அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
Spread the love

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி செய்து வருகிறார் .கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடத்திய அதே தந்திரோபாய திட்டத்தை தற்போது ஆரம்பித்துளளார் .

தொடர்ந்தும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் பேசு பொருளாக்க பட்டு பேசி கொண்டிருக்க வைத்து ,அனுரா கட்சியின் நகர்வை மக்கள் பார்வையில் இருந்து திசை திருப்பி

அதன் ஊடக அர்ச்சுனா மீதான வெறுப்பு வாக்குகளை அனுராவிற்கு விழ வைத்து வெல்ல வைக்கும் நகர்வில் ஈடுபடும் நோக்குடன் இந்த விடயங்கள் காணப்படுகிறது .

எனவே இந்த தேர்தலில் மக்கள் தமிழரசு கட்சியை வெல்ல வைத்து அதன் ஊடாக தேசிய தலைவர் உருவாக்கிய கட்சியை பலப்படுத்தி ,சிங்கள பேரினவாத கட்சியாக விளங்கி வரும் அனுரா கட்சி வடக்கில் வெல்வதை தடுக்க வேண்டும் .

மானத் தமிழர்களா ,மானம் கெட்ட தமிழர்களா என்ற போட்டி நிலவுகிறது .

இது தன்மான தமிழர்க்கு மிக பெரும் இழுக்கை ஏற்படுத்தும் .மீளவும் வடக்கில் சிங்கள மேலாதிக்கம் நிலவ விடாது தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்று பட்டு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு ஓட்டை போட்டு வெல்ல வைக்க வேண்டும் .

அர்ச்சுனா கூலிக்கு ஏவிவிட பட்ட ஒரு குழப்பவாதி என்பதை கடந்த பல வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் இழிநிலை பேச்சுக்கள் மற்றும் குழப்பங்கள் ஊடக காண முடிகிறது .

ஆகவே தமிழ் மக்கள் இதனை கண்ணுற்று செயல்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது .

தமிழ் நிலம் செழிக்க தமிழா ஒன்று படு ,,இனவாத அனுரா ஆட்சியை வடக்கில் தோற்கடித்து , ஒட்டு குழு , மாபியா குழுக்களை ஓட ஓட விரட்டு .தமிழாஒன்றாகி தமிழை அணிதிரட்டு .

வன்னி மைந்தன் –