Tag: பெண்களை
பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்
பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்
பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம் ,பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய
சட்டங்களைத் திருத்துவதற்கான
சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் நான்கு முக்கிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்
அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமீபத்தில் (08) நடைபெற்ற தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் வேலை நீக்கம்
தொழிற்சங்கங்கள், தொழிலாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய 14 தற்போதைய தொழிலாளர் சட்டங்களை
மறுஆய்வு செய்வதற்கும், நான்கு முக்கிய தொழிலாளர் தொடர்பான சட்டமூலங்களை வரைவதற்கும் 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக செயலாளர் தெரிவித்தார்.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, இரவில் பணிபுரியும் பெண்கள் சட்டம், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வேலை நிறுத்தப்பட்டால் காப்பீடு தொடர்பான விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும்.
புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை விதிமுறைகளை நவீனமயமாக்குவதையும் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும்
இந்த மாற்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த தேசிய கொள்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், தொழிலாளர் துறையின் தரவுத்தளம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு சீர்திருத்தங்கள்
உருவாக்கப்படும் என்று துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பெண்களை குறிவைத்து கொள்ளை
பெண்களை குறிவைத்து கொள்ளை
பெண்களை குறிவைத்து கொள்ளை பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர்
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய
இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று கூறப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி, 5 நவீன கையடக்க தொலைபேசிகள், 15 ஸ்மார்ட் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சாதனங்களின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடு
கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், முகத்தை முழுமையாக மறைக்கும் இரண்டு
முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பெண் கைப்பை மற்றும் இரண்டு பெரிய பைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களை இலக்கு வைத்து, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்து மோட்டார்
சைக்கிள்களில் செல்வோரை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி மாலை பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போகுந்தர பகுதியில் பொலிஸாரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டனர்.
இதன்போது, குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததால் அவர்களை துரத்திச் சென்று, பாதையை தடுத்து பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுகளில் இருவேறு இலக்கங்கள் காணப்பட்டுள்ளது.
மேலும், இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்துச் சென்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.
பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரளை, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரவு நேரங்களில் வேலை முடிந்து
வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் பெண்களின் பைகளைக் கொள்ளையடித்து, அதிலிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை எடுத்துவிட்டு, பைகளை
பொல்கொட ஆறு மற்றும் பல்வேறு காட்டுப் பகுதிகளில் வீசியுள்ளதாக குறிப்பிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இருண்டு பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளை மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றிற்கு
உதிரிப் பாகங்களுக்காக விற்பனை செய்துள்ளதாகவும், ஏனைய கையடக்க தொலைபேசிகளில் உள்ள பெறுமதியான பாகங்களை மாத்திரம் அகற்றி அவற்றையும் அங்கு விற்பனை செய்துள்ளதோடு, அதன் ஊடாக பெறப்பட்ட
பணத்தை கொண்டு போதைப்பொருள் வாங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பெறுமதியான பாகங்கள் கழற்றி அகற்றப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் உள்ள மகனின் அறையில் இருந்தும்,
மொரட்டுவ பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் வைத்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான 25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள் ,மருத்துவர் அர்ச்சனாவை வீழ்த்துவதற்கு தற்பொழுது விபச்சார பெண்களை அனுப்பி யுள்ளதாஹ்க தெரிவித்துள்ளார் .
இவர்கள் மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அதன் ஊடாக கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ,சற்று முன்னர் தனது முகநூல் பக்கத்தில் அஅர்ச்சுனா பதிவு வெளியிட்டுள்ளார்.
தனது whatsapp ஊடாக தொடர்பு கொள்ளும் பெண்கள் இவருடன் நெருக்கமாக கதைப்பது போன்று காட்சி அளிக்கப்படுகின்றது.
பின்னர் அந்தரங்க ஆடைகளுடன் காணப்படும் இவர்கள் அதனூடாக தன்னை கவர்ந்திழுத்து அவரது அந்தரங்க பகுதிகளை புகைப்படம் பிடித்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் பெண்களை அனுப்பி இவ்வாறு தன்னை ஒரு அவதூறு பரப்பு நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளதை ,இந்த நடவடிக்கை மீளவும் அம்பலப்படுத்தி உள்ளதாக அர்ஜுன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
பிரபலமாக உள்ள அர்ச்சனா உடன் இவ்வாறான கிசுகிசுக்கப்பட்டால் தாங்களும் இந்த சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கப்படுபவர் என்ற நிலையிலும் சில பெண்கள் பிரபலமாவதற்காக ,இவ்வாறான லீலைகளில் ஈடுபட்டு வருவதற்கான தகவலும் வெளியாகி இருக்கின்றனர் .
கடந்த காலங்களில் ஜி.பி முத்து போன்றவர்கள் ஊடாக இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று அதனூடாக பல பெண்கள் பிரபலமாக இருந்தனர் .
அவ்வாறானவர்கள் அதே வந்த வேகத்திலேயே அவர்கள் காணாமல் போயிருந்தனர் .
அதேபோன்று ஒரு நிலை தான் தற்பொழுது மருத்துவர் அர்ச்சனாவுக்கு ஏற்பட்டு வருவதை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
மனிதநேயத்துடன் மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கின்ற அர்ஜுனாவுக்கு எதிராக தற்போது விபச்சார பெண்களை அனுப்பி அதனூடாக அவருக்கு அவதூறுகளை பரப்பி ,
வீழ்த்துவதற்கு எனக்கு எதிரிகளின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை தோல்வியில் முடிவடையும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
தமிழ் ஈழத்தையம் அதன் தாய் மார்கள் ,பெண்களை இழிவாக பேசினார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவருக்கு தர்ம அடி வழங்க பட்டுள்ளது .
பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முக நூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது .
ஈழ மக்களையும் ,அந்த பெண்களையும் இழிவாக கதைக்காதீர்கள் என தெரிவித்து அந்த பெண்ணிடம் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
ஆனால் அதனை மீறி அவர் டிக் டோக்கில் அருவருப்பாக பேசியதாக தெரிவித்தே, கோபமடைந்த மக்கள் குழு இவர் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போரில் பல உறவுகளை பறிகொடுத்து, அந்த மன விரக்தியில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை சீண்டியவர்களுக்கே இவ்வாறு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரியவருகிறது .
டிக் டோக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பல விடயங்கள் பகிர பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
சந்தேகநபர் 8 மாதங்களில் 21 ஓட்டோக்களை திருடியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 ஓட்டோக்களையும், ஓட்டோக்களின் மீதமுள்ள பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரிபத்கொடையில், குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்






























