கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (7) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு மோஷன் (Motion) ஒன்றின் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார்
குற்றச்சாட்டின் கீழ்
என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியது.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

- ஜி.சி.இ.ஓ.எல் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி








