வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர்

வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர்
Spread the love

வெள்ளம் வடிந்தபின் படம் காட்டும் அமைச்சர்

வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர் ,யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை

வெள்ளநீர் செல்ல கூடாது

எல்லைக்குள் வெள்ளநீர் செல்ல கூடாது என்ற காரணத்தால், பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய்

பகுதியில் உள்ள வெள்ள வாய்க்காலில் மண் அணை அமைக்கப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர்
வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர்


இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கே நேரடியாக விரைந்து நிலைமையைப் பார்வையிட்டேன்.


அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்தேன்.

நல்லூர் பிரதேசத்திலிருந்து


நல்லூர் பிரதேசத்திலிருந்து இயற்கையாக கோப்பாய் வாய்க்கால்கள் வழியாக கடலுக்கு செல்ல வேண்டிய வெள்ளநீருக்கு, கோப்பாய்

பிரதேச சபை எல்லைக்குள் மண் அணை அமைத்து தடை விதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.


இதன் காரணமாக நல்லூர் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து மக்கள் வீடுகளும் சொத்துக்களும் ஆபத்தை ஏற்படுத்தும்.


மக்களின் பாதுகாப்பை தகர்க்கும் இப்படிப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகள் ஏற்க முடியாதவை.


வெள்ளம் போன்ற அவசர நிலையிலெல்லாம் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.


அரசியல் காரணங்களோ பிரதேச எல்லைகளோ மக்கள் உயிரை விட முக்கியமல்ல. மக்கள் பாதுகாப்பே எங்களது முதன்மை.