பொருளாதார நெருக்கடியில் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை ,இலங்கைக்கு ஐஎம்எப் கடன் திட்டம் மீளாய்வு .
இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக IMF கடன் திட்டம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது .
IMF வழங்கிய மிக முக்கியமான கொள்கை திட்டங்களை ஏற்றுக் கொண்ட இலங்கை அதன் அடிப்படையில் கடனை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது .
கொரோனா காலப்பகுதியில்
கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பலமாக பாதிக்கப்பட்டிருந்தது .
அந்த பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்டு இலங்கையில் பணம் இழப்பை தடுத்து அந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல வேலை திட்டங்களை காண்பித்திருந்தது .
அதற்கு அமைவாக புதிய கடன் மீளாய்வு மற்றும் பணவீக்கத்தை தடுத்து நாட்டிலே எவ்வாறு கட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற மிக முக்கியமான கோரிக்கைகளையும் அதை விடுத்து இருந்தது .
அதில் வரி உயர்வு மற்றும் தற்சார்பு பொருளாதார உற்பத்தியின் ஊடாக நாட்டை வலுவாக எவ்வாறு கட்டி இழுப்பது என்பது தொடர்பான பல்வேறுப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன .
இலங்கை அரசாங்கம்
அதனை அடுத்து தற்பொழுது அதனை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறை படுத்துவதற்கு தயார் என அறிவித்திருந்தது .
அதனை அடுத்து தற்போது மீளவும் நான்காம் கட்டமாக கடனை வழங்குவதற்கான மீள் ஆய்வு திட்டங்கள் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த கலந்துரையாடல் அடுத்த கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது .
இந்த நிதியினை நான்கு ஆண்டுகளுக்குள் பின்னர் இலங்கை அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி







