பணச்சலவை திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

பணச்சலவை திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை சபாநாயகர்

பணச்சலவை திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை சபாநாயகர்

பணச்சலவை திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை சபாநாயகர் தெரிவித்தார்.

பணச்சலவை திருத்த மசோதா

பணச்சலவை திருத்த மசோதாவின் 17 மற்றும் 18 ஆம் பிரிவுகளிலுள்ள சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும், அவற்றை ஒரு சிறப்புப்

பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை) நிறைவேற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம்

தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்பட்ட

இருப்பினும், நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், குறிப்பிட்ட அந்தப் பிரிவுகளை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் ஷானகியன் ரசமாணிக்கம் தனது தீர்ப்பை நிறைவேற்றத் தவறினால், அவர் சபையிலிருந்து நீக்கப்படுவார் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று எச்சரித்தார்.

சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடும் நபர்

சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடும் நபர்களிடமிருந்து அமைச்சர் இலஞ்சம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கம் குற்றம் சாட்டியதை

அடுத்து, அவருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்மொழி மோதலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தனிப்பட்ட விரோதப் போக்கினால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறி, அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கம்

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கம் அமைச்சருக்குப் பதிலளிக்க முயன்றபோது, ​​சபாநாயகர் அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.

இது நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சபாநாயகருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

இந்த அமளிக்கு மத்தியில் சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார புகார் அளித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதால், அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார இன்று வலியுறுத்தினார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிஐடி உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்வதாக சபாநாயகர் உறுதியளித்தார்.

ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை

ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை

ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22)

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இதன்போது சபாநாயகர் பொலிஸமா அதிபருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அரசியலமைப்புப் பேரவையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய, முழுமையான வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நியமனம் இடம்பெற்றிருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.

பொலிஸ்மா அதிபர்

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய, எந்தவொரு அரசியல் செல்வாக்கும் இன்றி பொலிஸ்மா அதிபராக

நியமிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு

கலந்துரையாடப்பட்டதுடன், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மிகவும் ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என சபாநாயகர் முன்பு

விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

சாரதிகளின் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து அவர்கள் முடிக்கும் இடம் வரை

இத்திட்டத்தின்படி, சாரதிகளின் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து அவர்கள் முடிக்கும் இடம் வரை அவர்களின் வாகனம் செலுத்தும் முறைகள் குறித்த

தொடர்ச்சியான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் அந்த இடத்திலேயே பாராட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு சாரதிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம் ஒழுக்கம் நிறைந்த சாரதிகளை உருவாக்கி, வீதி விபத்துக்களைக் குறைத்து உயிர் இழப்புக்களைத்

தடுக்க முடியும் என்றும், இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார்.

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை
Posted in இலங்கை செய்திகள்

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும்.

முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று சான்றுரைப்படுத்தினார்.

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு சந்தித்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன .

வரி அறவீடு மாறுதல் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ஆனாலும் அரசு கருதுகிறது .

அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது .

வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை இலங்கை சந்திக்கும் என எதிர் பார்க்க படுவதால் ,இந்த மாறுதல் அவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது .

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (17) அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (17) பிற்பகல் ஒரு மணிக்கு கோப் குழுவின் அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வௌ்ளிக்கிழமை ஜூம்மா இருப்பதால்

மரிக்கார் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ள முடியாது. ஆகையால் இந்த விடயத்தில் தலையிடுமாறு சபாநாயகரை பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

பின்னர் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, மறு அறிவித்தல் வரை கோப் குழு குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

அங்கு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு அந்த கோப் குழுக்கூட்டத்தை நடத்தியிருக்கவேண்டும். ஏன்? மறு அறிவித்தல் வரை ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டார்.

கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை தவிர்த்து. உரிய கூட்டங்கள் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வீடியோ

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.

குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று சபையில் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Posted in கொரனோ வைரஸ் மரண அறிவித்தல்

பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-

பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில்


கிளிநொச்சியை சேர்ந்த தமிழீழ செயல் பாட்டாளரும்,நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரும் , பிரபல தொழிலதிபருமான Fast Auto, Carrosserie), நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவி கமலா , என அழைக்க படும் கமலாம்பிகை அவர்கள் இன்று மரணமாகியுள்ளார்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார்

தமிழீழ தேசிய விடுதலை போராட்ட காலத்தில் ,கணவனுக்கு உறுதுணையாக நின்று பலம் சேர்த்த வீரமங்கை ,
தன்னலமற்று மக்களின் வாழ்வியல் நீதியின் வழியில் நேரே நடந்த திலகவதி, இன்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்று விட்டார்

அன்னாரது ஆறா துயரில் தவிக்கும் ,கணவன் ,மற்றும் பிள்ளைகளின் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .

மரண அறிவித்தல் ….!

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020

வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்

சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள்

உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும், கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல

உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மயூரி அவர்களின் பாசமிகு

மாமியாரும்,சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,

நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு 0033 662 3650 07
காமலேந்திரன் மகன் – 0033 6691 74390

இணைப்பு – இரண்டு ..எதிர் வரும் புதன் கிழமை அன்னாரின் இறுதி கிரியைகள் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மக்கள் அதிகம் கூடிட முடியாத நிலை உள்ளதால் உங்கள் இரங்கலை இங்கே தெரிவிக்கலாம்

ஏன் தவிக்க விட்டாய் …?

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள் click here

ஏன் தவிக்க விட்டாய் …?

பிரான்சில் கொரனோவால்
பிரான்சில் கொர
னோவால்