எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் (28) இன்று அதிகாலையும் (29) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் DIG ரவி செனவிரத்ன கைது

முன்னாள் DIG ரவி செனவிரத்ன கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனொருவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் நேற்று (27) சிறுவனுக்கு முச்சக்கர வண்டியினுள் வைத்து மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார்.

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை

செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு

கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள், படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல்

அட்டை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் ஆகியவற்றை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மண்டபம் பகுதியை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டன

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது

தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது

குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது

ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது

ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் ​கைது செய்துள்ளனர்.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார்.

அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது

சந்தேகநபர் 8 மாதங்களில் 21 ஓட்டோக்களை திருடியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

6 ஓட்டோக்களையும், ஓட்டோக்களின் மீதமுள்ள பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிரிபத்கொடையில், குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட

ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ATM இல் கொள்ளை மூவர் கைது

ATM இல் கொள்ளை மூவர் கைது

மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ATM இல் கொள்ளை மூவர் கைது

கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு

100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு 50 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு

யாழ். நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து 14 ஆம் திகதி சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

அதனை அடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை (14) திகதி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வீடியோ

https://www.youtube.com/@ETHIRINEWSLIVE
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது

மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட

நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர்.

மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது

அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடம் இருந்து 2,000 ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து

விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது

ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது

ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது

கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய கமாஸ் அமைப்பே சேர்ந்த உறுப்பினர்கள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு கைது .

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆடைகள் அகற்ற பட்டு ,மரண தணடனை வழங்க பட்டுள்ளது .

உள்ளே ஊடுருவி நின்று பாரிய தாக்குதலை நடத்தி, இஸ்ரேல் இராணுவத்தை முடக்கி, நாட்டையே பதற வைத்த ஆயுத தாரிகள் .

அவ்வாறான அந்த கொடியவர்களை நாம் கைது செய்து ,தண்டனை வழங்கி உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தமது உளவுத்துறை தோல்வியின் ஊடாகவே இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளதை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுள்ளது .

இஸ்ரேலுக்கு நடந்த இந்த சம்பவம் ,வரலாற்று வெற்றியாக ,இதனை அரபு நாடுகள் ,மற்றும் ஈரான் பலஸ்தீனம் கொண்டாடி வருகிறது .

காசா பகுதியில் மக்களை பட்டினி போட்டு இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்து வருகிறது .

அரபு நாடுகள் ஒன்றிணைந்து பொருட்களை அனுப்பிட நடவடிக்கை .இவ்வாறான காணொளிகள் பார்வைஇட இந்த இணையத்தை பார்வையிடுங்கள் .

விரைவில் பல காட்சிகள் இணைக்க படும்


#israel #hamas

வீடியோ

வாட்ஸாப் குழுவில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு

திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 06 வயது சிறுமி கொல்லப்பட்டு அவரது தந்தை படுகாயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சேதவத்தை பகுதியிலிருந்து காரில் பயணித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் கைவிடப்பட்ட காரை விசே் அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தந்தை படுகாயமடைந்தார். வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான 36 மற்றும் 65 வயதுடைய ஆதம் லெப்பை, மொஹமட் மின்ஹாஜ் மற்றும் செய்யது இஷாக் மன்சூர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசேட அதிரடிப்படை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் CI நதீக்க சில்வாவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள்

வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|


வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|

வெடித்து சிதறிய இராணுவம் முகாம் நடத்தி விட்டு தப்பி தப்பி ஓட முனையின்ர 2000 பேர் கைது ,இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள் கதறும் மக்கள் .

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதை வஸ்துடன் பெண் கைது .

போதை வஸ்துடன் பெண் கைது .

இலங்கை மன்னார் பேசலை கடல் பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கிலோகிராம் எடையுடய போதைவஸ்துடன் பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

பெண் மீது சநதேகம் கொண்டவர்கள் போலீசாருக்கு அழைத்து தெரிவித்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ,கைதான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .