தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல் சம்பவம் ஒன்று தற்பொழுது கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 8 வயது மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அவரை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அவரது காருக்குள் ஏறிய மர்ம ஆசாமி காரை வேகமாக ஓட்டி செல்லுமாறு வற்புறுத்தி மிரட்டினார்.
பின் இருக்கையில் இருந்த மகளோ தனக்கு உதவும் படி கூச்சலிட்டுள்ளார் .
இவ்வாறு பதட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிற பகுதியில் , வேறு வழியின்றி துணிகரமாக யோசித்த பெண், திடீரென ஜன்னலைத் திறந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து தாய் மகளை காரில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.
கடந்த இரண்டாம் தேதி இந்த சம்பவம் .பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக கறுவா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த விசாரணையில் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் பாடசாலை அருகில் தனது மகளை பாடசாலையில் அனுமதித்து விட்டு. அவரை வீடுக்கு ஏற்றி செல்ல முற்பட்ட பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அனுரா ஆட்சியில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான கடத்தல் ,கொள்ளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,வீதிகள் சடலங்கள் மீட்பது என்பது தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகங்கள் இடம் பெற்று வருகின்றன.
பாதாள உலக குழுவை திட்டமிட்டு இறக்கி ,மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளுகின்ற அனுரா ஆட்சியின் ,ஜேவிபியின் நிழல் பிரிவுகள் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தி நிற்கின்றன.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61









