மாடுகளை சுட்ட இருவர் கைது
மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை
வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.
மாடுகளை சுட்ட இருவர் கைது
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை
(16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு
- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்
- பெட்ரோல் விலை குறைப்பு
- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு
- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
















