Posted in உலக செய்திகள்

எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்

துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள

,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .

கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி

இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .

விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்

தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

சிரியாவில் எண்ணெய்
சிரியாவில் எண்ணெய்
    Posted in உலக செய்திகள்

    குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்

    குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்

    ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் தொடர் போரினால் அந்த மண்ணில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் .

    இவ்வாறு கடந்த 90 நாட்களில் சுமார் ஐநூறு பேர் பலியாகியும் மேலும் 1,293 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்கள் ஐம்பதுக்கு மேற் பட்டவர்கள் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் காண படுகின்றனர்

      பல நாட்டு படைகள் ,மற்றும் அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் போராடி வருகின்றனர் .

      இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்து வருகின்றனர் .


      முடிவில்லாது தொடர்ந்து நீண்டு செல்லும் இந்த போரினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      குண்டு தாக்குதல்களில்
      குண்டு தாக்குதல்களில்
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

          பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

          பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .


          இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன

          குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது

          இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

          மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது

          தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

          பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
          பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

          கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு

          பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.

          அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்

          தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள

          திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்

          கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
          இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

          சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு

          பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்

          தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்

          மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.

          ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்

          தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது

          மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்

          பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய

          குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்

          பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.

          இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்

          இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை

          பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

          இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்

          தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்

          மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க

          உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு

          தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்

          சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


          பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.

          அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக

          இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு
          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு

          Posted in உலக செய்திகள்

          ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது

          ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது

          ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்

          தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்

          பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

          மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்

          தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,


          அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

          குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

          இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட சுமார் 39 பேரிடம் இலங்கை

          குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

          மேலும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன ,ஆனால் குற்ற சட்ட பட்ட முக்கிய முஸ்லீம் முன்னாள்

          அமைச்சர்கள் இதுவரை விசாரணைகளுக்கு உட்படுத்த படவில்லை என்பது குறிப்பிட தக்கது