Tag: ரஜினி
சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி
சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது.
அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மெட்டும் வெளியில் வந்தார்.
இந்நிலையில் ‘அண்ணாத்த‘ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ரஜினி கூறிவிட்டதாகவும் வரும் 8ந்தேதி படப்பிடிப்பு
தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதிவரை படப்பிடிப்புக்கு தேதிகள் கொடுத்துள்ள ரஜினி
தேர்தலுக்கு முதல் நாள் தான் சென்னைக்கு திரும்பி வாக்களிப்பார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்
ரஜினி தொடர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வந்தவர் 2 கதைகளுக்கு சம்மதம் சொல்லி
இருக்கிறார் என்றும் இளம் இயக்குனர்களுடன் இணையும் அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீரென புகுந்த ரஜினி
இளையராஜா புதியதாக திறந்திருக்கும் ஸ்டுடியோவை பார்த்து வியந்த ரஜினி, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு என்று பாராட்டி இருக்கிறார்.
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினி
இளையராஜா, ரஜினி
சென்னை தி நகரில் இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ கட்டி இசைப்பணிகள்
மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டுடியோ கட்டியிருப்பதை
கேள்விப்பட்டு அந்த ஸ்டுடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து,
கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
ரஜினி – இளையராஜா
இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டுடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?
ரஜினி, மணிரத்னம்
‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி
வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு,
மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக
இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம்
மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.
பொன்னியின் செல்வன், அண்ணாத்த பட போஸ்டர்கள்
தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மார்ச் 5-ந் தேதிக்குள் முதல் பாகத்துக்கான முழு படப்பிடிப்பும்
முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் பின்னணி பணிகளை நான்கு, ஐந்து மாதங்களில் முடிக்க
திட்டமிட்டுள்ளார்களாம். அவ்வாறு முடிக்கப்பட்டால் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினியும்
மணிரத்னமும் பட வெளியீட்டில் நேருக்கு நேர் களம் காண்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
ரஜினி
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து
செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும்
தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி
தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள
தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15-ந்தேதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு
முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில்
தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல்
பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல்
கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக
இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்
இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல்
ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? – பி.ஆர்.ஓ
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக
வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும்
தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரஜினி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். யாரோ விஷமிகள் இவ்வாறு வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
தேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்
நடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல்
கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்
ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-
‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக
யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில
அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.
கொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே
அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.
நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி
அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.
எனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.
ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர்.
அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.
எனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை
வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.
கட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா? அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ்
நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
அப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும்.
இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.
தேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு
செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.
கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து
கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரில் வலம் வந்திருக்கிறார்.
லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ரஜினி
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும்
தொடங்கப்படவில்லை. நடிகர்கள் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். வீட்டில்
இருக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
ரஜினி
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த
புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி.. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினியை கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட இந்தி நடிகர் ரோகித் ராயை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர்.
ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினிகாந்த்
இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரோகித் ராய். தேஸ் மெய்ன் நிகிலா ஹோகாந்த், ஸ்வபிமான் உள்ளிட்ட தொலைக்காட்சி
தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரை
இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள், முக கவசம்
அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள், நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது” என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது.
ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு
ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய்
“நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட
கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை
பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்
1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள்
அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி
வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி,’ ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:
“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2,’ ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42
வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.
பத்ரி வெங்கடேஷ்
ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா,
ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள்
அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி
விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன், ரஜினி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக
உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப்
பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி
ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல்
உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.
இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
இந்திய -கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
தமிழகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தை கர் நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்க பட்டுள்ளது .
கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
ரஜினிகாந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும்
தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.
ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில்
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தின்
தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.
தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் படத்தை கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை
திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த கன்னட
அமைப்பினர் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு அதிக தியேட்டர்களையும் ஒதுக்கி உள்ளனர்.
இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதால் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கர் நாடகாவில் ரஜினி
ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் ரஜினி வீடியோ
அரசியலுக்கு ரஜனி வரவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு புதிய நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்
தமிழக மக்கள் மத்தியில் கர்நாடகாவில் தனக்கு எதிர்ப்பு உள்ளது என்பதை காண்பிக்கவே ரஜனியின் இந்த வங்குரோத்து அரசியல் நகர்வுகள் இடம்பெறுகிறது






