Tag: மாவட்டங்களில்
குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை
குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை
குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை யும் ஒன்று என்று அமைச்சர் கூறுகிறார்.
இலங்கையில் பதுளை மாவட்டம்
இலங்கையில் பதுளை மாவட்டம், குழந்தைகள் தங்கள் சொந்த பெற்றோரால் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் பகுதிகளில் ஒன்றாக அடையாளம்
காணப்பட்டுள்ளது, இதற்கு பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால் தான் காரணம் என்று பெண்கள்
மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் கூறினார்.
பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தோட்டங்களில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் பலர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஊகிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெற்றோரால் தாக்கப்பட்ட குழந்தை
“பெற்றோரால் தாக்கப்பட்ட குழந்தைகளின் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதுளையில் பதிவாகியுள்ளன. முக்கிய காரணங்கள் பெற்றோர்கள்
மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், அத்துடன் கல்வியறிவின்மை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
தித்வா சூறாவளியால் 103 குழந்தைகள் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின் கீழ்
அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பதுளை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025 ஆம் ஆண்டுக்குள் மாவட்டத்தில் 83 பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை துஷ்பிரயோக வழக்குகள்
பதிவாகியுள்ளன, மேலும் 273 வீட்டு வன்முறை புகார்களும் பதிவாகியுள்ளன. பெற்றோர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த பிறகு 51 குழந்தைகள்
பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறிவிட்டதாகவும், பலர் வயதான பாட்டிகளின் பராமரிப்பில் விடப்பட்டதால் அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
ஐந்து பிரிவுகளின் கீழ் இந்தக் குழந்தைகளுக்கு மாதாந்திர கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பதுளை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு மாவட்டத்தில்
பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைக் கண்டறிந்து ஆதரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை ,இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.
நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்புby நிருபர் காவலன்
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைதுby நிருபர் காவலன்
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்ததுby நிருபர் காவலன்
மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் கடும் மழை
மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்
வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்
பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












