Tag: சிங்கபூரா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்
Author: நிருபர் காவலன் Published Date: 18/11/2017 Leave a Comment on சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்
அண்டை நாட்டு கொண்டையில
ஆடுதடா இந்த லங்கா …..
மண்டையிலே எதுமில்லா
மாமனாகி போன லங்கா …
வல்லவனாம் சீனா வாலு
வாடி போயு பிடித்த ஆளு ….
துள்ளி இன்று பேசிறாங்க
தூர கணை கொண்டவராம் …..
பண்டை நாட்டு புத்தனவன்
பாரதத்தை கொண்டவனாம் …..
அந்த நாட்டு மடி தடவி
ஆகா நல்லா பாடுதடா ……..

சிங்க பூரா ஆக்குவாராம்
சிரிக்குதடா வாய்கள் எல்லாம் ….
வண்டி போகும் சாலை கண்டா
வலியெடுக்கும் உடல்கள் எல்லாம் ….
இந்த லங்கா எண்ணத்தில
இருக்கு லஞ்சம் உள்ளத்தில …
நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
நடு வாரா சிங்க பூரா …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017
வன்னி மைந்தன் கவிதைகள்






