மாடுகளை சுட்ட இருவர் கைது
மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை
வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.
மாடுகளை சுட்ட இருவர் கைது
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை
(16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா
- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு
- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்
- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
















