இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு

உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு

உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு

கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி


செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் ,கப்பல்கள் இரண்டும் சேதம் என அறிவிப்பு .


இஸ்ரேல் இராணுவ அதிகாரி அதிகாரி பலி ,பலர் காயம்

வீடியோ

பிரதமருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிரதமருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

பிரதமருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியான ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது

விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

இதில், திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

இன்று (21) காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்


ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள் ,
கடல் தரையில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக தெரிவிப்பு

வீடியோ

அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்

15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி வெளியாகியது .

அந்த காட்சிகள் உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட

குற்ற கொலை தடயம் அழிப்பு

நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம்

பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவனின் மர்ம மரணம் 4 சந்தேக நபர்கள் கைது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30, 26, 22, 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்

கொலை குற்ற தடயங்கள் மீட்க நடவடிக்கை

அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை

பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும்

பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்


அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள் ,
செய்வதறியாது திணறும் அமெரிக்கா இராணுவம் ,
ரணகளமான செங்கடல் ,

வீடியோ

இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் இராணுவத்தின் அதி உச்ச தாக்குதல் போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .


எமன் படைகள் தாக்குதலில் கப்பல் மூழ்கியது ,வெளியான காணொளி ஆதாரம் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,பதட்டம் ,

வீடியோ

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது


பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம்
பாலஸ்தீனம் தனி நாடாகிறது ,ஓடிய கண்ணீருக்கு வசந்தம் கிடைக்கிறது .


மகிழ்ச்சியில் மனம் துள்ளி குதிக்கிறது .

வீடியோ

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகை
Posted in இலங்கை செய்திகள்

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகை

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகை

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இளைஞன் ஒருவரால் தனது நண்பருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால் குறித்த நண்பர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

அதனை அடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமான உறுதிமொழியின் பேரில் அவர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார், கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோத விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதில், வெளிநாட்டு தம்பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிய தம்பதி (76-78) மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டுக் கணவனும் மனைவியும் நேற்று இரவு 09 மணியளவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என்று கூறிய NPP தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எந்த வகையிலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட நினைத்தால் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே, அவர் வீட்டிற்குச் செல்ல நேரிடும் என இன்று தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற புதிய விவாதம் எழுந்துள்ளதாகவும், அது காலங்காலமான கோஷம் எனவும் தெரிவித்தார்.

ரணில் தந்திரமானவர் என்று சிலர் சொல்கிறார்கள்.அவர் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தில் ஜனாதிபதியானார். ஜனாதிபதி தேர்தலிலும் தப்பிக்க ஏதாவது செய்வார். ரணில் கூறுவது போல் தந்திரமானவர் அல்ல. அதற்கு முன்னரே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தப்பிக்க முயன்றால், ஜனாதிபதியாக பதவியேற்கும் கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்ததால் தான் ரணில் ஜனாதிபதியாக முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க

இல்லையெனில் ரணில் இப்போது வெறும் எம்.பி.யாக இருப்பார். பின்னர் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக பதவியேற்றார்.பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்கள் தேவை, மூன்று நாட்கள் தாமதிக்க கோட்டாபய இல்லை.மூன்றாவது தெரிவாக ரணிலிடம் கோரிக்கை விடுத்தார்.தனக்கு நஷ்டம் ஏதும் இல்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டார் என திசாநாயக்க கூறினார்.

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் மாவீரர் அல்ல எனவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட ரணிலை சிறைபிடிப்பதாக வாக்குறுதியளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியானதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் பெண்கள் தீர்க்கமான காரணியாக இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், இலங்கையில் 56 சதவீத வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர் என்றார்.

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.

இதன்பிரதான நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்


ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்

ஹவுதி இராணுவம் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் சரக்கு ,கப்பல் .


ஒரு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது பிரிட்டன் கப்பல் மீதான தாக்குதல் ,
திணறும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

வீடியோ

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது


ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது ,
தாக்குதல் முறியடிப்பு என ஈரான் அறிவிப்பு .


பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் இடம்பெற்ற திடீர் மாற்றம்

வீடியோ