Tag: பிடியாணை
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
ஏர்பஸ் விமானங்களை வாங்குவது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில்
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச
சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின்
மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணைகளை கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று பிறப்பித்தார்.
மேலும், இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டு
சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல் தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு
எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி
வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை
போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள
அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.
டயானா கமகேவிற்கு பிடியாணை
டயானா கமகேவிற்கு பிடியாணை
டயானா கமகேவிற்கு பிடியாணை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்
டயானா கமகே, வழக்கு விசாரணை
டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான்
இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு பிடியாணை
ஞானசார தேரருக்கு பிடியாணை
ஞானசார தேரருக்கு பிடியாணை மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாது என ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அத்துடன், ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது கந்தானை-கந்தேவத்த பகுதியில் நேற்று (02) மாலை திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.
இதன்போது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள்
தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, புத்தளம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சீனப் பிரஜைக்கு பிடியாணை
சீனப் பிரஜைக்கு பிடியாணை
போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது.
சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த சீனப் பிரஜையை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்





















