வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் இலஞ்சம் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பாலியல் இலஞ்சம் உப பொலிஸ் பரிசோதகர் கைது

கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளா

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற முயற்சித்த OIC கைது

இலஞ்சம் பெற முயற்சித்த OIC கைது

75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

video

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே

வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்

பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக்கரை பகுதியில் நாத பட்ட தாக்குதல் ,சுற்றிவளைப்பில்
56 பால்ஸ்தீனியா மக்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

திங்கள்கிழமை காலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது குறைந்தது 56 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இருபத்தி ஒன்பது பேர் ஹெப்ரோன் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுற்றி வளைக்கப்பட்டனர், மற்றவர்கள் ரமல்லா, ஜெனின்,

நப்லஸ் மற்றும் பெத்லஹேமில் தடுத்து வைக்கபட்டுள்ளதக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .

போர் ஓய்வு பெற்றுள்ள இன்றைய நாளில் தமது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது

video

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

இன்று (26) அதிகாலை வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்கள் உள்ளிட்ட காரணங்கால் 138 பொலிஸ்

அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லித் அபேசேகர ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

இதன்போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், மன்னா, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் 40 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வட்டுக்கோட்டை சம்பவம் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

வட்டுக்கோட்டை சம்பவம் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை சம்பவம் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில்
ஒருவரான நாகராஜா அலெக்ஸ் என்பவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது

மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது

கொழும்பு– 7, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று ரவுடித்தனமாக நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ​பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ

சிப்பாயை கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது

நபர் ஒருவர் ரவுடித்தனமாக நடந்து கொள்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

பமுனுகம கிரிவெல ஹொரபவிட்ட, பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பனை வீட்டில்


தங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முதியவரை அடித்து கொலை ஒருவர் கைது

முதியவரை அடித்து கொலை ஒருவர் கைது


யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறிபிபிட்ட உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த வாய் பேச இயலாத 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது

இஸ்ரேலை கிழக்கு ஜெருசலம் பகுதியில் வைத்து மூன்று ஐ எஸ் உறுப்பினர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

இவர்கள் இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
நடத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்க படுகிறது

.இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது

கைதானவர்கள் வீடுகள் சோதனை செய்த பழுது பணம் மற்றும் பல தொலைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளது .


கைதானவர்கள் தமது பாணியில் விசாரணைக்கு
உள்ளக பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாடுகளை சுட்ட இருவர் கைது

மாடுகளை சுட்ட இருவர் கைது

மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை

வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு

கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.

மாடுகளை சுட்ட இருவர் கைது

இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை

(16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வீடியோ

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு

சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விமான நிலையத்திலோ அல்லது எங்கும் வந்தாலோ அவரை

கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (தலைவர்) நிஸ்ஸங்க பந்துல

கருணாரத்ன மற்றும் சமத் மொரைஸ் ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர் கொலை நால்வர் கைது

இளைஞர் கொலை நால்வர் கைது

தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொலிரூட் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் கொலை நால்வர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் 21 முதல் 24 வயதுகளுக்கிடைப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவருக்கு வெட்டுக் காயங்கள் காணப்பட்டமையினால் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடக மாலைதீவு நோக்கி பயணிக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவரது கைப்பையில் கைதுப்பாக்கி காணப்பட்டத்தை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .

.விசாரணிகளின் பின்னர் தற்போது அவர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற முக்கிய நபர் கைது

இலஞ்சம் பெற்ற முக்கிய நபர் கைது

இலங்கையில் 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு தொடேன்ற்து விளக்கமறியல் வைக்க நீதிமன்றம்,உத்தரவு .

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் , ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கி விட்டு மற்றைய வீட்டில்

மூதாட்டி வசித்து வந்ததுடன் , மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை கடற்படை முகாமில் மாலுமியை வெட்டிக் கொன்றவர் கைது

திருகோணமலை கடற்படை முகாமில் மாலுமியை வெட்டிக் கொன்றவர் கைது

திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றிய சக மாலுமி ஒருவரை திருகோணமலையில் தங்கியிருந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்த 42 வயதுடைய இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை வைத்தியசாலை பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் மாலுமியை வெட்டிக் கொன்றவர் கைது

திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு மாலுமிகள் தங்கியிருந்த விடுதியில் மது அருந்தியதாகவும், அப்போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது

பிக்குனி உட்பட அறுவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிக்குனி உட்பட அறுவர் கைது

பிக்குனி உட்பட அறுவர் கைது

சட்டவிரோத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டிய நகர எல்லையில் இருந்து புதன்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட பேரணியை தடுத்து

நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், பிக்குனி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சசுன ரகுமாவின் குளோபல் மன்றத்தின் அழைப்பாளர் பலாங்கொட காஷ்யப தேரர் மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

அந்த அமைப்புக்கள் மற்றும் தேசிய பிரஜைகள் ஆலோசகர் சங்கம் இணைந்து ‘சட்டவிரோத மின்சார அதிகரிப்பு எதிரான நடைபயணம்’ திவுலப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிக்குனி உட்பட அறுவர் கைது

அப்போது, ​​ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பாலித அமரதுங்க, பேரணியால்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், பேரணியை நிறுத்துமாறும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் கலைந்து செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவை மீறி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்தே, இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.