Tag: வன்னிமைந்தன் கவிதைகள்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
எரியுது இங்கொரு நெஞ்சு – தினம்
எறியுது ஏனது நஞ்சு ..?
புலனது சிந்தை பிஞ்சு – இது
புவி மேல் பறக்குமா குஞ்சு ..?
திசையது அறியும் பறவை – நீ
திசையது அறியா கறவை ….
விழியது கூர்மை பறவை
விடயங்கள் அறியும் நேர்மை …
தேடினாய் என்ன சொல்லு – நீ
தேறிய நிலையை வில்லு ….
புரிதலில் கிழிதல் கொண்டாய்
புண்களை விதைத்தேன் நின்றாய் …?
அறிதலில் வேகம் கொள்வாய்
அகிலம் வியக்க எழுவாய் …
தெளிதலில் வீரியம் பெற்றால் – நீ
தெரு நிலை வாழ்வியல் கழிவாய்…..
முடிதலில் என்ன கொள்வாய் ..?
முன்னே விளக்கி செல்வாய் …?
எதுவரை வாழ்வு கூறாய் ..?- இப்போ
எரிகிறாய் ஏனோ தீயாய்…?
-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -01/02/2018
முரசு மண்ணே பதில் கூறாய்
முரசு மண்ணே பதில் கூறாய்
குறிஞ்சி ,மருதம் குடி கொண்ட மண்ணில்
கூடு கட்டிய ஊரே – நாளை
கூடுறாய் ஆண்டில் இரண்டு – நீ
கூவுவாய் என்ன கூறு …?
தேறுவாய் என்றே தேடியே வந்தார்
தேற்றம் காணவில்லை ….
அகவை இரண்டு கழிய இங்கு
அழைக்கிறாய் என்ன விந்தை …?
சோரம் போனவர் பேரமானவர்
சோடனையாய் தினம் கூட …
வளரும் சங்கம் வளமது இழக்கும்
வழிகளை தடுக்க முடியல …
சிந்தையில்லா ஐந்தறிவாகி -சங்கம்
சிறையில் அடைக்கிற கோரம் ….
கண்டு கொதித்து கணையாய் எழுதல்
காலத்தில் இங்கு பிழையாம் …
முரசு மண்ணே பதில் கூறாய்
திண்டு கழித்து திண்ணைகள் கூடி
திமிராய் பேசும் நிலையாம் …..
தொண்டு செய்தல் சங்க நிலையின்
தொழும் பணி நிகழ்வின் முனையாம் …
பயின்று எழுந்து பணியது புரியும்
பள்ளி இங்கு இல்லையா …?
பாதை நீளும் வானை முட்டும் – திறன்
பக்குவ வாத்தி இல்லையா…?
கொள்கை விற்று கொள்ளையடிக்கும்
கொள்ளையர் கூட்டம் யாரோ ..?- மனம்
கொதிக்கும் நிலையில் எமை எழவைத்த
கொடிய செயலின் வேர் நீரே ….
தடுக்க மறந்து வினை தலையது ஆட்டும்
தறுதலை இல்லை நாமே ….
செழிக்க சங்கம் மறுத்தால் இங்கே
செழு நிலை இழப்பீர் நீரே …
- வன்னிமைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -31/01/2018
லண்டனில் முரசு மோட்டை ஒன்றிய கூடல்
எதிர் வரும் மாசி 10/02/2018 கூடுவதை அறிந்த போது
மனதில் எழுந்த கொதிப்பின் பதிவு …! - வன்னி மைந்தன் கவிதைகள்
மன்னித்து விடு
மன்னித்து விடு
உன்னை அழைத்தேன் எந்தன் நாளில்
உன்னை காணவில்லை ..
உள்ளம் தேடி அழைத்த உந்தன்
உருகும் மன்றில் நானில்லை …..
எதையோ எண்ணி வரவை தொலைத்தாய் ..?
எனக்கு தெரியவில்லை – என்
எண்ணத்தில வலிகள் படர
எறிந்தேன் உன்னை தொடர …
அழைத்த குரலில் ஆமே என்றாய்
அட டா இது தான் பண்போ ..? – மன்றில்
ஆளை காண தேடி நின்றேன்
ஆழி பேரலை இதுவோ ..?
முன்னே புரிந்த உந்தன் ஊழி
முன்னே வைத்தேன் ஓடி ….
முன்னே தேடி கூட வந்தாய்
மூச்சிழந்தேன் வாடி ….
போலி ஊடல் வேண்டாம் வேண்டாம்
போயிடு போயிடு நன்றே ….
தேடி வந்தும் உறவு தேறா
தேட வேண்டாம் மண்ணே ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன்)
ஆக்கம் -27/01/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
எம் அவலம் யார் புரிவார்
எம் அவலம் யார் புரிவார்
ஆளை வாட்டும் குளிருக்குள்ளே
ஆயுள் மெல்ல கரைகிறதே ….
ஆடை மாற்றி ஓடும் வாழ்வை
அல்லும் ,பகலும் இடுகிறதே ….
மஞ்சள் வெயில் உடல் தழுவும்
மாசம் மனது தேடுறதே ..- நாள்
மங்கும் ஒளியின் காலத்தையே
மனது இன்று வெறுக்கிறதே …..
ஆடை கட்டிய வெங்காயம்
அது போல் உடலும் ஆகிறதே …
உயிரை கொல்லும் குளிரை அடக்க
உடலில் சுமையை குவிக்கிறதே ….
மறைக்க உடலை மறந்தாலே
மரணம் உயிரை தின்றிடுமே ….
கொடும் பனியில் நனையும் வாழ்வதனை
கொஞ்சும் உறவுகள் அறிந்திடுமோ ..?
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22-01-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
பதில் சொல் ….!
பதில் சொல் ….!
கடல் மேலே மஞ்சத்தை
கண்ணே நான் கட்டிடவா ..?-நீ
கண்ணுறங்க , தாலாட்ட
கடல் அலையை தந்திடவா ..?
மழை மேக முகில் உரித்து
மங்கை உன்னை போத்திடவா …?
தங்கமே நான் மட்டும் – உனை
தாளமால் தழுவிடவா…?
வெள்ளி நிலா பேரழகில்
வெளியுலகை காட்டிடவா ..?- நீ
வேண்டும் வரங்களை தான்
விதம் விதமா தந்திடவா ..?
அழகு குலையாமல்
ஆயூள் எல்லாம் வைத்திடவா ..?
அடி வாங்கும் மத்தாளாம்
அதுவாகா காத்திடவா ..?
எதுவாக உனை தாங்க
எனக்கு நீ கூறாயோ ..?
ஏனோ நீ வெட்கி
ஏங்கி திரை போட்டாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் – 15-01-2018
இது தான் காதலா ..? …!
இது தான் காதலா ..? …!
உள்ளாடை அவிழ்க்கையில
உன்னை நீ மறந்தவளே …
வெள்ளாடை போன பின்னே
வெருண்டு நீ அழுததென்ன…?
கண்ணாடி உடை மாட்டி
கலர் காட்டி சென்றவளே
பின்னாடி ஒன்றோடி
பிரியம் வைத்ததென்ன …?
தள்ளாடி மனம் மயங்கி
தங்கமே வீழ்ந்தாய் …
தங்க தேர் அழகே
தவறொன்றை ஏன் புரிந்தாய் …?
முந்திக்க முன்னே அவன்
முழு நிலை புரியவில்லை …
சிந்திக்க மறந்தவளே
சிசு தாங்கி அழுததென்ன …?
உயிர் தந்து உடல் வளர
ஊதி பெருத்த வண்டி ….
ஊர் காண மறுத்து நீ
ஊர் ஒழிந்த நிலை என்ன …?
சின்ன இடி இடித்து
சிறு நிலா,விளையாட
மெல்லிய இடி அதிர்வில்
மெலிந்ததா உன் மகிழ்வு …?
தாயாகி உடல் சுமந்து
தரணியிலே நின்றவளே ….
பேயாகி நீ ஏனோ
பெற்று பிள்ளாய் எறிந்தாய் …?
நாயாகி உனை இன்று
நக்கி ஊர் திரிய…..
பேச்சின்றி உறைந்தவளே – உன்
பேரின்பம் இன்றெங்கே …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
இலங்கையில் 19 வயது இளம் பெண் பிள்ளை ஒன்றை பெற்று காட்டில் வீசி சென்ற செய்தி கேட்டு
வாடியபோது …!
காற்றுள்ள போதே தூற்று
காற்றுள்ள போதே தூற்று
நாளை என்ற நாள் மறந்து
நாடி வா இன்றெழுந்து …
ஊர் எழுந்து ஆட முன்னே
ஊர் புகுவோம் ஓடிவா ….
மஞ்சள் வெயில் உடல் தழுவ
மார்கழி போல் உறங்குவோம் ….
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
மயக்கும் இன்பம் ஏற்றுவோம் …
காலங்களை வீணடித்து
கழிக்கின்ற காலம் எல்லாம் …..
நாளையதில் மீண்டுமது
நாடி வர எண்ணி விடு ….
உள்ளமதில் வலியில்லா
உடல் பலம் உள்ளவரை …..
வேண்டியதை புரியவேண்டும்
வேளை இதில் கூட வேண்டும் ….
நோயுடலில் ஆசை வந்து
நொந்து மனம் சாவதுவோ …?
முந்தி வரும் நோயின் முன்னே
முடித்து விடு வேண்டுதலை …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
பிறந்த ஆண்டே பிறந்த ஆண்டே – நீ
பிறந்த மனை எதுவோ ..?
பிறந்த ஊரை சொல்ல முடியா
பிழைப்பு ஏன் உனக்கோ …?
வெல்ல முடியா சொல்லுக்குள்ளே
வெந்து போனவரே – நாளை
நல்ல வாழ்வு தருவாய் என்று
நம்பி நாம் வரவோ ..?
வீணாய் கரைந்து விரையம் ஆகி
வீழ்ந்த நாளில் எல்லாம் ….
சுகத்தை பறித்து சுமையை ஏற்றி
சுட்டாய் நீ எனலாம் ……

நாளை கடத்தி ஆண்டை விழுங்கி
நாயாய் அலைய வைத்தாய் – இன்று
நல்ல வாழ்வு தருவாய் என்றே – ஏன்
நாடி ஓடி வந்தாய் …?
பொல்லால் தாக்கி நெஞ்சை கிழிக்கும்
போர்களை நீ தந்தாய்….
வெல்ல முடியா வறுமை தந்து
வேகி சாக வைத்தாய் ……
இனியும் உன்னை நம்பிடவோ
இந்த ஆண்டே நீ பிறந்தாய் …?
கொஞ்சு தமிழா கொஞ்சம் எழடா – இந்த
கொடிய ஆண்டை விரட்டி விடடா….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
வருடம் பிறந்த முதல் நாளில்
வாழ்த்தி பாடிடலாம் – உள்ள
வலிகள் குறைக்கும் நிலை இருந்தால்
வாழ்வு கூடிடலாம் ….
தினம் போடும் நச்சரிப்பால்
திருத்தம் ஏதும் இல்லை
தினமும் கேட்டு மனமும் சலிக்க
வாழ்வே பிடிக்கவில்லை ….
தப்பே இல்லா நீதிக்கு
தண்டனை ஏன் சொல்லு …?
தவறி புரிந்த தவறென்ன
தகுமா பதில் சொல்லு …?
புரியா நிலையில் புண்கள் விதைத்தால்
புன்னகை மலர்ந்திடுமா …?
பூட்டிய சிறைக்குள் வாழும் வாழ்வை
பூலோகோம் ஏற்றிடுமா …?

அழுது புலம்பி களைத்தேன் நானும்
ஆயூள் முடித்திடவா …?- நாளை
ஆழ போகும் நாளில் உனக்கு – எந்தன்
அருமை உணரத்திடவா …?
வீணாய் மூட்டும் சந்தேகம் – உன்னை
விதவை ஆக்கிடுமே
விரைவில் உணர மறந்தால் – நிலை
விரைவில் கூடிடுமே ……!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018
ஏன் என்னை மறந்தாய்
ஏன் என்னை மறந்தாய்
உறவை தந்தால் உயிரை தருவேன்
உயிரே உயிரே நினைத்து விடு …..
அழைக்கும் மரணம் அதனை விரட்டி
அன்பே காப்பேன் புரிந்து விடு ….
எரியும் தீயில் உருகும் மெழுகாய்
எரிகிறேன் தினமும் புரிந்து விடு …
ஒற்றை சொல்லை உரைக்க மறுத்து
ஒளிகிறாய் ஏனோ மொழிந்து விடு ….?
கஞ்சல் உடையில் கசங்கிய உடலை
காண மறந்து சென்றாயா ..?
அழகிய உள்ளம் அதற்குள் உள்ளதை
அறிய மறந்து பறந்தாயா….?
ஒளியை வீசும் கதிரவன் ஒளியில்
ஓசியில் வாழ்ந்து செல்பவரே ….
ஏழை என்றே ஏனோ என்னை
எறிந்து நீயும் சென்றாயோ …?
ஆடம்பரங்கள் தேடி அலையும்
அழகே கொஞ்சம் நிற்பாய்….
தேடிய இன்பம் தேறா பொழுதில்
தேம்பி தேம்பி எனக்காய் அழுவாய் …!
வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் – 1-01-2018
வன்னி மைந்தன் கவிதைகள்
பிரிய முன்னர் அழும் விவாகரத்து
பிரிய முன்னர் அழும் விவாகரத்து
தாலி தந்தான் கேவல மாக்கி
தாரங்கள் உலவுவதோ ..?- வரும்
காலங்கள் கூடியே மகிழ்வு ஏறியே
காலங்கள் கழிந்திடுமோ …?
வாடியே கிடந்த வாழ்வினில் வந்தான்
வழியெங்கும் தூற்றுவதோ ..?- கொடும்
கேடுகள் தூவியே ஆடிடும் பெண்ணே – தாலி
கேள்வியே ஆகும் நன்றே ….
இணைந்தவர் பிரிதல் இதயத்தில் வலிகள்
இன்றே புரிந்து விடு – நாளை
கூடியே வந்தவர் கூவியே திரிவர்
குற்றங்கள் குழி தோண்டும்
ஆறாம் அறிவால் ஆள் மனம் ஒன்றை
ஆர தழுவி எழு – தவறும்
கால பிழையால் கசங்கும் வாழ்வில்
கண்ணீர் சுமையாகும் ….
ஆடவர் கூட கணவனும் ஓட
ஆக்கினை புரிகின்றீர் – ஊடல்
தெரிந்தும் மறைத்து தெரியா நடிக்கும்
தெளிந்தவன் கணவனடி……

ஊரின் பழிக்கு உன்னை அழைக்கும்
ஊனம் கலைந்து விடு ….
வாழ்வு தேறின் வழியை விட்டு
வாழ பழகி விடு …..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -30/12/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
வெல்வாய் ஒரு நாள் ஓடு
வெல்வாய் ஒரு நாள் ஓடு
பல நாள் இருளும் ஒரு நாள் மறையும்
பல முறை பலமுறை முயற்சிப்பாய் ..
வரும் வழி நகைப்பார் வலிகளை இடுவார்
வாடா நீயும் எழுவாய் ….
இருளும் ஒளியும் ஒருநேர் ஒரு நேர்
ஒன்றிடா இந்த உலகில் ….
ஒடிந்தே அழுதிடா ஓர்மம் கொள்வாய்
ஒன்றே வெற்றியில் நிற்பாய் ….
சிகரம் தொட்டவர் எல்லாம் இங்கே
சிரித்தா எழுந்தார் சொல்வாய் …?
வலிகளை கண்டு அஞ்சின் – இந்த
வாழ்வில் உயராய் காணாய்….

பக்குவம் நாட்டி பாரில் உயர்வாய்
பாதை காட்டும் உன்னை ….
காறி உமிழ்ந்தான் கூட உந்தன்
காலடி பணிவான் நாளை…
இது தான் வாழ்வு இது தான் வாழ்வு
இன்றே எண்ணி கொள்ளு …
இடர்கள் எல்லாம் உன்னை செதுக்கும்
இரும்பு பலமே எண்ணு….
நாளை மலரும் நாளில் ஒன்று
நாடும் உலகம் உன்னை ….
வாடா நின்று வாடா நின்று
வழிகளை தேடி ஓடு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29/12/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னை மறந்தது பிழை தானோ
உன்னை மறந்தது பிழை தானோ
இறைவா இறைவா நீ இருந்தால்
இன்றே எனக்கொரு பதிலிடுவாய்….
எதுவரை என்னை நீ வதைப்பாய்
என் கேள்விக்கு என்ன பதலிடுவாய்…?
ஒருமுறை நீயொரு வர மிடுவாய்
ஓராயிரம் ஆண்டுகள் நான் வாழ்வேன் …
இறப்பும் பிறப்பும் ஒருமுறை தான்
இதை எழுதி வைத்தவன் நீயே தான் …
எழுதி வைத்து படைத்தவனே
என் இன்னல் துடைப்பாய் என்று தான் ..?
கல்லாய் உள்ளாய் கடவுள் என்றால்
கரங்கள் நீட்டி பயனில்லை ….
மூவேளை வணங்கும் படி நிலையால்
முட்டாளாகி போனேன் யான் …
இறைவன் இல்லை என்றே தான்
இறைவா உன்னை மறந்து விட்டேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -25/12/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
அண்ணனுக்கு அகவை 63
அண்ணனுக்கு அகவை 63
எரிமலை வெடிக்கின்ற விழியடா – இவன்
எழுகின்ற திசை எங்கும் நெருப்படா ..
பணியாத பகை கொண்ட உளமடா- இவன்
பாய்கின்ற புலியணி தலைவண்டா……
தளராத குணம் கொண்ட புலியடா எந்த
தடை வந்தும் குலையாத புனிதண்டா ….
விலை போகா எங்கள் வீரண்டா-
விசாலமாய் படை கட்டி ஆண்டாண்டா …..
இவன் போலதலைவன் யாருண்டோ ..?
இனியேனும் யாரும் வருவாரோ …?
உறவாகி உள்ளத்தில் உறைந்தவன்
உணர்விலே கடவுளாய் நின்றவன் ……
இன்று நீ எழுச்சி கொண்ட நாள்
இல்லத்தில் எரிகின்ற பிறந்த நாள் …
வீரத்தின் உருவை வணங்குவோம்
விரைவிலே தருவான் ஈழம் நம்புவோம் …
ஆராரோ பாடும் அன்னையே – நீ
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்….
இந்த நாள் உந்தன் இனிய நாள்
இரு கரம் கூப்பியே வாழ்த்தினோம் …!
வன்னி மைந்தன்– ( ஜெகன் )
-ஆக்கம் -26/11/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
அழுதிட வைத்தெங்கே நீ போனாய்
அழுதிட வைத்தெங்கே நீ போனாய்
நேற்ரெங்கள் நிழலாகி நின்றாய்
இன்றேன் எம் விழியில் நீர் தந்தாய்…?
காற்றாகி நீ இன்று போய் விட்டாய்
கண்ணீரால் தவிக்கின்றோம் பாராய் ….
ஊற்றானாள் உன் முன்னே வீழ்ந்ததினால்
உடல் விட்டு நீயும் பறந்தாயோ …?
தேற்றுவார் இன்றி உன் உற்றாள்
தேய்கிறாள் இவளை யார் கப்பார் …?
கூற்றுவா ஏனின்று இவன் அழைத்தாய்
கூடு விட்டேனோ நீ பிரித்தாய் …?
பார் எங்கும் ஒளி வீசும் பிர சன்னா – நீ
பாதியில் போனது துயர் அண்ணா …
விழியிலே உந்தன் நிழல் உருத் தான்
விளையாடுது இன்றும் எம் நண்பா ….
பாசத்தை ஊற்றியே பழகியவா
பாதியில் இழந்துன்னை தவிக்கின்றோம் …!
- வன்னி மைந்தன்– ( ஜெகன் )
-ஆக்கம் -25/11/2017
நண்பன் – பிரசன்னா அவனது தாயார் இறந்த நாளில்
விழி மூடிய துயர் அறிந்த போது ….
எம் கண்ணீர் அஞ்சலி …
மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்
மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்
தேறவில்லை கல்வியென்று
தெருவெறிந்து போனவளே …
ஓடி வந்து பாடுகிறாய்
ஒரு தலையாய் தேடுகிறாய் …..
ஊரெல்லாம் உன் பேச்சால்
உருண்ட தொரு காலத்தில் – நீ
காணாமல் போன போது
காரிருள் படர்ந்ததடி ….
என் எழுத்தாணி தலை குனிய
ஏதறிந்து நான் எழுத …?
வார்த்தைகளை தேடுகிறேன்
வாயுக்குள் சிக்குதடி ……
மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்
விடை பெற்று போனவளே – என்
விடுதிக்கு வந்ததென்ன …?
ஏதெடுத்து யான் வழங்க
என் மனதை தேடுகின்றாய் …?
கடந்து வந்த காலங்களில்
நடந்து வந்த நினைவுகளை …
மீள் உனக்கு தருவேனா …?
மீளா துயில் கொள்வேனா …?
வன வாசம் போகாமல்
மண வாசம் பற்றியதால் …
உன்னை யான் மறப்பது தான்
உலகத்தின் விதியாம் …?
ஈடு வைக்க என்னிடத்தில்
ஏதுமில்லை அறிந்திடுவாய் …
ஏதெடுத்து நான் வழங்க
என்னை ஏன் தேடி வந்தாய் ..?
கூடு விட்டு போனவளே
கூடு தேடி வந்து விட்டாய் ….
நீ அழுது பயனில்லை – என்
நினைவுகளில் நீயில்லை ……
கந்தனவன் கோவணத்தை
கை பிடிக்க போவதில்லை …
விட்டு விடை பெற்றுவிட்டேன்
விடயங்கள் புரிந்து விடு …
கை மாறி போன பின்னே – நான்
காரிகையை கரம் பிடித்தேன்
கூடி வந்து வாழும் அவள்
கூண்டை விட்டு போவதுவோ …?
தேடி வந்த வாழ்கையில
தேற்றங்களை தந்தவளை…
வீசி விட்டு போவதுவோ …?- நான்
விடை பெற்று செல்வதுவோ …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்
அண்டை நாட்டு கொண்டையில
ஆடுதடா இந்த லங்கா …..
மண்டையிலே எதுமில்லா
மாமனாகி போன லங்கா …
வல்லவனாம் சீனா வாலு
வாடி போயு பிடித்த ஆளு ….
துள்ளி இன்று பேசிறாங்க
தூர கணை கொண்டவராம் …..
பண்டை நாட்டு புத்தனவன்
பாரதத்தை கொண்டவனாம் …..
அந்த நாட்டு மடி தடவி
ஆகா நல்லா பாடுதடா ……..

சிங்க பூரா ஆக்குவாராம்
சிரிக்குதடா வாய்கள் எல்லாம் ….
வண்டி போகும் சாலை கண்டா
வலியெடுக்கும் உடல்கள் எல்லாம் ….
இந்த லங்கா எண்ணத்தில
இருக்கு லஞ்சம் உள்ளத்தில …
நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
நடு வாரா சிங்க பூரா …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
உனக்காக காத்திருக்கிறேன் வா
உனக்காக காத்திருக்கிறேன் வா
உன்னை தேடுது என் மனமே
என்னை தேடுது உன் மனமோ ..?
பாடும் தென்றலே கூறிடுவாய் – இந்த
பால் நிலவை வென்றிடுவாய் ….
வானிலே உனக்கொரு வீடு கட்டி
வைத்தேன் அதிலே ஊஞ்சல் கட்டி ….
ஆடிட வந்தால் போதுமடி
அகிலம் எந்தன் கையிலடி …..
புல்லை மேயும் பனி துளியே
பூவை சுமக்கும் அழகிடையே ….
வெள்ளை ரோயா வாசமதை
வெறி ஏற்ற தருவாயா ..?
அன்பு கலந்த தேனமுதே
அழகாய் சுரக்கும் தேம்ஸ் நதியே …
எவரெஸ்ட் சிகரம் ஏறிடுவோம்
எந்தன் அன்பே வந்திடுவாய் …..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னை தேடி வருவேன் காத்திரு
உன்னை தேடி வருவேன் காத்திரு
விழுந்து விழுந்து நீ பேசும்
விடயங்களை இரசிக்கிறேன் …
விடலையில நான் தொலைத்த
விடயங்களை ருசிக்கிறேன்….
மூச்சு வாங்கி பேசும் உந்தன்
முன்னழகு பிடிச்சிருக்கே …
காற்று வந்து ஆடை விலக்கி
காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….
தடக்கி விழும் வார்த்தைகளின்
தடையங்களை முகர்கிறேன்
தனிமையதை தேடும் உந்தன்
தாகமதால் துடிக்கிறேன் ….
மேனி களைத்து உடல் வேர்த்து
மோகத்தாலே துடிக்கிறாய் ..
வெள்ளி நிலா ஓடிவர
வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….
தேகம் வேர்க்கும் வேலை வரும்
தேவதையே பொறுத்திருப்பாய்
தேடி வந்த பணி முடித்து
தேடி வருவேன் காத்திருப்பாய் ….!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -25,08,2017
வன்னி மைந்தன் கவிதைகள்
காரை நகர்
காரை நகர்
அலை வந்து தாலாட்டும்
அழியாத ஊரு ….
அதன் உள்ளே ஆடுதடா
ஆக்கினைகள் நூறு …..
சிங்களத்து வால் பிடிகள்
சிரிக்கின்ற கூடு – இங்கே
சிந்தை தமிழ் வாழ வைத்தார்
சிலர் உள்ள வீடு ….
முந்தை தமிழ் சாதிகளால்
மூழ்கின்ற ஊரு …..
முனேற்றம் காணாது
மூட்டும் சண்டை பாரு ….
உப்பு மண் போலான
உள்ளங்கள் பாரு –
உதவாத சிந்தையால்
உதிர்கின்ற காடு ….
கரை காண முடியாத
காரை மா நகரு …..
காலம் இக்கால
களியாட்ட பேரு ……
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/09/2017
வன்னி மைந்தன் கவிதைகள்






