Tag: ஓமந்தை
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி ,ஓமந்தை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரினை , யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்தில் சிக்கியது.
இதன் பொழுதே குருக்கள் வயது 52 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த நிலையில் மூவர் பலமான காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க .
இலங்கையில் கூலிக் குழுக்கள் டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி வீதி விபத்து என்ற முறையில் ,பிடிக்காத பலரை போட்டு தள்ளி வருகின்ற செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்று இருக்குமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில கூலி குழுக்களினால் இந்த டிப்பர் வாகனத்தின் மூலம் ,பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகிறது.
அதன் ஒரு அத்தியாயமாக இந்தச் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடிய சந்தேகத்தை இது வெளியிட்டுள்ளது.
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்

- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்

- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











