
வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்
டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.
தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.
தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.
ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.