மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி ,மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜூலை 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி உட்பட

அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை – மாலைதீவு பரஸ்பர ஒத்துழைப்பை

மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு

மேலும், இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்யும் வர்த்தக மன்றத்தை சந்தித்து,

உரையாற்றவும் மற்றும் மாலைதீவில் வாழும் இலங்கையர்களைச் சந்திப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பொரளை பகுதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பொரளை பகுதியில் விபத்து

பொரளை பகுதியில் விபத்து

பொரளை பகுதியில் விபத்து ,பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு

NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு

NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு ,வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு

துப்பாக்கிச் சூடு

வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின்

வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்

ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்

ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் ,கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ” நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் ஒரே மேடையில் முக்கியதிருடர்கள் ஒன்று கூடினர் .

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்

தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக

தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில்,

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு

மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்

மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் யாவரும் ஒன்று கூடி இருந்தமை குறிப்பிட தக்கது .

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்
Posted in செல்வன் பாடல்கள் பாடல்கள்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல் ,தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா பிரான்ஸ் செல்வன் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |வெளியீடு -எதிரி இணையம்

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது .14 வது பாடலாசிரியராக செல்வன் அறிமுகம் ஆகிறார் .

வாழ்த்துக்கள் அண்ணா ,tholankukku tholanaai iruppendaa selvan new songa vanni mainthan

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல்

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கத்தில் 14வது ஆசிரியராக வன்னி மைந்தன் டிக் டாக்

தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் செல்வம் அவர்கள் எழுதிய பாடல் இப்பொழுது வெளியாகியுள்ளது .

பர பரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த பாடல் மிகச்சிறந்த இசையமைப்புடன் சிறந்த ஆளுமை உள்ள வரிகளுடன் வெளியாகியுள்ளது .

கடந்த தினம் இந்தப் பாடல் வரிகள் தளத்தில் வெளியிடப்பட்டு அனைத்து சமூகவளர் தலங்களிலும் பதிவேற்றும் செய்யப்பட்டது.

பலமுறை மக்கள் விரும்பி கேட்கப்பட்ட ஒரு பாடலாக இது காண படுகிறது.

உலகப் பரப்பெங்கும் பரந்து விரிந்து சிதறி கிடக்கிற ஆளுமைகளை தேடி கண்டுபிடித்து ,அவர்களை பாடல் ஆசிரியராக உருமாற்றும் பணியில் வன்னி மைந்தன் தளம் ஈடுபட்டுள்ளது.

பாசறை பாணர் தேனிசை செல்லப்பா

இதற்கு துணையாக பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பா அவரது மகன் பாவேந்தன் ஆகியோர் சிறந்த முறையில் அதனை தயாரித்து வழங்கி வருகிறார்கள்.

மதுர குரலோன் பாவேந்தன் குரலிலும் ,சிறந்த இசைஞானியாக விளங்கும் இளங்கோ செல்லப்பாவின் இசையிலும், இந்த பாடல்கள் உயிர் ஊட்டி மெருகூட்டப்பட்டு தயாரிக்க பட்டு வருகின்றன.

இவர்களுடன் ஒன்றிணைத்து இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டு இருக்கிற வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மேலும் வளர வேண்டுமென மக்கள் தெரிவிக்கிறார்கள்.

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது பாடல் இதோ கீழே காணொளியில் நன்றி அனைவருக்கும்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி

அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி

அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி ,அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்

அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து

அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்.

மிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரில் உள்ள வால்-மார்ட் கடையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது

பதினொரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள்

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். “டிராவர்ஸ் நகரில் உள்ள வால்-மார்ட்டில் நடந்த பல

கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து கிராண்ட் டிராவர்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.

சந்தேக நபர் காவலில் உள்ளார், தற்போது விவரங்கள் குறைவாகவே உள்ளன,” என்று உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் X இல் தெரிவித்தன.

சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில்
Posted in உலக செய்திகள்

15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில்

15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில்

15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில் ,நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில் ஆயுதமேந்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்

நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில்

நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்களில் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர்.

கால்நடை வளர்ப்பு

சமீபத்திய மாதங்களில் பிளேட்டோ மாநிலத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பழங்குடியினருக்கு இடையே பதட்டங்களும் ஆயுத மோதல்களும் அதிகரித்துள்ளன.

ஜூலை 16 அன்று நடந்த மற்றொரு ஆயுதமேந்திய தாக்குதலில், 27 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி
Posted in உலக செய்திகள்

துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி

துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி

துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி ,துருக்கியின் பர்சாவிற்கு காட்டுத்தீ வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கானோர் வெளியேறினர்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாட்டின் நான்காவது பெரிய நகரமான பர்சாவை பல வாரங்களாக சூழ்ந்து வரும்

காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழி

காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழிவகுத்தது.

வடமேற்கு துருக்கியில் பர்சாவைச் சுற்றியுள்ள காடுகள் நிறைந்த மலைகளில் இரவு நேர தீ வேகமாகப் பரவி, நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் இரவு

வானத்தில் சிவப்பு ஒளியைக் கொண்டு வந்ததாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பர்சா ஆளுநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால், வடகிழக்கில் உள்ள கிராமங்களில் இருந்து 1,765 பேர் பாதுகாப்பாக

சுற்றியுள்ள காடுகள் எரிந்தன

வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சுற்றியுள்ள காடுகள் எரிந்ததால் பர்சாவை தலைநகர் அங்காராவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

ஜூன் மாத இறுதியில் இருந்து துருக்கியில் தினமும் டஜன் கணக்கான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் சனிக்கிழமை

76 தனித்தனி தீப்பிழம்புகளை எதிர்கொண்டதாக வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யமுக்லி தெரிவித்தார்.

பருவகாலமற்ற அதிக வெப்பநிலை, வறண்ட நிலைமைகள் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் தீ பரவுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு சிர்னாக் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையான 50.5C (122.9F) பதிவாகியுள்ளதாக வானிலை

ஆய்வு பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 132 இடங்களில் பதிவாகியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி

ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி

ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ,திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட திடீர்

கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் கையை பிடித்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணின் கையை பிடித்தவர் கைது

பெண்ணின் கையை பிடித்தவர் கைது

பெண்ணின் கையை பிடித்தவர் கைது ,காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது

திருமணச் சேவை

செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து

அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள

நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.

திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல்

தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த ஆசாமி

பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து,

அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்

நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது

போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது

போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது ,உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சட்டத்தின் முன் நிறுத்தியது “அத தெரண உகுஸ்ஸா”.

மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து

பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் அப்பாவி மக்கள்

ஆனால், நம் நாட்டில் அப்பாவி மக்கள் இன்னும் இந்த மோசடியால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது சோகமான விடயம்.

இதேபோன்று பொரளை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நிறுவனம் தொடர்பில் ஆராய,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனைப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் அந்த இடத்திற்குச் சென்றது.

நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற ஏற்கனவே ஒரு குழு அங்கு இருந்ததுடன், அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருப்பதை நாங்கள் அவதானித்தோம்.

இருப்பினும், நாங்கள் சந்தேகித்தபடி, நிறுவனத்தை நடத்துவதற்கு அங்கிருந்தவர்களிடம் எந்த உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது.

ஜா-எல பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரின் பெயரில் இடைநிறுத்தப்பட்ட உரிமத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.

போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பெரும் தொகையை அவர்கள் பெற்றுள்ளனர்.

அதன்படி, இந்த போலி நிறுவனத்தை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதுபோன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டத்தின் முன் நிறுத்த அத தெரண உகுஸ்ஸா மிகுந்த விழிப்புடன் உள்ளது.

திடீரென தீப்பிடித்த விமானம்
Posted in உலக செய்திகள்

திடீரென தீப்பிடித்த விமானம்

திடீரென தீப்பிடித்த விமானம்

திடீரென தீப்பிடித்த விமானம் அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் பயணம் இரத்து

இதனால் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை ஏற்பட்டது.

173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 6 பயணிகள் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான போயிங் MAX 8 விமானத்திலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள் ,வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழு

விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைதுவிசேட சோதனை 13பெண்கள் கைது

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு

கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை

விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த வார்டில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இளம்பெண் உட்பட 21பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளம்பெண் உட்பட 21பேர் கைது

இளம்பெண் உட்பட 21பேர் கைது

இளம்பெண் உட்பட 21பேர் கைது ,கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம்

போதைப்பொருட்களுடன் கைது

பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு

கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை

அவர்களிடம் கஞ்சா, வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

விசேட சோதனை 13பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 13பெண்கள் கைது

விசேட சோதனை 13பெண்கள் கைது

விசேட சோதனை 13பெண்கள் கைது ,காலி நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மஹாமோதர பகுதியில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 13 பெண்களையும் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனை

நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட இந்த விசோட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போக்குவரத்து விதி மீறல்

இதன்போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவருக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சில சாரதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

13 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
Posted in இலங்கை செய்திகள்

13 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

13 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

13 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ,2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில், இந்தியாவிலிருந்து 269,780 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 124,652 பேரும் ரஷ்யாவிலிருந்து 114,644

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 27,786 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், இது 19.1% ஆகும்.

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,750 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,809 பேரும், சீனாவிலிருந்து 5,904 பேரும், பிரெஞ்சு நாட்டினர் 7,732 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கிய ஏமன் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கிய ஏமன் ஏவுகணை

இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கிய ஏமன் ஏவுகணை

இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கிய ஏமன் ஏவுகணை ,ஏமன் ஏவுகணை, ட்ரோன்கள் 4 முக்கிய இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கின

ஏமன் ஆயுதப் படை

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல முக்கிய இஸ்ரேலிய இலக்குகள் யேமன் ஏவுகணை மற்றும்

ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாக ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஏமன் அல்-மசிரா தொலைக்காட்சியின்படி, பீர் ஷேவா பகுதியில் உள்ள சியோனிச எதிரிக்குச் சொந்தமான ஒரு முக்கியமான இலக்கை நோக்கி

பாலஸ்தீனம் 2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏமன் ஆயுதப் படைகள் அறிவித்தன.

“ஏமன் ட்ரோன் படை மூன்று இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டது, இதன் போது ஆக்கிரமிக்கப்பட்ட ஹைஃபாவின் தெற்கே உள்ள ஈலாட்,

அஷ்கெலோன் மற்றும் ஹடேரா பகுதிகளில் மூன்று முக்கிய இலக்குகள் குறிவைக்கப்பட்டன” என்று யேமன் ஆயுதப்படைகள் தொடர்ந்து கூறின.

இராணுவ நடவடிக்கைகள்

இந்த இராணுவ நடவடிக்கைகள் முன்னர் நியமிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக யேமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.

“கடவுளின் உதவியுடன், அவர்கள் (யேமன் ஆயுதப்படைகள்) காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அமெரிக்காவின் நேரடி பங்களிப்புடன்

மேற்கொள்ளப்படும் மிருகத்தனமான போர், முற்றுகை மற்றும் இனப்படுகொலையை நிறுத்த உதவும் வகையில் இராணுவ பதில்களை

தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மேலும் விருப்பங்களைப் பற்றி ஆலோசித்து வருகின்றனர்” என்று யேமன் இராணுவ அறிக்கை தொடர்ந்து கூறியது.

“எங்கள் நிலைப்பாடு உறுதியானது மற்றும் மீளமுடியாதது, மேலும் எந்த விளைவுகளையும் பொருட்படுத்தாமல், நீதி கிடைக்கும் வரை பாலஸ்தீன

மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என்று யேமன்கள் தங்கள் அறிக்கையில் மேலும் வலியுறுத்தினர்.

IRGCதளத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்
Posted in உலக செய்திகள்

IRGCதளத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்

IRGCதளத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்

IRGCதளத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் ,வடமேற்கு ஈரானில் உள்ள IRGC தளத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்

ஈரானின் மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில்

ஈரானின் மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள சர்தாஷ்டில் உள்ள அக்லான் கிராமத்திற்கு அருகிலுள்ள IRGC தளத்தின் மீது பயங்கரவாத

தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் வீரமரணம் அடைந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.

மேற்கு அசர்பைஜான் தளத்தின் IRGC தியாகிகளின் மக்கள் தொடர்புத் தலைவரான கர்னல் ஷேக்கர், சில மணி நேரங்களுக்கு முன்பு சர்தாஷ்டில் உள்ள அக்லான் கிராமத்திற்கு அருகிலுள்ள IRGC தளத்தில் ஒரு பயங்கரவாதக்

குழுவின் உறுப்பினர்கள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் ஒரு பாசிஜ் படை கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அறிவித்தார்.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம்

குழுவின் அடையாளம் அல்லது தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்து மேலும் விவரங்களை வழங்காமல், இந்தச் செயல் அப்பகுதியில் உள்ள IRGC இராணுவத் தளத்தை குறிவைத்ததாகக் கூறினார்.

சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் உள்ளூர் அதிகாரிகள் இன்னும் கூடுதல் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.

ஈரானின் நீதிமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கினர்
Posted in உலக செய்திகள்

ஈரானின் நீதிமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கினர்

ஈரானின் நீதிமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கினர்

ஈரானின் நீதிமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கினர் ,ஈரானின் சஹேதானில் உள்ள நீதிமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கினர்

சனிக்கிழமை காலை ஈரானின் சஹேதானில் உள்ள நீதித்துறை கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆயுதமேந்திய நபர்கள் சிஸ்தான்

சனிக்கிழமை காலை, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாண நீதித்துறை மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் நீதித்துறை தகவல் மையம் அறிவித்தது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, 5 பேர் வீரமரணம் அடைந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டன.

ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதக் குழு என்று அழைக்கப்படும் பயங்கரவாதக் குழு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல்

தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல்

தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தாய்லாந்து விமானங்கள் கம்போடியப் பிரதேசத்தில்

தாய்லாந்து விமானங்கள் கம்போடியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது.

கம்போடியா, தாய்லாந்து வீரர்கள் முந்தைய ஒப்பந்தத்தை மீறி, எல்லை அருகே இருக்கும் விகாரையை நோக்கி முன்னேறி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் மாகாணங்களில் 14 பொதுமக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர்,

அதேவேளை கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தாய்லாந்து இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.

மேலும், மூன்றாம் தரப்பு சமரச பேச்சுவார்த்தை தேவையில்லை என்றும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.