Tag: சினிமா
திரிஷாவுக்கு இது முதல்
திரிஷாவுக்கு இது முதல்
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திரிஷாவுக்கு இது முதல் முறை!
திரிஷா
சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து
வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
திரிஷா
திரிஷா
இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு
தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலமாக அறியப்பட்ட நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிவருகிறது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி கவுதம்?
ராஷ்மி கவுதம்
நடிகர் சாந்தனு நடித்து வெளியான கண்டேன் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார்.
ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம்
என்றனர். இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம்
செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
ராஷ்மி கவுதம்
ராஷ்மி கவுதம்
சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், அவருடைய
திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.
பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.
அந்த வேலைகளுக்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார்களாம். தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் திகதி துவங்கி 27ம் திகதி நிறைவடைய உள்ளதாம்.
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா… வைரலாகும் புகைப்படம்
இலியானா
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’
திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இலியானாஇலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது அவருடைய புதிய கவர்ச்சி
புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இலியானா
இலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு இறுக்கமான உடை
பெண்களுக்கு இறுக்கமான உடை
பெண்கள் அழகுக்காக அணியும் லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவது சருமத்திற்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சரும வறட்சி, உடல் வெப்பம் அதிகரிப்பு போன்ற
அறிகுறிகளை வெளிப்படுத்தும். லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
ரத்த ஓட்டம்: லெக்கின்ஸ் அணியும்போது கால்களுக்கு பொருத்தமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அடிக்கடி அணியும்போது கால் பகுதியில் ஏற்படும் இறுக்கம்
காரணமாக அந்த பகுதியில் உள்ள செல்கள் சுவாசிக்க முடியாமல் போகும். இறுக்கம் அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில்
குழப்பம் நேரிடும். சீரற்ற ரத்த ஓட்டம் காரணமாக சருமம் பாதிப்புக்குள்ளாகும். தொடைகளில் உள்ள நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்படும். அது உணர்ச்சியற்ற தன்மையை உருவாக்கிவிடும்.
முடி வளர்ச்சி: இறுக்கமான உடை அணிவது முடி வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முடிகள், வேர்க்கால்களில் இருந்து மேல் நோக்கித்தான்
வளரும். ஆனால் இறுக்கமான உடை அணியும் போது சில முடிகள் நேராக வளராமல் பக்கவாட்டிலோ அல்லது சுருண்டோ
சருமத்தில் படர்ந்து நோய்த்தொற்றை உண்டாக்கக்கூடும். அப்படி சரியாக வளராத முடிகளால் ஏற்படும் தொற்று காரணமாக கொப்புளங்கள் தோன்றும். அப்படியே அடர்த்தியாக சுருண்டு
பெண்களுக்கு இறுக்கமான உடை
இருப்பதால் அந்த இடத்தில் வலியும் அதிகரிக்கும். கொப்புளங்களால் அவஸ்தைகளையும் அனுபவிக்கக்கூடும்.
படர் தாமரை: பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு உடல் சூடுதான் காரணமாக அமைந்திருக்கிறது. இறுக்கமான உடை அணியும்போது உடல் சூடு வெளியேற முடியாத சூழல் உண்டாகும்.
வியர்வையும் அப்படியே தங்கிவிடுவதால் அரிப்பு, சருமம் சிவப்பாதல் போன்ற பாதிப்புகள் நேரும்
. அவை படர் தாமரை பிரச்சினைக்கும் வழிவகுக்கும். படர் தாமரையால் ஏற்படும் அரிப்பு கடும் வேதனையை உண்டாக்கும். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவக்கூடும்.
சரும வறட்சி: லெக்கின்ஸை அதிக நேரம் அணியும்போது உடலில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து சருமத்தை வறட்சி அடைய வைத்துவிடும். தடிப்பு, புண்கள் ஏற்பட காரணமாகிவிடும். லெக்கின்ஸை கழற்றியதும் குளித்துவிடுவது நல்லது.
பூஞ்சைகள்:இறுக்கமாக உடை அணியும்போது சிலருக்கு ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படக்கூடும். கால் பகுதிகளில் அதிக பாதிப்பு நேரும். இறுக்கமான ஆடைக்கும், உடலுக்கும்
இடையே படியும் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடும். ஆதலால் தளர்வான உடைகளை அணிவதுதான் சருமத்திற்கும், உடலுக்கும் நல்லது.
ஈஸ்ட் தொற்று: பொதுவாக ஈஸ்ட், வெப்பமான இடத்தில் நன்கு வளர்ச்சி அடையும். லெக்கின்ஸ் போன்ற வெப்பமான உடை, அவை நன்கு வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
லெக்கின்ஸ் அணிய ஆசைப்பட்டால், சிறிது நேரம் உடுத்தலாம். நாள் முழுவதும் அணிவது சரியானதல்ல.
அரிப்பு:இதுவும் பூஞ்சை தொற்றுகளால் உண்டாகிறது. லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை அதிகமாக வெளியேறும்.
அவை உடைக்குள் படிவதால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். ஒருவேளை லெக்கின்ஸ் அணிந்து
உடற்பயிற்சி செய்தால் அந்த உடையை நீண்ட நேரம் அணியக்கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் உடையை மாற்றிவிட்டு கை, கால்களை நன்றாக கழுவிவிட வேண்டும்.
குளித்துவிடுவதும் நல்லது. பூஞ்சை தொற்று ஏற்படுவதை தவிர்க்க, கிரீம் உபயோகிக்கலாம்.
முகப்பரு: பெண்களின் சருமத்தை பாழ்படுத்துவதில் முகப்பருவுக்கு முக்கிய பங்கு உண்டு. இறுக்கமான உடை அணிவது கூட முகப்பரு பிரச்சினைக்கு அடிகோலிடும்.
ஏனென்றால் இறுக்கம் காரணமாக வியர்வைகள் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போய்விடும். அவை சருமத்தில் படியும்போது முகப்பரு பிரச்சினை உருவாகக்கூடும்.
வயிறு: யோகாசனத்தில் ஈடுபடும்போது இறுக்கமான பேண்ட் அணியும் வழக்கம் இருக்கிறது. அவற்றுள் ஒருசில யோகா பேண்ட்கள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடும்.
அது செரிமான அமைப்பை பாதிப்புக்குள்ளாக்கும். அதனால் வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத பேண்ட் அணிவதற்கு முயற்சிக்க வேண்டும்.
உடல் பருமன்: உடல் எடை அதிகரிப்புக்கும் லெக்கின்ஸ் காரணமாக அமைந்திருக்கிறது. தசைகள் இறுக்கம் அடைந்து உடல் தோற்றம் மாறுபடக்கூடும்.
நடிகர் ஜெயராமுக்கு கொரனோ
நடிகர் ஜெயராமுக்கு கொரனோ
மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயராம்
ஜெயராம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயராம்
நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர்
தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார் விபத்தில் சிக்கிய நடிகர்
கார் விபத்தில் சிக்கிய நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.
கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
அர்னால்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின.
மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய
காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.
அர்னால்டு
விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பெண்
ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.
வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ்
இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புகிறோம், மிக்க நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர்
, தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா
இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும்
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
இரவில் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.
ஆயுர்வேதத்தின்படி இரவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அவை செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும். இரவில் காரமான,
எண்ணெய் கலந்த கடினமான உணவுகளைஇரவில் உட்கொள்ளும்போது செரிமானமா வதில் சிக்கல்கள் உண்டாகும். அத்துடன் தூக்கமின்மை, மன அமைதியின்மை, நீரிழப்பு, வாயு தொல்லை,
வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் குடலுக்கு இதமளிக்கும். காலையில் அதிக ஆற்றலை உணரவைத்து
உற்சாகமாக செயல்பட தூண்டும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகள் இரவில் தவிர்க்க வேண்டும்.
தயிர்: சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு தயிர் உதவும். ஆனால் இரவில் அதனை உட்கொள்ளக்கூடாது. தயிருக்கு பதிலாக இரவில் மோர் அருந்தலாம். ஏனெனில் தயிர் உடலில் கபம்
சார்ந்த பிரச்சினையை அதிகரிக்கும். உணவுகள் உடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். நாசி துவாரங்களில் சளி உருவாகுவதற்கும் வழிவகுத்துவிடும்.
சாப்பாடு: இரவில் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். மேலும் குறைவான அளவே சாப்பிட வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களையும் இரவில் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். பொதுவாக இரவில் செரிமான அமைப்பின்
செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். அந்த சமயத்தில் அதிகமாக உணவுகள் சாப்பிடுவது, ஜீரணமாவதற்கு கடினமாகிவிடும். காலையில் அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
புரதம்: இரவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பயறு வகைகள், பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை, பழங்கள் போன்றவற்றை இரவில் சாப்பிடலாம்.
இரவில் இத்தகைய உணவுகள் செரிமான அமைப்பை மிகவும் இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால்: இரவில் பால் பருகும் பழக்கம் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பாலைத்தான் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குளிர்ந்த பாலை உட்கொள்ளக்கூடாது. சூடான பாலை பருகுவதுதான்
சிறந்தது. ஏனெனில் சூடான பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்தான் எளிதில் ஜீரணமாகும். இரவில் வெறுமனே பால் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். பாலுடன் சிறிதளவு இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து பருகலாம்.
மசாலா பொருட்கள்: உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான மசாலாப் பொருள்களை தேர்வுசெய்தால், அது
உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வையும் சீராக பராமரிக்கும். அவற்றை இரவு உணவிலும் பயன்படுத்தலாம். ஆனால் காரமான மசாலா பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.
இரவு உணவில் லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவனிக்கு வந்த சோதனை
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவனிக்கு வந்த சோதனை
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னிக்கு வீட்டில் இருந்து வந்தவுடன் சோதனை வந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை
பாவ்னி
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து
பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பாவ்னி
கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில்
இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
கொரோனா அதிகரிப்பு சூழலில் நடிகர் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது
என்பது குறித்து ஆலோசிக்கப் படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து – நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த்
சென்னை:
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது.
பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார்.
இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்தது.
சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. ஜதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிலும் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்.
இதற்கு பதிலளித்த சாய்னா, சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களை நீங்கள் இவ்வாறு குறி வைக்கக்கூடாது. பரவாயில்லை. நான் இதுபற்றி கவலை கொள்ளவில்லை.
நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றார். இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில்
நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்ளிடம் அவர் பேசியதாவது:
இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதில் ஒன்று கிரிமினல் வழக்கு அல்ல. அவதூறு வழக்கு உள்ளது. சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. எங்களுக்கு அவரது அறிக்கை மட்டுமே தேவை.
கொரோனா அதிகரிப்பால் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
பிரபல இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, தனுஷ் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
ஐஸ்வர்யா – தனுஷ்
தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், கஸ்தூரி ராஜா. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகன், டைரக்டர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ்.
இவருக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.
இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டார்கள். இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும்
அறிவித்தார்கள். இதுபற்றி தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது:-
‘‘தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும்
விவாகரத்து செய்யவில்லை. இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில்
இருக்கிறார்கள். நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன்’’ என்றார்.
ஆடைகளைத் திருடியதாக நடிகை மீது புகார்
ஆடைகளைத் திருடியதாக நடிகை மீது புகார்
ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்‘ திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
அதனை தொடர்ந்து அவர் ‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா
வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் வசித்து வரும் அவர் அண்மையில் அண்ணாசாலை பொலிஸ் நிலையத்தில் ”தனது வீட்டில் பணிபுரிந்து வந்த தனுஷ்
என்பவர் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கெமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை பிடித்து விசாரித்த பொலிஸார் குறித்த நபரிடமிருந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பொருட்கள் திரும்ப கிடைத்ததை அடுத்து தனுஷ் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற நிக்கி கல்ராணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி
மனைவி சமந்தாவை பிரிவதாக அறிவித்த நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தனக்கு ஏற்ற ஜோடி அவர்தான் என்று கூறியிருக்கிறார்.
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா
சமந்தா – நாக சைதன்யா
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு
என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.
நாக சைதன்யா – சமந்தா
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும்
கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… பிரபல நடிகை கருத்து
தனுஷ் – ஐஸ்வர்யா
கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு.
குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி
இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கஸ்தூரி பதிவு செய்து இருக்கிறார்
மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி
மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
ஐஸ்வர்யா – தனுஷ்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு
நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து
இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.
இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும்
ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
விஜய்
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். ஆனால்
விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
விஜய் – பிரியங்கா சோப்ரா
இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல்
செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக
நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
ராஜு ஜெயமோகன்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற
ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி
பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகினி உடையில் வலம் வரும் கிரண்
பிகினி உடையில் வலம் வரும் கிரண்
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ
கிரண்
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன்
‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது.
இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின்னர் படம் நியாபகம் வருகிறது என்றும், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.






















