உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு மறுகட்டமைப்புத் திட்டத்தில் நிதி ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மீள்கட்டமைப்பு முயற்சி

மீள்கட்டமைப்பு முயற்சிக்காக நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கம் பொறுப்பேற்கும் அதே வேளையில் நிதி ஒழுக்கத்தை

அரசாங்கம் கண்டிப்பாகப் பேணும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

மீள்கட்டமைப்பு இலங்கை முயற்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், பேரிடர் சூழ்நிலைகளில் வழக்கமான வழிமுறைகள் செயல்படுவதை

நிறுத்துவதால், தவறான மேலாண்மைக்கு வழிவகுக்கும் என்பதால், பேரிடர் சூழ்நிலைகளில் நிதி ஒழுக்கம் வலுவாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றார்.

மக்களால் நன்கொடையாக வழங்கப்படும்

மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கம் முழுப் பொறுப்பேற்கும் என்றும், ஒவ்வொரு திட்டத்திலும்

வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

“யாராவது ஒரு மருத்துவமனையை கட்டுவதற்கு நன்கொடை அளித்தால், நன்கொடையாளர் செலவுகள் மற்றும் கட்டுமான செயல்முறையின் நிலைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறலாம்” என்று அவர் கூறினார்.

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா,மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பிச்சை எடுத்து வசித்து வந்த அம்மா ஒருவரை அடையாளம் கண்டு கொண்ட வன்னி மைந்தன் டிக் தளம் அதனை மக்களுக்கு தெரிவித்தது .

அதனை அடுத்து அந்த அம்மாவிற்கு சுவிஸ் ராசா அண்ணா அவர்கள் 15600 ரூபா பெறுமதியான உணவு பொருட்களை வழங்கி வைத்தார் .

அம்பாறை மாவட்ட ஏற்பட்டு குழு அன்பர் துவா ஊடாக இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த உதவியினை காலம் அறிந்து வழங்கிய ராசா அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

பிச்சைக்கார வேடம் பூண்டு மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டியை திருடிச் சென்றவர், வௌ்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான இவர், பொலிஸின் ஜஆர்சி பட்டியலில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது. மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் .

பாடசாலை மாணவன், நகரில் மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை மார்ச் 22ஆம் திகதி நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள் மூலம் திருடனை தேடிவந்தனர். அதிலிருந்த காட்சிகளின் அடிப்படையிலே​யே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பில், ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர் எனவும் தெரியவருகின்றது,

இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை(01) ஆஜர்படுத்திபோது எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இப்போ ஏன் அழுகிறாய் ..?

இப்போ ஏன் அழுகிறாய் ..?

அப்பன் பேர் தெரியா
அநாதை என்றவனே
ஓப்பாரி வைக்குதடா- ஊர்
ஓடி ஓளிவதென்ன

தப்பேதும் இல்லாமல்
தாராளம் ஒதுக்கியவா
பிச்சை எடுக்கிறாயே– நாட்டை
பிச்சை ஆக்கினாயே

ஆள்தல் புரியாது
ஆள வந்தவேன
கேடு பார்த்தாயா
கேவலம் கெட்டாயே

ஓடி ஓளிந்திடத்தான்
ஓடி வந்தாயோ
நாட்டை விற்றிடத்தான்
நாடு வந்தாயோ

சந்தி சிரிக்குதடா
சகலகலா வல்லமையே
பொந்து இருக்கென்று
போய் நுழைய கூடாது

வம்பு இதுவென்றே
வாழ்தல் கூடாது
பந்தி இருக்கென்று
பல் இழிக்க கூடாது

அந்தி மலரும்
அது மறத்தல் கூடாது
தொண்டு செய்தபின்
சொல் திரிதல் கூடாது

பல் துளக்கா விடின்
பகலும் விடியாது
சிந்தை துளக்காவிடின்
சிகரம் எட்டாது

பார்த்தாயா நீ இன்று
படை திரளும் கோலத்தை
அதர்மத்தின் கோலனே
அழிந்திடடா நீ இன்று …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் சிசுக்களை வைத்து கூலிக்கு பிச்சை எடுத்த கும்பல் கைது

    யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

    யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

    அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

    இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.

    அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்

      பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்

      அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை

      மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

      அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ

      மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

      2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள்

      நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துகொண்டே கூறுகிறார். ஆனால்

      உண்மையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

      நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம்போல வெளிநாடுகளுக்கு சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை எனவும் அவர் கூறினார்.

        Posted in Uncategorized

        பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு.

        பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு.

        பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

        பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட மறுப்பு

        டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

        டெல்லி நகரில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்போது கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு கொரோனா நோய்

        பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

        கொரோனா வைரஸ்

        இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறினார்கள்.

        மனுதாரர் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

        அவர்கள் ஏன் பிச்சை எடுப்பதற்காக தெருக்களுக்கு வருகிறார்கள்? வறுமை வாட்டும்போது அவர்கள் தெரு வீதிக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

        சுப்ரீம் கோர்ட்டால் அவர்களை தடுப்பதற்கு உத்தரவு போட முடியாது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை. அரசு சமூக நல கொள்கைகளை வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

        அவர்கள் நம் கண்ணில் படக்கூடாது என்று எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது.

        பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

        எந்த சூழ்நிலையில் அவர்கள் பிச்சை எடுக்க வருகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது சமூக பொருளாதார பிரச்சினை. அவர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் இதை சரி செய்துவிட

        முடியாது. இது சம்பந்தமாக மத்திய அரசு, டெல்லி நகர அரசு ஆகியவை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

        இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

        அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சின்மாய் ‌ஷர்மா கூறும்போது, ‘‘எங்கள் தரப்பு

        மனுதாரர் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என்று கூறினார்.

        இந்த வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

          இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

          இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

          இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை
          கோப்புபடம்

          இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக

          அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா கூறியதாவது:-

          கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான யாசகர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது

          அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

          போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல்

          பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு

          எடுக்கப்படும்.உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை.

          இவ்வாறு அவர் கூறினார்.

          Posted in இலங்கை செய்திகள்

          பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

          பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

          பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை

          எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்

          முடியும் வரை காணொளியை பாருங்கள்

          பிரான்சில் பிச்சை எடுத்த
          பிரான்சில் பிச்சை எடுத்த