Tag: நாங்கள்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானை அழிப்போம் எதிரிகள்
ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .
முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .
ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.
மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .
தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.
அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.
மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.
சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.
தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.
மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.
காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗
-பிறேமா(எழில்)-
- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- கப்பல்கள் மீது தாக்குதல்

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்

- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்

- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு











