ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை

ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை
Spread the love

ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை

ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
ஏர்பஸ் விமானங்களை வாங்குவது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச

சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின்

மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணைகளை கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று பிறப்பித்தார்.

மேலும், இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டு

சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்

ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.