கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்
மறு அறிவித்தல் வரை கோப் குழு கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (17) அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (17) பிற்பகல் ஒரு மணிக்கு கோப் குழுவின் அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வௌ்ளிக்கிழமை ஜூம்மா இருப்பதால்
மரிக்கார் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ள முடியாது. ஆகையால் இந்த விடயத்தில் தலையிடுமாறு சபாநாயகரை பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.
பின்னர் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, மறு அறிவித்தல் வரை கோப் குழு குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.
கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்
அங்கு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு அந்த கோப் குழுக்கூட்டத்தை நடத்தியிருக்கவேண்டும். ஏன்? மறு அறிவித்தல் வரை ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டார்.
கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை தவிர்த்து. உரிய கூட்டங்கள் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
















