Tag: ஊரடங்கு
கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க
,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன
மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விடுக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது அத்து மீறி வெளியில் உலாவிய 1,599 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்களுக்கு ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட
பட்டுள்ளதுடன் அவர்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
மேலும் 14 நாட்களுக்குள் குற்ற பணம் செலுத்த பட வேண்டும், தவறின்
நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார்கள் என குறிப்பிட பட்டுள்ளது

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்
வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது
கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய
முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது
மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து
கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தற்சமயம் தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும்
யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில்,
பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அமுலுக் வரும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20
திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்
மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்
கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற
பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை
வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு
அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு கண்டி ,யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்து அமுலில்
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா,
களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு
சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.
இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 செவ்வாய் காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி
முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்
மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்
கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்
கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற
பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும்
தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை
வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக
வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி
பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள
பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு
உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்
அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.







