Tag: வைத்தியர்
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை ,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம்
அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்ததாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி.
தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட
சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.
சந்தேகநபர் இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்தி பாதிக்கப்பட்ட வைத்தியரை
அவமானப்படுத்த வேண்டுமென்றே முயற்சிப்பதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, சந்தேக நபர் இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்யான தகவல்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தை கோரினார்.
சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க
ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர்.
கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்
COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்
COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”
உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை.
இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள்.
இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்கு 45 வயது ஆகும்போது, நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள்.
அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள்.
மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.
“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.
இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,
“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”
பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும்.
பின்னர் முச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.
COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.
இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத்
இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத்
இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத் எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா
மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்று (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நான் நியமிக்கப் பட்டதில் இருந்து பல சுகாதார தர மேம்பாடுகள் மற்றும்
நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல் படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்த என்னை அர்ப்பணித்து வந்துள்ளேன்.
எனினும் கடந்த 19 ஆம் திகதி (19) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிர்ஷ்டவசமான கரு மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.
குறித்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கையை முன்னெடுத்து வந்தேன்.
எனினும் மகப்பேற்று விடுதியில் புகுந்த கும்பல் பிரசவ அறைக்குள் நுழைந்து மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியது.
நான் அங்கு சென்ற போது நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடினேன்.
எனினும் அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து சரமாரியாக தாக்க முயன்றனர். அவர்கள் என்னை கொலையாளி என்று கூறி கூச்சலிட்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ,மத்திய சுகாதார
அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் மேற்கண்ட மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க மளித்தோம்.
இதற்கிடையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஒரு பெரிய கூட்டம் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளி நோயாளர் பிராவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் என்னை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
நான் எனது குடியிருப்பில் இருந்து 355 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பயணிப்பதால் இது எனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு எதிரான தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் எனக்கு எதிரான பிரச்சாரங்கள் பொது கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எனக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது.
தயவு செய்து எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயவு செய்து என்னை அவசரமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கவும்.
எனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர் ,சந்தியில் தேங்காயை விற்ற அண்ணையை தேடி பிடித்த அர்ச்சுனா இராமநாதன் .
மகிழ்ச்சியில் மக்கள் .இது தான் அர்ச்சுனா என்பதை இப்பொழுதே எதிரிகள் சற்றே புரிந்து கொள்ளுங்கள் .
காணொளியை முழுமையாக பாருங்கள் .
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்,அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் லோஜி மற்றும் பிரகாஷ் ஆகியோர் வழங்கியுள்ள அதிரடி செவ்வியினை இதில் காண்க .
ஆளுமையுள்ளவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை மேற்படி காணொளிகள் காண்பிக்கின்றன .
காணொளியில் அழுத்தி முழுமையான வீடியோ பார்க்க
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்..தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர் .
எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ,தற்போது அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் .
காணொளியில் முழுமையான விபரம் காண்க .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா,சுயேட்ட்சையாக காலம் இறங்கிய அரசிஜுனா இராமநாதன் தனது சின்னத்தை அறிவித்துள்ளார் .
மருத்துவ ஊசி சின்னத்தில் போட்டியிடுகிறார் .
நோயாளிகளை குணம்படுத்தவல்ல ஊசி இப்பொழுது உங்களுக்கான சின்னமாக கிடைக்க பெற்றுள்ளது .
ஆகவே அதன் ஊடாக லஞ்ச ஊழல் வாதிகள் ,ஊழல் நோயால் பாதிக்க பட்டுள்ள வெள்ளை வேட்டிகள் ,தமிழ் கட்சிகளுக்கு உரக்க ஏறி இருந்து குத்து போடுங்கள் மக்களே .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர் ,வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கலான் ஆராய்ச்சியாளர் சுகுணன் குணசிங்கம் எப்படியான ஆள்? என்ன செய்யிறவர்?? என்று கேட்டுத் தெரிஞ்சு கொள்ளச் சொன்ன காரணத்தினால் திருமதி.பிரசாந்தி சுகுணனுக்கு அப்போது தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாணவன் ,அவரது தாய் ஆகியோரை டீச்சர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுதியது .
அதனை அடுத்து தற்போது கல்வி அமைச்சினால் மாற்றம் செய்ய பட்டுள்ளார் .மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .
இதனை அடுத்து தற்போது அவசரமாக மாற்றம் எய்யப்பட்டுள்ளதுடன் ,கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தியுயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இருந்து மக்களை மிரட்டி அடக்கும் நோக்கில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்ற விடயம் , தற்போது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்க பட்டுள்ளது .

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்
சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்
சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம் ,மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று (13.8.2024) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் – வைத்தியர் நாகானந்தன்
ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் – வைத்தியர் நாகானந்தன் தொலைக்காட்சிக்கு மனம் திறந்து வழங்கிய செவ்வி .
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இடம்பெறும் சோகம் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .
எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .
திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .
ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .
மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .
நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அதிர்ச்சி சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் கண்ணீருடன் விடைபெற்றார்
அதிர்ச்சி சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் கண்ணீருடன் விடைபெற்றார்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு
வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு
வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு க்கு நடவடிக்கை ,வடமகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தமது பணி புறக்கணிப்பு மேற்கொள்ளதாக அறிவித்துள்ளனர்.
அனைத்து அரசு வைத்தியசாலை வைத்தியர்களும் ஒருநாள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி ஆதார் வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அதிகாரியினால்,
அங்கு பணியாற்றிய ஏணைய வைத்தியசாலைகள் உடைய அதிகாரிகளுக்கும் பணிகளுக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டதாகவும் ,அதனால் அவருக்கு எதிராக இவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வைத்தியசாலையில் இடம் பெற்ற லஞ்ச ஊழல்
இந்த வைத்தியசாலையில் இடம் பெற்ற பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் தொடர்பாக அடுக்கடுக்காக பல விடயங்களை அறிவித்திருந்தால் ,அதனை அடுத்து அவருக்கு எதிராக பல மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதை அடுத்து தற்பொழுது,
அவர் உடனடியாக அங்கு மாற்றப்பட வேண்டும் எனக் கூறியும் அவரது நடவடிக்கைகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக உள்ளதாக தெரிவித்து ,
ஏனைய வைத்தியர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனால் அந்த வைத்தியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது அந்த மருத்துவர் மீதும் மக்களுக்கு பெரும் சினத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
பல்வேறுப்பட்ட விடயங்களை நேரடியாக அவர் சுட்டிக்காட்டி தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக பதிவேற்றம் செய்திருந்தால், முகநூல் ஊடாக வெளியிடப்பட்ட பல கருத்துக்களை அடுத்தும் காணொளி பதிவுகளை அடுத்தமே ,
மக்கள் உன்னிப்பாக பார்வை
மக்கள் அதனை உன்னிப்பாக பார்வையிட்டு அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளவும் ,
அவருக்கு ஆதரவான நடவடிக்கையை காண்பிக்கவும் ,மக்கள் குவிந்து வருகின்றனர் ,
வட பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாவரும் ,இவருக்கு எதிராக திசை திரும்பி உள்ள சம்பவம் அவர் ,தனிப்பட்ட பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்கிறார் என்கின்ற தோற்றபாடை உருவாக்கும் வகையில் ,
அனைத்து மருத்துவர்களும் ஒன்றாக இணைந்திருந்து ,அவருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறு வைத்தியர்கள் செயல்பட்டால், அவர்களது பணிகளுக்கும் ஆபத்தும் இடையூறும் ,விளைவிக்கப்படலாம்,
அதனாலயே சாவகஎச்சரி வைத்திய அதிகாரிக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவற்றுக்கு பின்புலத்தில் அரசியல் சூழ்ச்சி ஒன்று பின்னணியில் இடம் பெற்று வருவதான சம்பவங்கள் தற்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றன.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள்
மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
“வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நோய்
எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
5000 வைத்தியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்
5000 வைத்தியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்
5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த விசாரணைகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி போக்கிற்கு செல்லும்.
எனவே, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வைத்தியர்களின் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே கோரியுள்ளார்
வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம்
வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
NMRA இன் குழு உறுப்பினர்கள் எடுத்த ஒருமித்த முடிவின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தலைமை நிர்வாக அதிகாரி சுகாதார அமைச்சகத்திற்கு உள்வாங்கப்பட உள்ளார்.
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன கூறியுள்ளார்.
இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர்.
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு முடிந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,800 வரையாகும். அதனை 5,000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அதனை இலக்காகக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நாடு பூராகவும் காணப்படும் வைத்தியசாலைகளில் இணைக்கப்படும் புதிய வைத்தியர்கள், வைத்தியப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வைத்தியர்கள் மாத்திரமே வைத்தியர்களாக நாட்டின் சுகாதாரத் துறையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Featured
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இன்று தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட
வைத்தியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
இதன்போது, சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் வைத்தியர் சி.சிவகுமார் ஆகியோரினால் பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
இதில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு
கடைப்பிடித்துச் செல்லல்வேண்டும் என்ற விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாரிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆயர்வேத வைத்தியர்கள் தங்களின் பயிற்சிகளை
பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய காலநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் நேற்று (16) வழங்கி வைத்தார்.
இந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட வைத்தியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கு
நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர்கள் தங்களுக்கான பயிற்சிக் காலங்களில் மருந்து உற்பத்தி நடைமுறை, நிர்வாகம், மற்றும் பதிவேடுகள் தொடர்பான பயிற்சிகளை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே திருகோணமலை மாவட்ட கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 04 பேரும், மட்டக்களப்பு மாவட்ட சத்திரகொண்டான் மருந்து உற்பத்திப்
பிரிவுக்கு 03 பேரும், அம்பாறை மாவட்ட மருந்து உற்பத்திப் பிரிவவுக்கு ஒருவர் என்ற வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்











































