Author: நிருபர் காவலன்
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள்
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள்
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் அனைத்து உடல்களும் திரும்பும் வரை போர் நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கோருகின்றன.
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்களை
காசாவில் உள்ள இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய குழுவான பணயக்கைதிகள் மற்றும்
காணாமல் போன குடும்பங்கள் மன்றம், அனைத்து கைதிகளின் உடல்களும் திரும்பும் வரை போர் நிறுத்தத்தின் புதிய
கட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலிய அரசாங்கத்தையும் போர் நிறுத்த மத்தியஸ்தர்களையும் வலியுறுத்தியுள்ளது, ஹமாஸ் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை “நன்றாக அறிவார்கள்” என்று கூறுகிறது.
ஒரு அறிக்கையில், இறந்த இறுதி 13 கைதிகளின் திரும்புதலை உறுதிசெய்ய அரசாங்கத்தையும் மத்தியஸ்தர்களையும் “தங்கள் வசம் உள்ள ஒவ்வொரு
நெம்புகோலையும் உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவக் கோட்டின் பின்னால்
ஹமாஸ், அதன் பங்கிற்கு, இஸ்ரேலிய கைதிகளின் மீதமுள்ள 13 உடல்களைத் தேடுவதை விரிவுபடுத்துவதாகவும், இஸ்ரேலிய இராணுவக் கோட்டின்
பின்னால் தேட செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எகிப்திய நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் ,கடந்த 48 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்: சுகாதார அமைச்சகம்
யுத்த நிறுத்தம் இருந்தபோதிலும்
யுத்த நிறுத்தம் இருந்தபோதிலும், கடந்த 48 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள்
கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போரில்
அக்டோபர் 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் இப்போது குறைந்தது 68,527 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 170,395 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படை அட்டூழியம்
இஸ்ரேலியப் படை அட்டூழியம்
இஸ்ரேலியப் படை அட்டூழியம் ,ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய ஆலிவ் விவசாயிகள் நிலங்களை அடைவதை இஸ்ரேலியப் படைகள் தடுக்கின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அதிகமான பாலஸ்தீனிய விவசாயிகள் அறுவடைக்காக தங்கள் ஆலிவ்
தோப்புகளை அடைவதை இஸ்ரேலியப் படைகள் தடுத்துள்ளதாக வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.
ரமல்லாவின் வடக்கே உள்ள சிஞ்சில் நகரத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்ததாகவும், இதனால்
விவசாயிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலிவ் அறுவடை காலத்தில் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீதான ஆக்கிரமிப்பு சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளது. துன்புறுத்தல்
இஸ்ரேலிய குடியேறிகள்
மற்றும் தாக்குதல்களுக்குப் பின்னால் இஸ்ரேலிய குடியேறிகள் இருவரும் உள்ளனர்.
கடந்த வாரம், குடியேறிகளின் வன்முறையைக் கண்காணிக்கும் பாலஸ்தீனிய அதிகாரசபையின் ஆதரவுடன் கூடிய கண்காணிப்பாளரான சுவர் மற்றும் தீர்வு
எதிர்ப்புக் குழு, இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய அறுவடை காலத்தில் பாலஸ்தீனிய ஆலிவ் விவசாயிகள் மீது 150 க்கும் மேற்பட்ட
தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியது. பதினேழு தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்டன.
குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்
குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்
குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம் ,கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் விமான
இலங்கைக்கான விமான பயணங்கள்
சேவையின் இலங்கைக்கான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பமானதுடன் அதன் ஆரம்ப பயணமாக, மங்கள விமானம்
திங்கட்கிழமை (27) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
முதல் மங்கள பயணத்திற்காக ஏ- 320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து திங்கட்கிழமை (27) அதிகாலை கட்டுநாயக்க விமான
நிலையத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த விமானம் இதன்போது நீர் பாய்ச்சு வரவேற்கப்பட்டது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து
இந்த விமானத்தை வரவேற்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜயரத்ன, இலங்கைக்கான
குவைத் பதில் தூதர் அல் முஹானா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குவைத் விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை,
வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் வழக்கறிஞர் கொலை
பெண் வழக்கறிஞர் கொலை
பெண் வழக்கறிஞர் கொலை ,2024 ஆம் ஆண்டு மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் 36 வயதுடைய பெண் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு
சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்
வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) பிணை வழங்கியது.
வழக்கு விசாரணை மற்றும் பிரதிவாதிகள் இருவரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார, சந்தேகநபர் ஜெயநாத்
கடுமையான பிணை நிபந்தனை
தீரசிங்கவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு பயணத் தடையையும் விதித்த நீதிமன்றம், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது.
வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினார் காயா
வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினார் காயா
வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினார் காயா ,ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர்
வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் காயா
நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் காயா தலுவத்த திங்கட்கிழமை (27) காலை நாடு திரும்பினார்.
பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கொல்வ் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவுபெற்றது.
தனிநபர் கோல்வ் போட்டி
இரண்டு சுற்றுகளைக் கொண்ட பெண்களுக்கான தனிநபர் கோல்வ் போட்டியை 133 நகர்வுகளில் நிறைவு செய்த காயா தலுவத்த 3ஆம் இடத்தைப்
பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியில் சீன வீராங்கனைகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
சிறையில் இருந்து இருவர் தப்பியோட்டம்
சிறையில் இருந்து இருவர் தப்பியோட்டம்
சிறையில் இருந்து இருவர் தப்பியோட்டம் ,பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள்
சிறைச்சாலை அதிகாரி
சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்கள் கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்த ஒருவர்.
சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை
சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருமகனை சுட்டு கொன்ற மாமா
மருமகனை சுட்டு கொன்ற மாமா
மருமகனை சுட்டு கொன்ற மாமா அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்
அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை
திங்கட்கிழமை (27) அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஹலகம , கலென்பிந்துனுவேவ, பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய கரியப்பெரும முதியான்சேலாகே மஹிந்த
நவரத்ண பண்டார என்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய போது தனது மனைவியையும் அவரது தந்தையையும் தாக்கியதற்காக 2024.11.22 அன்று
பணியில் இருந்து இடைநீக்கம்
பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தனது மனைவியிடம் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியின் தந்தையின் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு
மனைவியை கோடாரியால் தாக்க முயன்ற போது மனைவியின் தந்தை குறித்த நபர் மீது வீட்டில் இருந்த ரைபிள் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் கலென்பிந்துனுவெவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் ,உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில்
யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது.
இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது.
ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும்
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும்
1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும்
அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது.
லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை,
பெரு, தென் அமெரிக்கா
யாழ்ப்பாணம், இலங்கை
மெயின், அமெரிக்கா
காடிஸ், ஸ்பெயின்
ரீயூனியன், ஆப்பிரிக்கா
போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா
கார்டஜீனா, கொலம்பியா
பின்லாந்து, ஐரோப்பா
டிப்பரரி, அயர்லாந்து
மெக்சிகோ நகரம்
கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
சார்டினியா, இத்தாலி
லிபர்டேட், சாவ் பாவ்லோ
யூட்ரெக்ட், நெதர்லாந்து
பார்படாஸ், கரீபியன்
ஜெஜு-டோ, தென் கொரியா
வடக்குத் தீவு, நியூசிலாந்து
தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா
குய் நோன், வியட்நாம்
சீம் ரீப், கம்போடியா
பூக்கெட், தாய்லாந்து
இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா
துனிசியா, ஆப்பிரிக்கா
சாலமன் தீவுகள், ஓசியானியா
பயனாளிகள் தெரிவுக்கு உலக வங்கியின் ஆலோசனை
பயனாளிகள் தெரிவுக்கு உலக வங்கியின் ஆலோசனை
பயனாளிகள் தெரிவுக்கு உலக வங்கியின் ஆலோசனை ,அஸ்வெசும” சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது
புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார
அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற
உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப்
பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர்
பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும்
பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது.
இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
“அஸ்வெசும” சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த “அஸ்வெசும” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள்
ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க
மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195 ,எங்க அண்ணன் சீமான்
எம்மை காக்க வந்த பெருமான்
நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்
நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்
நாம் தமிழரை வெல்ல வைப்போம்
என நாம் தமிழர் கட்சிக்காக இந்த பாடலை வாணன் பிரான்ஸ் நாட்டில் இருந்து எழுதியுள்ளார் 195
பாடல் பெயர் எங்க அண்ணன் சீமான்
பாடல் ஆசிரியர் வாணன் பிரான்ஸ்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name Enga annan seeman
Lyricist Vaanan france
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Our brother Seeman | Naam Tamil Party song | Seeman song | Vanan
Our brother Seeman
May the Lord who came to protect us
Let us all unite as Tamils
Let us make Tamils win
This song has been written by Vanan from France for Naam Tamil Party
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

இஸ்ரேலிய படைகள் சோதனை
இஸ்ரேலிய படைகள் சோதனை
இஸ்ரேலிய படைகள் சோதனை ,இஸ்ரேலிய படைகள் சமீபத்திய மேற்குக் கரை சோதனைகளில் ஐந்து பேரை கைது செய்துள்ளன:
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
அறிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் அதிகாலையில் அதிக சோதனைகளை மேற்கொண்டுள்ளன.
ஹெப்ரானில் ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது
ஊடுருவல்களின் போது, அவர்கள் ஹெப்ரானில் ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர், மேலும் ஜெருசலேமுக்கு
அருகிலுள்ள அல்-ராமில் ஒரு பாலஸ்தீனரை சுட்டுக் காயப்படுத்தினர் என்று வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் நப்லஸில் பல வீடுகளில் சோதனை நடத்தியும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று வஃபா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில்
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில்
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில் ,இஸ்ரேலிய கைதிகளின் உடல்களை மீட்க காசாவில் புதிய கனரக இயந்திரங்கள்
காசாவின் அல்-சுவைதாவிலிருந்து அறிக்கை
நேற்று சில கனரக இயந்திரங்கள்
நேற்று சில கனரக இயந்திரங்கள் காசாவிற்குள் நுழைந்தன, ஆனால் நாங்கள் ஆறு லாரிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்.
போரின் முதல் நாளிலிருந்து காசாவின் சிவில் பாதுகாப்பு குழுக்கள் [மீட்பு முயற்சிகளுக்கு உதவ] இந்த கனரக இயந்திரத்தை கேட்டு வருகின்றன.
குறைந்தது 9,000 பாலஸ்தீனியர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
புதிய கனரக இயந்திரங்கள் இஸ்ரேலிய கைதிகளின் உடல்களை மீட்டெடுக்க உதவும்.
இஸ்ரேலிய கைதிகள்
இஸ்ரேலிய கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்பும் வரை போர்நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று பாலஸ்தீனியர்கள் கூறுகிறார்கள். இதுதான் முக்கிய கவனம் என்பதை அவர்கள் அறிவார்கள்,
இது நடக்காமல், ரஃபா கடவை திறக்கப்படாது, நோயாளிகள் காசா பகுதியை விட்டு வெளியேற மாட்டார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் இந்த செயல்முறை வேகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள்
இந்த போர்நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தைக் காண விரும்புகிறார்கள். அவர்கள் மறுகட்டமைப்பை விரும்புகிறார்கள்,
அவர்கள் இயக்க சுதந்திரத்தை விரும்புகிறார்கள், மேலும் போர்நிறுத்தம் அதைச் செய்யப் போகிறது என்பதைக் காணவும் உணரவும் விரும்புகிறார்கள்.
இஸ்ரேலிய பாலஸ்தீனிய ஆலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தினர்
இஸ்ரேலிய பாலஸ்தீனிய ஆலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தினர்
இஸ்ரேலிய பாலஸ்தீனிய ஆலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தினர் ,இஸ்ரேலிய குடியேறிகள் டஜன் கணக்கான பாலஸ்தீனிய ஆலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தினர்.
அறிக்கை
பெத்லகேமுக்கு அருகிலுள்ள மின்யா என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் இஸ்ரேலிய குடியேறிகள் குழு டஜன் கணக்கான ஆலிவ் மரங்களை வெட்டி
வீழ்த்தியுள்ளது – இது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட தினசரி குடியேறிகள் நடத்தும் தாக்குதல்களின் சமீபத்திய தொடராகும் என்று வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலிவ் அறுவடை காலம்
இந்த ஆண்டு ஆலிவ் அறுவடை காலம் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலிய குடியேறிகள் பாலஸ்தீனிய ஆலிவ் விவசாயிகள் மீது குறைந்தது 141
தாக்குதல்களை நடத்தியுள்ளனர், இதில் விவசாயிகள் மீதான நேரடி தாக்குதல்களின் 22 வழக்குகள் அடங்கும் என்று ரமல்லாவை தளமாகக் கொண்ட காலனித்துவம் மற்றும் சுவர் எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி ,ரபா கடவை மூடப்பட்டதால் சிகிச்சைக்காக வெளியேற முடியாத புற்றுநோய் நோயாளி
நுசீராத் அகதிகள் முகாமில் உள்ள மார்பகப் புற்றுநோய் நோயாளியான ரஷா
போர் நிறுத்தம்
அபு ஸ்பீக்கா, சிகிச்சைக்காக காசாவை விட்டு வெளியேறக் காத்திருந்தார், ஆனால் காசா பகுதியின் வெளி
உலகத்துடனான முக்கிய இணைப்பான ரஃபா கடவை, போர் நிறுத்தம் இருந்தபோதிலும் மூடப்பட்டுள்ளது.
அபு ஸ்பீக்கா தனக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பதாகவும், காசாவில் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.
நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்
“கடவுளின் கிருபையால் நான் நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்.
இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் என்னை மோசமாக பாதித்தன,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் தனது நிலையை மோசமாக்கியதாக உணர்கிறேன் என்று அவர் கூறினார்.
“நான் இரண்டு முறை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கப்பட்டேன். நான் அடிக்கடி சுவாசிக்க சிரமப்படுகிறேன்,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
“நான் என் மரணப் படுக்கையில் இருப்பதாக நினைத்ததால் ஒவ்வொரு நாளும் என் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிடுவேன்.”
இலஞ்சம் பெற்ற அதிகாரி
இலஞ்சம் பெற்ற அதிகாரி
இலஞ்சம் பெற்ற அதிகாரி ,தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்
மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்
தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர
பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.
தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்கு சொந்தமான ரூபா 8
இரண்டு சொகுசு பேருந்து
கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.
இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் ரூபா மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை
இயக்குங்கள்” என முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.
இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளை
குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்ட போதிலும், அதன் சாரதி பொலிஸ் அதிகாரிகளை மோதி
ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு
இதனையடுத்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் சக்கரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த 24 ஆம் திகதி இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டினால் உழவு இயந்திரத்தின் சக்கரம் சேதமடைந்துள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தை செலுத்திய 18 வயதுடைய இளைஞனும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம் ,இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து சேவையானது
குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள்,
வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும்
டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதனால் கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு ,ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில்
குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் இருந்து மொரட்டுவ, கட்டுபெத்த ஊடாக சென்று கொண்டிருந்த போது, மேல்
மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த வாகனம் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளது, இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, ரத்மலானை, பெலெக்கடை சந்திப் பகுதியில் வைத்து வாகனத்தின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரம் ஒன்றிற்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது
அப்போதும் வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேனின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் கீழே விழுந்ததில் வாய் அருகே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1990 நோயாளர் காவு வண்டி சேவை மூலம் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து வாடகை வாகன சாரதி என்பது தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் பிலியந்தலையில் இருந்து ரத்மலானை ரயில் நிலையம் வரை பயணிக்கும் போது, வீதியில் பயணித்த பல வாகனங்களையும்
விபத்துக்குள்ளாக்கி வந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வாகனத்தை பொலிஸார் துரத்தி செல்லும் வீடியோ தற்போது வௌியாகியுள்ள நிலையில், அதனை கீழ பார்வையிடலாம்,
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து ,இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக
அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம்
தெற்காசியாவின் AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக AI பயன்படுத்துவோர்
கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன.
எனினும், தெற்காசிய நாடுகளில் AI மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில்
உள்ளது என்றும், திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட வேகமாக விரிவடைந்து வருகிறது, மேலும் 2025
ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன.
இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு
இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், AI பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7% அதிக ஆபத்தில் உள்ளதாகவும், அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்பு நோக்குபவர்கள், கணினி
மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ChatGPT பயன்பாடு குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்காசியாவில் இரண்டாவது அதிக தனிநபர்
ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இலங்கை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதுடன், இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அத்துடன், இந்த AI பயன்பாட்டினால் அதிகப் பலன்களைப் பெறக்கூடிய கொள்கை ரீதியான வாய்ப்புகள் குறித்தும் உலக வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது AI கண்டுபிடிப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில்
முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.












































