் கூறியபடி 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல் ,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை செவ்வாய்க்கிழமை (16) சந்தித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல்
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல்
தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள்
இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற
உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தி
செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை கார்ல்டன்
இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.”











































