Tag: கைது
பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது
பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது
பிரிட்டனில் பங்கு சந்தை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவித்து மிக பெரும் இழப்பை ஏற்படுத்த முனைந்த பலஸ்தீனத்தை சேர்ந்த ஆறு பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
இவ்வாறு கைதானவர்களில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் என தெரிவிக்க பட்டுள்ளது .
திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தை குழப்பும் நோக்குடன் இவர்கள் செயல்பட திட்டமிட்ட நிலையில், லீவர்போல் ,கிழக்கு லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 போதை மாத்திரைகளும்
இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
12 இந்திய மீனவர்கள் கைது
12 இந்திய மீனவர்கள் கைது
நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 இந்திய மீனவர்கள் கைது
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த
வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை
மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 1250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது
நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது
சிங்கள நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக்
குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத அலைபேசிககளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 அலைபேசிககளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் அலைபேசிககளை எடுத்துச்
செல்லும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது,
கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
1182 பேர் சந்தேக நபர்கள் கைது
1182 பேர் சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1182 பேர் சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 3 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெரோயின் 287 கிராம்
ஐஷ் 246 கிராம்
கஞ்சா 5 கிலோ 400 கிராம்
கஞ்சா செடிகள் 19,052
மாவா 104 கிராம்
ஏஷ் 95 கிராம்
போதை மாத்திரைகள் 119
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது
இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது
இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ் அமைப்பினர் ,
போர்க்களத்தில் நடந்த திடீர் திருப்பம் .
71 இஸ்ரேலிய போர் வாகனங்கள் அழிப்பு,
பெரும் தாக்குதல் நடத்த முற்பட்ட 33 மொசாட் கைது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது
நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.
இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் பட்டியலிட்டுள்ள சந்தேகநபர்களின் பட்டியலில் 4,665 பேரில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
மேற்படி பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கைப் பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 21 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது
- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி
போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி
தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேகநபரை பொலிசாரால் கைது செய்ய முடிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வத்தளை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (23) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் சந்தேக நபர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதித்த போது, அவரிடம் இருந்து 04 கிராம்
150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

































